25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பேரீச்சம்பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பேரீச்சம்பழம்.

உடலுக்கு தேவைப்படும் அனைத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள் கிடைக்க தினமும் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பேரீச்சம்பழங்களின் தாயகம் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தாயகமான பெர்சியா ஆகும். தொடர்ந்து ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இன்று உலகம் முழுவதும் பரவியது. வெப்ப மண்டல பகுதிகளில், குறிப்பாக வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகம்விளைவிக்கப்படுகிறது. 

வறண்ட வெப்ப மண்டல மண்ணில் விளையும் பேரீச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. பேரீச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்-பி6, நார்ச்சத்து போன்றவை உள்ளன. குழந்தைகளுக்கு தினமும்ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்கள் கொடுத்து வந்தால் சுறுசுறுப்பாகவும், நல்ல நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News