25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

எந்திரன் படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அதற்கு முன் அவருடன் இணைந்து நடிக்க4 பட வாய்ப்புகளை நிராகரித்தார். ஐஸ்வர்யா ராய்1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம்.1997 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கோலிவுட்டில் நுழைந்தார்.தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்தார். அதுவும் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்து இருந்தார். கண்டு கொண்டானே கண்டு கொண்டானே, குரு, ராவணன், எந்திரன் படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். 

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்து உள்ளார். ஷங்கர் இயக்கிய இந்த மெகா படத்தில் சனா என்ற கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்தார். ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டாரின் விருப்பமான நடிகைகளில் ஒருவர், எனவே அவருக்கு ஜோடியாக நடிக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்.எந்திரன் மூலம் அது நிறைவேறியது. எந்திரனுக்கு முன், ரஜினிக்கு ஜோடியாக நான்கு படங்களில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்குமாறு அணுகினர். பல்வேறு காரணங்களால் ஐஸ்வர்யா ராய் அந்த நான்கு படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த நான்கு படங்களின் பெயர்களை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகிய முதல் படம் படையப்பா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்யை நாயகியாக நடிக்க இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முடிவு செய்து இருந்தார். ஆனால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து அவர் பாபாவின் வாய்ப்பை நிராகரித்தார். அது மனிஷா கொய்ராலாவுக்குச் சென்றது.பின்னர் பி.வாசு இயக்கிய சந்திரமுகி, ஷங்கர் இயக்கிய சிவாஜி ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் மறுத்த இந்த நான்கு படங்களில் மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் என்பது  குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News