25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில்  விழிப்புணர்வு பேரணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசபந்து மைதானத்தில்  (14.11.2025) தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14“-யினை முன்னிட்டு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் - என் உரிமை (My Day, My Rights)” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று 14.11.2025 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,  “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” – “என் நாள் - என் உரிமை (My Day, My Rights)”   என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்தால் உடனடியாக குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். சாதி மன இன வேறுபாடுடின்றி அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும். பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிபடுத்த வேண்டும்.

  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் அவர்களது அணுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.குழந்தைகள் தொடர்பாக பிரச்சனைகள் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பாதுகாப்பான குழந்தைப்பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தைநேய செயல்பாடுகளில் அனைவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

                        இந்த பேரணியில் அரசு அலுவலர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு,  குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.மேலும், இப்பேரணியில் 1098 - குழந்தைகளுக்கு சிறப்பு இலவச உதவி எண் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News