25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுப் பொருள் முல்தானி மட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அழகுப் பொருள் முல்தானி மட்டி

,எண்ணெய் பசை சருமம், முகப்பருவால் பொலிவை இழந்த சருமம், வறண்ட சருமம் என அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது முல்தானி மெட்டி.

 ஃபுல்லர்ஸ் எர்த் என்றழைக்கப்படும் முல்தானி மட்டி, பலரது விருப்ப தேர்வாகவும் இருக்கிறது.

சருமத்திற்கு இதை பயன்படுத்துவதால் எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

குறிப்பாக முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகளிது, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை ,தழும்புகள் பருக்களை அகற்றவும் செய்கிறது.

முல்தானி மட்டியை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள துளைகளையும் அழுக்குகளையும் நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தி எண்ணெய் வடியும் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறது.

முல்தானி மட்டியை தண்ணீரில் குழைத்தோ அல்லது சந்தனம், ரோஸ் வாட்டர் போன்றவற்றுடன் கலந்தோ முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம்.

வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செய்து வரும்போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை வடியும் பிரச்சனை குறையும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும், வாரம் இருமுறை இதனை செய்து வரலாம்.

முகத்தை பளபளப்பாக்க முல்தானி மட்டியுடன் சேர்க்க வேண்டியவை..

,முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறுமுல்தானி மட்டி மற்றும் முட்டை வெள்ளைக்கரு கலவை.

முல்தானி மட்டி மற்றும் இளநீர் கலவை.
முல்தானி மட்டி மற்றும் கேரட் கலவை.
முல்தானி மட்டி மற்றும் பப்பாளி கலவை.

முல்தானி மட்டி மற்றும் சந்தன பவுடர் கலவை.

முல்தானி மட்டி மற்றும் தேன் கலவை.
முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலவை,

அழகை அதிகரிக்க உதவும்  அற்புதமான அழகுப் பொருள் முல்தானி மட்டி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News