25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வயது முதிர்ச்சியின் காரணமாக  முகச்சுருக்கத்தை தடுக்கும் ஃபேஸ் க்ரீம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயது முதிர்ச்சியின் காரணமாக முகச்சுருக்கத்தை தடுக்கும் ஃபேஸ் க்ரீம்

வயது முதிர்ச்சியின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.ஒருசிலருக்குஇளம்வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். எந்த வயது சுருக்கமாக இருந்தாலும் அந்த முகச்சுருக்கத்தை நீக்கி இளமையாக பார்த்துக் கொள்ள  உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீம்.

முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து,வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இந்த ஆரஞ்சு பழத் தோலை மட்டும் துருவி,ஒரு கேரட்டைதுருவி எடுத்துக் கொள்ளுங்கள்.. இவை இரண்டையும் எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் போட்டு, ஆறு பிரியாணி இலையை பொடி பொடியாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணையும், நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த கண்ணாடி பவுலை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் இந்த பவுலை வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.

குறைந்த தீயில்40 நிமிடம் இருக்க வேண்டும். பிறகு இதை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த எண்ணெயை ஃப்ரீசரில்வைத்து விட வேண்டும். அது கிரீம் பதத்திற்கு மாறிவிடும். இப்பொழுது இந்த கிரீமை எடுத்து முகத்தில் இரவு படுக்க செல்வதற்கு முன் தடவுவதன் மூலம் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆரஞ்சு பழத்தோல் வயது முதிர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் முக வறட்சியை நீக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.ஒருமுறைஇந்தக்ரீமைஉபயோகப்படுத்தினாலேயே உடனடியாக முகம் மிகவும் மிருதுவாக தோன்றுவதை நம்மால் கண்கூடாக காண முடியும்

முகச்சுருக்கமே வயது முதிர்ச்சியை காட்டக்கூடிய ஒரு காரணியாக திகழ்வதால் இந்த கிரீமை பயன்படுத்தி முக சுருக்கத்தை நீக்கி என்றும் இளமையாக தென்படுவோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News