25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு  2025-2026 சம்பா பருவத்தில்நெல் கொள்முதல் செய்யப்பட்டு  விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு  2025-2026 சம்பா பருவத்தில்நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 04.03.2026 வரை 29,796 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 3560 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.71,01,20,229/-ஐ (ரூபாய் எழுபத்தொரு கோடியே ஒரு வட்சத்து இருபதாயிரத்து இருநூற்று இருபத்தொன்பது மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளன.

      விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கம்மாப்பட்டி மற்றும் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கழக விதிகளின்படி சராசரியாக விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.

     விவசாயிகள் அறுவடை செய்த நெல்லியை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். பயனடைந்த விவசாயிகள் அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News