25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


ரசம் சுவையாக இருக்க ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரசம் சுவையாக இருக்க ....

கத்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு  சுவையும் கூடும்.

முருங்கைக்கீரையைப் பொரியல் செய்யும்போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால், கீரையின் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்; கீரையும் ருசிக்கும்,

மல்லி பூ பத்து நாள் ஆனாலும் மலராமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் மூடி போட்ட பாக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் பேப்பர் வைத்து எந்த பூவாக இருந்தாலும் சரி மல்லி ,முல்லை, பிச்சி பூ இப்படி வைத்து பிரிட்ஜில் வைத்து பாருங்க பூ அப்படியே பத்து நாள் ஆனாலும் மலரவே மலராது

 சாம்பார் கொதித்த பின் வெந்தயத்தை வறுத்து பொடி பண்ணி தூவி | இறக்கினால் சுவையான கல்யாண அய்யர் வீட்டு சாம்பார் போல் தெருவே மணக்கும்

ரசம் சுவையாக இருக்க கொஞ்சம் துவரம் பருப்பு வேக வைத்த தண்ணி, சீரகம், மிளகு, வர மல்லி, கருவேப்பிலை போட்டு மிக்சியில் ஒரு சுத்து சுற்றி , பூண்டு போட்டு ஒரு சுத்து சுற்றி இறக்கி, தாளிக்கும் போது கடுகு ,வெந்தயம், வரமிளகாய் போட்டு தாளித்து, தக்காளி புளி கரைசல் ஊற்றி, நுரை வந்ததும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தூவி பெருங்காய தூள் சேர்த்து இறக்கினால் ரசம் ரெடி .இறக்கி வைத்து உப்பு சேர்க்கவும். இல்லாவிட்டால் ரசம் கடுத்து போய் விடும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News