இட்லி உப்புமா வறண்டு போகாமல் இருக்க....
புதிய "ஜாம்" பாட்டிலை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பாட்டிலை தலைகீழாக சுடுநீரில் சிறிது நேரம் பிடியுங்கள் பின்பு எளிதாக திறந்து விடலாம்.
முட்டையை வேக வைக்கும் பொழுது ஐந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கல் உப்பு போட்டு வேக வைத்தால் முட்டையை வேகவைத்த பின் உரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விடலாம்.
கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், அவைகளை கழுவி துடைத்து, வாழை இலையில் மூடிக்கெட்டி 'பிரிஜ்'ஜில் வைத்து விடுங்கள்.20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
இட்லி அதிகமாக செய்து விட்டால் வீணாகாமல் இருக்க சிலர் உப்புமா செய்வது வழக்கம். அப்படி இட்லி உப்புமா செய்யும் பொழுது இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் போட்டு, பின்னர் தண்ணீர், இல்லாமல் உதிர்த்துவைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.
0
Leave a Reply