பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்க...
பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
கடலை மாவுக்கு பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பருப்பும் கலந்து மிக்சியில் அரைத்து உப்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடும்.
* கீரையை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்தால் சத்து அப்படியே இருக்கும்.
வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கி னால் கண்களில் கண்ணீர் வராது.
பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் ,பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
0
Leave a Reply