25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


ஆவின் நிறுவனம் பனை பொருட்கள் விற்பனையிலும் களமிறங்க உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆவின் நிறுவனம் பனை பொருட்கள் விற்பனையிலும் களமிறங்க உள்ளது

ஆவின் நிறுவனம் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து, பனை பொருட்கள் விற்பனையிலும், களமிறங்க உள்ளது.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.பனை பொருட்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி, சுக்கு காபி பவுடர், பனங்கருப்பட்டி சுக்கு மிட்டாய் மட்டுமின்றி, தேன் விற்பனையிலும் களமிறங்க, ஆவின் நிர்வாகம் தயாராகி வருகிறது.

இதுகுறித்து ஆவின் ஏஜன்ட் ஒருவர் கூறியதாவது:பனை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. எனவே, பனை பொருட்கள் விற்பனையில் இறங்கினால், பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கும்; அரசிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று ஆவின் நிறுவனம் கருதுகிறது.பனை பொருட்கள் விற்பனையில், ஆவின் கவனம் செலுத்துவது நல்லது தான். அதே நேரம், அவை நிர்வாக நலன், விவசாயிகள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பிரச்னையை திசை திருப்பும் முயற்சியாக அமைந்து விடக்கூடாது,இவ்வாறு அவர் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News