25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


தேசிய படைவீரர் கொடி நாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய படைவீரர் கொடி நாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (07.12.2024) தேசிய படைவீரர் கொடி நாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நன்கொடை வழங்கி கொடி நாள் வசூலினை  தொடங்கி வைத்தார்.
 

முப்படைகளை சேர்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டும், உள்நாட்டு கலவரத்தின்போதும் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.அவர்களது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.முன்னாள் இராணுவ படைவீரர்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ச்சியாக நிலம், குடும்பம் உள்ளிட்ட   பிரச்சனைகள் தீர்வு காணும் வகையில் கோரிக்கை மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் படைவீரர்கள் பணியில் இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும், ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு  ஏற்படும் பிரச்சனைகளையும் படைத்துறையின் மூலம் தலைமை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு  அனுப்பும் கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும்,தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படை வீரர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகளும் மாவட்ட நிர்வாகம் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.படைவீரர் கொடி நாளை முன்னிட்டு,  திரட்டப்படும் நிதியில் இருந்து போரில் ஊனமுற்ற படை வீரர்கள், போரில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோரின் நலனுக்காகவும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவை நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.படைவீரர்கள் நலத்துறையின் மூலம் கடந்த 2023 ஆண்டு  ரூ.89.83 இலட்சம்  வசூல் செய்யப்பட்டுள்ளது.

 கடந்தாண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதிஉதவிகளை வழங்க வேண்டும். இலக்கீட்டை காட்டிலும்  அதிக வசூல் செய்து நம் தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்கு அல்லும் பகலும் அயராத பாடுபட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நலன் காப்பதில் பொது மக்களாகிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.பின்னர் படைப்பணி முடித்து  வெளிவந்த  படைவீரர்கள், சார்ந்தோர், போர் விதவையருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.முன்னதாக, 20 பயனாளிகளுக்கு ரூ.5,41,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில்முன்னாள் படைவீரர்  நலன் உதவி இயக்குநர் (கூ/பொ),  முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News