25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


நான்கு ஆண்டு காலமாகவீட்டில் இருந்துபணிபுரிந்து, அலுவலகத்துக்குவந்து பணியாற்ற85% ஊழியர்களின் மனநிலைசவால் மிக்கதாகஇருக்கிறது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நான்கு ஆண்டு காலமாகவீட்டில் இருந்துபணிபுரிந்து, அலுவலகத்துக்குவந்து பணியாற்ற85% ஊழியர்களின் மனநிலைசவால் மிக்கதாகஇருக்கிறது

பல்வேறு தொழில்நுட்பநிறுவனங்களும் ஊழியர்களைமேலாண்மை செய்வதில்பெரும் சவால்களைஎதிர்கொண்டிருக்கின்றன. நான்குஆண்டு காலமாகவீட்டில் இருந்துபணிபுரிந்து வந்தவர்களைஅலுவலகத்துக்கு வந்துபணியாற்ற செய்யவேண்டும், அலுவலகத்தில்அவர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் பணியாற்றும் சூழலை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்டபல சவால்கள் இருக்கின்றன.

தற்போது பல்வேறுதுறைகளிலும் செயற்கைநுண்ணறிவு வேகமாககால் பதித்துவருகிறது. குறிப்பாகதொழில்நுட்பத் துறைகளில்செயற்கை நுண்ணறிவின்ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் மைக்ரோசாப்ட்தலைமை செயல்அதிகாரியான சத்யநாதெல்லா மைக்ரோசாப்ட்உள்ளிட்ட பலநிறுவனங்கள் மிகப்பெரியஉற்பத்தி திறன்முரண்பாட்டை(productivityparadox) எதிர்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பெரும்பாலானமேலாளர்கள், ஊழியர்கள்தங்களுடைய வேலையைகுறைத்து வருவதாககூறுகிறார்களாம். அதேசமயம் 

ஊழியர்களிடம்கேட்கும்போது தாங்கள்நீண்ட நேரம்அலுவலகத்திற்காக வேலைசெய்து சோர்வடைவதாகதெரிவிக்கிறார்களாம். லிங்குடின்தளத்தின் துணைநிறுவனர் ரீட்ஹாஃப்மனுடன் சத்யநாதெல்லா நடத்தியகலந்துரையாடலில் இந்ததகவலை வெளியிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் போதுரீட் ஹாஃப்மன்கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணியிடங்களில் நெகிழ்வுத்தன்மை எப்படி

இருக்கிறது? வீட்டில்இருந்து பணிபுரியும் ஊழியர்களைமீண்டும் பணியிடங்களுக்கு கொண்டு வருவது எவ்வளவுசவால் மிக்கதாகஇருக்கிறதுஎன்றகேள்வியைஎழுப்பினார்.


அதற்கு பதில்அளித்த மைக்ரோசாப்ட்தலைமை செயல்அதிகாரியான சத்யநாதெல்லா"ஊழியர்களின் செயல்திறன் தொடர்பானதரவுகளை நாம்விரிவாக ஆய்வுசெய்தோம். அதில்மைக்ரோசாப்ட் உள்ளிட்டபல்வேறு நிறுவனங்களிலும் தற்போது உற்பத்தி திறன்முரண்பாடு இருக்கிறது. கிட்டதட்ட85% மேலாளர்கள்தங்களுக்கு கீழ்பணிபுரியக்கூடிய ஊழியர்கள்தங்களுடைய வேலையைகுறைந்து விட்டதாகதெரிவிக்கின்றனர்.ஆனால்85% ஊழியர்கள்தங்கள் நிறுவனத்திற்காக கடினமாக உழைப்பதாகவும் இதனால்தாங்கள் விரைவிலேயேசோர்வடைவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த உற்பத்தி திறன்முரண்பாடு மைக்ரோசாஃப்ட்உள்ளிட்ட பல்வேறுநிறுவனங்களுக்கும் பெரியபிரச்சினையாக இருக்கிறது" என கூறுகிறார்.

 மேலும் இந்தபிரச்சனையை தீர்க்கவேண்டும் எனில்நிறுவன தலைவர்கள்இலக்குகளை எவ்வாறுஇணைப்பது என்பதைகண்டுபிடிக்க வேண்டும்என கூறியுள்ளார். அதாவது தலைவர்களாக நீங்கள்பார்க்க விரும்பும்முடிவு என்னஎன்பதை ஊழியர்களுக்குதெளிவுபடுத்துவது எப்படிஎன்பதை நாம்கற்றுக் கொள்ளவேண்டும் எனசத்ய நாதெல்லாகூறியுள்ளார். இவற்றைஎல்லாம் அடிப்படையாககொண்டு தான்ஊழியர்களுக்கான விதிமுறைகளைஉருவாக்க வேண்டும்என்றும் அவர்கூறியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News