25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நடிகர் சரத்பாபு  மறைந்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நடிகர் சரத்பாபு மறைந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்400 படங்கள் வரை நடித்துள்ள இவர் தமிழில் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சரத்பாபு. அப்படத்திற்கு பிறகு முத்து, அண்ணாமலை போன்ற ரஜினியின் முக்கியமான படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.. சரத்பாபு செப்சிஸ் நோயின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா மக்கள் மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி அதிகம் பேசி வருகிறார்கள்.

72வயதாகும் நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மே22ம் தேதி உயிரிழந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது, இங்கே தகனம் செய்யப்பட்டது..சரத்பாபு அவர்கள் முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிய ,தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக எம்.என்.நம்பியாவின் மகளான சினேகாவை மறுமணம்

 செய்தார், ஆனால்2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்..அவர்களின் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.இவரது மறைவிற்கு பிறகு சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாக, “அட நம்பியாரின் மருமகனா இவர்” என ரசிகர்கள் புதிய செய்தியாக பார்க்கிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News