25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்  காப்போம்  என்ற திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டம்

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்  காப்போம் திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 3500 ஏக்கர் பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர்க்கு 20 கிலோ தக்கைப் பூண்டு  விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டில் தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்  காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் இனம் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது உள்ள தொழில் முறை வேளாண்மையில் ஒரே பயிரை சாகுபடி செய்வதாலும் மண்ணிலிருந்து சத்துக்களை அதிக உறிஞ்சும்  வீரிய ஒட்டு ரக பயிர்களை சாகுபடி செய்வதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.இது தவிர உற்பத்தி அதிகரிப்பதற்கென அதிக அளவில் இராசயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி மருந்துகள், போன்றவற்றை பயன்படுத்துவதால்  மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும்,  நலமும் குன்றி அதிக அளவில் நிலங்கள் களர்; உவர், அமில  நிலங்களாக மாறியுள்ளன.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை  ஏற்படும். மண்வளத்தை பேணி காக்கவும், மக்கள் நலம் காக்கும் விதமாகவும் உயிர்ம வேளாண்மை அதிகரித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதி உடையவர் ஆவர். விவசாயிகள் நேரடியாக உழவன் செயலில் பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை எளிதில் பெறலாம். விவசாயிகள் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News