25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம். >> ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது. >> ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம் >> ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை >> ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு. >> இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன. >> ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு >> செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >>


கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர் நிலைகளில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான நீரைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை  உருவாக்கி இருக்கின்றனர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர் நிலைகளில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான நீரைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை  உருவாக்கி இருக்கின்றனர்

உலகில் 'தண்ணீருக்குப் பற்றாக் குறை என்பதே இல்லை. ஆனால், சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் பூமியில் கிடைக்கும் அதிகளவு நீர், உப்பு நீராக இருப்பது .நல்ல நீர், ஆறு, ஏரி, குளங்களில் கிடைக்கிறது. இவை மாசடைந்து வருவதால் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான நீர் என்பது, கானல் நீராக இருக்கிறது.

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர் நிலைகளில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான நீரைப் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை  உருவாக்கி இருக்கின்றனர். இதை உருவாக்க, பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் சாதாரண டயர்கள் போதும். அதற்கு மேலே குடை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். உள்ளே இருக்கும் சில இயந்திரப் பொறிகள் சூரியனிடம் இருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை சூடாக்குகின்றன.

நீர் சூடாகி, ஆவியாகி, குடை போன்ற அமைப்பின் மீது பட்டு மறுபடி யும் நீராக மாறும். இந்த நீர் தனியாக ஒரு பையில் சேமிக்கப்படும்.நீர் ஆவியாகி மறுபடியும் நீராக மாறும்போது, அதில் உள்ள மாசுகள் அகற்றப் பட்டுவிடும் .இந்த எளிய இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு நாளுக்கு, 3.67 லிட்டர் நல்ல நீரைப் பிரித்தெடுக்க முடியும். மிகக் குறைந்த செலவில் வடிவமைக்கக் கூடியது என்பதால், இது  உலகம் முழுக்க நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News