25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


NIT-யில் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணின் மகள் ஆர்த்தி  தேர்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

NIT-யில் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணின் மகள் ஆர்த்தி  தேர்வு

 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒய்யம்புலி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் – கவிதா தம்பதியின் மகள் மாற்றுத்திறனாளியான ஆர்த்தி சேத்தூர் சேவுகபாண்டியன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயின்று அங்குள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

ராஜபாளையம் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணின் மகளும் மாற்றுத்திறனாளி மாணவியுமான ஆர்த்தி அரசு  பள்ளியில் பயின்ற

ஜேஇஇ (JEE) தேர்வில் 58,52% மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று திருச்சி NIT கல்லூரியில் உற்பத்தி பொறியாளராக படிக்க

தேர்வாகியுள்ளார். 

‘‘ஆர்த்தியின் தாத்தா சிறு வயது முதல் அவரை பராமரித்து ஊக்கமளித்து வந்தார். அவரது ஆசையை ஆர்த்தி நிறைவேற்றியுள்ளார். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடு அவருக்குத் தெரியாத அளவிற்கு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டேன். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகள் ஆர்த்தி பெற்றுள்ள வெற்றி மிகுந்த பெரும் மகிழ்ச்சியை தருகிறது’’ என்று ஆர்த்தியின் தாய் கவிதா  கூறியுள்ளார்.

மாணவி ஆர்த்தி மாற்றுத்திறனாளியாக பல்வேறு கஷ்டங்களை சந்தித்த எனக்கு, ‘‘நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றதே எனது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது., யுபிஎஸ்சி தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News