25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >> மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.   >> மும்பையில் நடைபெற்றதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சாதனை >> அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது >> இந்திய சமத்துவ நாயகன் R.சங்கர் கணேஷ் 21-ம் ஆண்டு தொடர் சேவையாளர். >>


கற்றாழை பூ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கற்றாழை பூ

கற்றாழை மிக சிறந்த மூலிக மகத்துவம் நிறைந்த செடி ஆகும். இதில் பூக்கும் பூக்களுக்கும் அதே மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. 

கற்றாழை பூ உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் உடற்சூட்டின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல், நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க இதன் பூ உதவி புரிகிறது. இந்த பூவை காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான போது சிறிது நீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் அறவே நின்று விடும்.

இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடுகிறது. கற்றாழை பூ உடலை சோர்வு அடையாமல் சுறுசுறுப்பாக வைக்கிறது என்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன.

கற்றாழை பூ உடலில் உள்ள நச்சுக்களை மட்டும் அல்ல, காற்றில் உள்ள நச்சுக்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து ,நம்மை காற்றின் மூலம் பரவும் பல தொற்றுக்களில் இருந்து காக்கிறது.

கற்றாழை பூவில் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது. இதனால் இது வயிற்றில் ஏற்படும் அல்சர் எனப்படும் புண் மற்றும் கர்ப்பப்பையில் உருவாகும் புண்களை அழிக்கும் தன்மை கொண்டது வயிற்று புண் உள்ளவர்கள் பூவை அரைத்து பாலுடன் வைத்து குடிக்கலாம்.

தலையில் உண்டாகும் பொடுகு பேன், ஆகியவற்றை அடியோடு ஒழிக்கிறது. இந்த பூவை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள தலைமுடியும் நீண்டு வளரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News