25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


குடும்ப அட்டை வகை மாற்றம் தன்னார்வலர் சிறப்பு முகாம் 15.02.2025 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடும்ப அட்டை வகை மாற்றம் தன்னார்வலர் சிறப்பு முகாம் 15.02.2025 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை அற்ற அரிசி ,குடும்ப அட்டைகள் (NPHH(R))  ஆகியவற்றை விருப்பமுடைய தன்னார்வலர்கள், 15.02.2025 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெறும் சிறப்பு முகாம்களில், விண்ணப்பப் படிவங்கள் கொடுத்து முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டையாகவோ (NPHH-S) அல்லது எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளாகவோ (NPHH-NC) மாற்றலாம். விருப்பமுடைய, தன்னார்வலர்கள் இம்முகாமை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் பயன்பாடு சரியான முறையில் தேவைப்படும் மக்களுக்கு சென்றைடைய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News