25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான  பல்வேறு திறன் போட்டிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு திறன் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (07.12.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ராம்கோ சிமெண்ட்ஸ்(Ramco cements) மற்றும் பம்பிள் பி டிரஸ்ட்(BumbleB Trust) இணைந்து செயல்படுத்திய கல்வி- 40 திட்டத்தின் மூலம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதன்படி, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கு முழுமையான நம்பிக்கையை வழங்குவதற்கும், அவர்களின் அடிப்படையான ஆங்கில வாசிப்பு, எழுதுதல் மற்றும் பேசும் திறன்களை வளர்ப்பதற்கும், பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் வடிவமைக்கப்பட்டு பள்ளி அளவில், மண்டல அளவில் நடத்தப்பட்டு, இன்று மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. கதைசொல்லல், கையெழுத்து, எழுத்துப்பிழை, உரையாடல், வினாடி வினா, எழுத்துப்பிழை பொருத்துதல், ஊமை வேடங்கள் என பல்வேறு வகையான  போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த ஆண்டு, 14 பள்ளிகளைச் சேர்ந்த 360 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்கள் பள்ளி அளவில் பங்கேற்று, பின்னர் 181 மாணவர்கள் 5 வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர். மாவட்ட அளவில் 112 மாணவர்கள் போட்டியிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் துணைத்தலைவர்கள் திரு.லட்சுமணன், திரு.ராஜகோபால், ராம்கோ சிமெண்ட்ஸ் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.முருகேசன், பம்பிள் பிடிரஸ்ட் கல்வி40  நிறுவனர்  திரு.பிரேம் குமார் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News