வெந்தயக் கீரை சாதம்.
தேவையான பொருட்கள் -
அரிசி ஒரு கப், வெந்தயக்கீரை 3 கட்டு,
வெங்காயம் 1.
தக்காளி 2,
இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் கால்டீஸ்பூன்,
எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன்,
சீரகம் கால் டீஸ்பூன்,
பட்டை 1 துண்டு,
லவங்கம் 1 துண்டு, உப்பு தேவைக்கு.
செய்முறை:
அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து
உதிர் உதிராக வேக வைத்தெடுங்கள். கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். வெங்காயம்,
தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்த்து சூடாக்கி பட்டை,
லவங்கம், சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து ,பச்சை வாடை
போக வதக்குங்கள். பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயம், சிறிதளவு உப்பு,
மஞ்சள் தூள், சேர்த்து வெங்காயம் வதங்கும்வரை வதக்கி, பிறகு தக்காளி, மிளகாய்தூள் சேர்த்து
வதக்குங்கள். பிறகு சாதம், உப்பு சேர்த்து கிளறி ,குக்கரில் நேரடியாக கொட்டி, மிகமிகக் குறைந்த
தீயில் பதினைந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெந்தயக் கீரை சாதம் தயார்.
தயிர் பச்சடி, உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம் போன்றவற்றுடன் சாப்பிட அபாரமாக
இருக்கும்.
0
Leave a Reply