25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >>


தினமும் 1 -தேனில் ஊற வெச்ச நெல்லிக்காய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினமும் 1 -தேனில் ஊற வெச்ச நெல்லிக்காய்

தேன் மிகச்சிறந்த அருமருந்து என்பதால்தான், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் இந்த தேனில் ஊறவைத்து சாப்பிடப்படுகிறது. 

அதிக அளவிலான வைட்டமின் C, ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த நெல்லிக்காய், நோய்த்தொற்றுகள் நம்மை எளிதில் அண்டவிடாமல் தடுக்கிறது. ஆப்பிள்களைவிட சிறந்த பண்புகளை கொண்டிருக்கும் நெல்லிக்காய், ஹீமோகுளோபின் பிரச்சனையை சரி செய்யக்கூடியவை. ரத்தம் சுத்தமாகும்.. ரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். 

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பட்டு வந்தால், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். நெல்லிக்காய் + தேன் இரண்டுமே ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன.

கண் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை மிகவும் நல்லது.. இதனால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண் சிவந்து போகுதல், போன்றவை நீங்கிவிடும்..

 கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்களுக்கு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் அற்புதமான மருந்தாகும். வெள்ளைப்படுதல் தொந்தரவு உள்ள பெண்களும் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை தீர்வதுடன், அதிகப்படியான மாதவிலக்கு உள்ளிட்ட கருப்பை சம்பந்தமான பாதிப்புகளும் நீங்கிவிடும்.. 

நெல்லிக்காயில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலுக்கு ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல், அஜீரணமும் நீங்கும்.. நெல்லிக்காய், தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியவை. மேம்படுத்த உதவும். இதனால் தோல் தொந்தரவுகள் நெருங்குவதிலலை.

, தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.. அதுமட்டுமல்லாமல் சிலருக்கு நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் அளவாகவும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது பாதுகாப்பானது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News