25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, குழந்தைகளுக்கு எதிரான புகார்களை அனுப்பி வைக்க 1,37,000 அஞ்சல் அட்டைகள் (Post card) அச்சிடப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, குழந்தைகளுக்கு எதிரான புகார்களை அனுப்பி வைக்க 1,37,000 அஞ்சல் அட்டைகள் (Post card) அச்சிடப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகளின் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, குழந்தைகளின் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  அடங்கிய 1,37,000 அஞ்சல் அட்டைகள் (Post card)  அச்சிடப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் அட்டையில் குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு, குழந்தைகள் சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகள்  ஏற்பட்டால் அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு  எழுதி அனுப்பி வைக்கும் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News