25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


இராஜபாளையம் ஊருணிகளில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஊருணிகளில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இராஜபாளையம் நகராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் 50 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊருணிகள் உள்ளன. நகரை ஒட்டிய பெரிய கண்மாய்களான புளியங்குளம், பிரண்டைகுளம், கொண்டநேரி, பெரியாதிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் முழு அளவிலும் சிறிய அளவிலான ஊருணிகள் ஆகாய தாமரை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.இதனால் பறந்து விரிந்த கண்மாயின் தண்ணீரை வெளியே தெரியாதபடி மறைத்து பசுமை போர்த்தியது போல் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் வளரும் மீன்கள் உள்ளிட்ட உயிர்கள் வாழ்வதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் கொசுப்புழு உற்பத்தி கேந்திரமாக மாறி விடுகிறது.

தண்ணீரும் விரைவில் ஆவியாவதுடன் கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆகாய தாமரையின் கிழங்குகள் அடைத்துக் கொண்டு தண்ணீர் தேங்க முடியாமல் செய்கிறது. மேலும் மடைகளில் தண்ணீர் வெளியேற சிக்கல் உண்டாகிறது. இதே நிலை தொடர்ந்தால் அனைத்து நீர் நிலைகளுக்கும் ஆகாய தாமரை பரவி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சாகுபடிக்கு தடை ஏற்படுத்தும் ஆகாய தாமரையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News