25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


இந்தியாவின்மிகவும் ஏழ்மையான மாநிலம்  பீகார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின்மிகவும் ஏழ்மையான மாநிலம்  பீகார்

வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. ஐநா மதிப்பீட்டின்படி, 2005-2006 மற்றும்2019,2021க்கு இடையில், இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார்41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று ஐநா சபை கூறியுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்(UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாடு(OPHI) ஆகியவற்றால் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் மாநிலங்கங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருமை நிலைMPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படிவறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. அடுத்து ஜார்கண்ட், அதனை தொடர்ந்து உத்தர பிரதேசம்மற்றும் மத்திய பிரதேசம் உள்ளது. 

இவற்றுக்கு அடுத்த இடத்தை மேகாலயா பிடித்துள்ளது. இந்நிலையில்51.9% வறுமை விகிதத்துடன் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக பீகார் உள்ளது. மேலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள்3 மற்றும்4 வது இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில் கோவாவில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதே போல ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வறுமை குறைந்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலே கேரளாவில் தான் வறுமை குறைவாக உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில்0.71% மக்கள் மட்டுமே வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதேபோல கோவாவில்3.76%, சிக்கிமில்3.82%, தமிழ்நாட்டில்4.89% மற்றும் பஞ்சாபில்5.59% வறுமை நிலவுகிறது. நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலமாக பீகார் உள்ளது. குறிப்பாக தாய்மார்களின் ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News