25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மனைவி சொல்லை தட்டாத ஏ.ஆர்.ரஹ்மான்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனைவி சொல்லை தட்டாத ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஒரு பாடலுக்கு அவர் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் தலைமையிலான மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டுகிறார்கள். இவ்வளவு வருமானம் இருந்தும் ஸ்டைலிஸ்ட் கூட இல்லாத நபர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. கடந்த15 வருடங்களாக பல பொது நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் சாய்ரா பானு தேர்ந்தெடுக்கும் ஆடைகளை அணிந்து தான் பங்கேற்று வருகிறார் ரஹ்மான்.அவர் எதை அணியச் சொல்கிறாரோ, அதையே தான் அணிந்துக் கொள்வதாக ரஹ்மான் கூறுகிறார். அவர் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக என்னுடைய ஆடைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறார். அவர், என்றார் ரஹ்மான்.

எல்லாக் கிரெடிட்டும் அவருக்கே சொந்தம் எனும் ரஹ்மான், தனது மனைவி பரிந்துரைக்கும் எந்த ஆடையும் தனக்கு பொருந்தவில்லை என்று தான் உணர்ந்ததில்லை என்றும், அணிய முடியாது என்று அவரிடம் சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார்.என் மனைவி ஓரளவு பாரம்பரியமானவர். பெரும்பாலும் கருப்பு நிறத்தை தான் விரும்புவார். நான் அதை மற்றும் அவ்வப்போது மாற்ற முடியுமா என்று கேட்பேன். அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றார். ரஹ்மானுக்கும் சாயிராபானுவுக்கும்1995ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ரஹ்மான் என 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள்.

இந்திய திரைப்பட இசை உலகின் ஹாட் மேன் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்'மெட்ராஸ் மொஸார்ட்’ போன்ற பல அடைமொழிகளால் குறிப்பிடப்படுகிறார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருதை வென்று, இசை உலகிற்கு பெருமை சேர்த்த ரஹ்மான் தான், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ். ஏ.ஆர்.ரஹ்மானின் அன்பு மனைவி சாய்ரா பானு தான், அவரது ஒப்பனையாளர். வேலையை அனுபவித்து செய்கிறார்  என்றார் ரஹ்மான்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News