25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நிதி அறிவும், சிந்தனை வளமும்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிதி அறிவும், சிந்தனை வளமும்

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்நிதி கல்வி அறிவு (Financial Literacy) நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக Rtn.பார்த்தசாரதி அவர்கள் கலந்து கொண்டார். பள்ளித் தாளாளர்திருமதி ஆனந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்ற. பின் விருந்தினருக்குநினைவுப்பரிசு கொடுத்து சிறப்பு சேர்த்தார். பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் Rtn. பார்த்தசாரதி அவர்களை அவையினருக்குஅறிமுகம் செய்தார்.திரு பார்த்தசாரதி அவர்கள் தமது உரையில் பல விஷயங்களை மிகத்தெளிவாக விளக்கிக் கூறினார். “உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்என்ன செய்வீர்கள்?” என வினவ ஒவ்வொருவரும் தத்தம் பதில் களை கூறினர்.பண மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்று கேட்கஅதற்கு மாணவன் தங்கப்பாண்டி, பண மதிப்பு குறைந்து கொண்டே வருகிறதுஎன்பதை அழகாக, ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கினான். அதாவது தான்எல்கேஜி படிக்கும் பொழுது ஸ்கூல் Bag விலை ரூபாய் 200 என்றும் தற்போதுஅதன் விலை ரூபாய் 1000 என்றும் கூறினான். இதுவே பணமதிப்புகுறைந்ததற்கான அடையாளம் என்றான். தன்னுடைய விளக்கக் காட்சிகள்மூலம், “நாம் உறங்கும் போதும், நமக்காக பணம் வேலை செய்ய, நாம் என்னசெய்ய வேண்டும்?” என்று ஒரு கேள்வியை எழுப்பி சிந்திக்க வைத்தார்.ஒவ்வொருவரும் தம்முடைய மொத்த வருமானத்தில் 30 சதவீதம் சேமித்து,அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். குறிப்பாக பிட்காயின், கிரிப்டோகரன்சி, டிமேட் (DEMAT) A/c, கடன்பத்திரங்கள், பங்குகளில் முதலீடு, தங்கத்தில் முதலீடு பற்றியும் கேட்கப்பட்டகேள்விகளுக்கு Rtn. பார்த்தசாரதி அவர்கள் தகுந்த பதில் கொடுத்துஅனைவரையும் உற்சாகப்படுத்தினார்.மேலும் அவர்கள் குறும்பட காணொளி மூலம் சிறப்பு குழந்தைகளுக்காகஒரு குழந்தையின் சகோதரி, தானாகவே எடுத்து உண்ணும் ஸ்பூனைக்கண்டுபிடித்து, அதை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து அதன் மூலம் அந்தசகோதரிக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிட்டியது என்றும் கூறினார்.Rtn.பார்த்தசாரதி அவர்களின் மாணவர்களுடனான உரையாடலும்,அணுகுமுறையும், மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இந்தநிகழ்வில் கணினி ஆசிரியர் திரு காளிதாஸ் நன்றி நவில நிகழ்ச்சி இனிதேநிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியை நிர்வாக அலுவலரும், ஆசிரியர்களும் சிறப்பாகஏற்பாடு செய்திருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News