25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


அருப்புக்கோட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியினைத், தொடங்கி வைத்து அமைச்சர்  அவர்கள்  உரையாற்றினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியினைத், தொடங்கி வைத்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்  பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை, தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  (14.11.2025) பள்ளிக்கல்வித்துறை / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் 11-ஆம் வகுப்பு பயிலும் 419 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நம்முடைய தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால்  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரிலே பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தொடக்கி வைத்தார். அதனடிப்படையில், இன்று அருப்புக்கோட்டை பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து வருகிறார்.இன்றைய காலகட்டத்தில் ஒரு போட்டியான உலகம் அமைந்துள்ளது. இன்றைய சமூகத்தில் அனைவரும் கல்வி கற்றவர்களாக உள்ளனர். அவர்களின் திறமைக்கேற்றவாறு வேலைக்கு செல்கின்றனர்.  நமது அரசாங்கம் செயல்படுத்தியுள்ள நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை  மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்தி தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவச் செல்வங்களாகிய நீங்கள் தங்கள் குடும்பக் கஷ்டங்களை போக்கி ஒரு வசதியான தலைமுறையாக வாழ வேண்டும்  என்று தெரிவித்தார்.

நம்முடைய   தமிழ்நாடு துணைமுதலமைச்சர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள 166 – பள்ளிகளைச் சேர்ந்த 18,585 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.இதில், இன்றைய தினம் மட்டும் அருப்புக்கோட்டை  சட்டமன்றத் தொகுதியில் 415 பள்ளி மாணவ /  மாணவியர்களுக்கும், எம்.ரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில்  144 பள்ளி மாணவ / மாணவியர்களுக்கும் என மொத்தம் 559  மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை நராட்சியில் மாணவர்களுக் கு 1050 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1283 மதிவண்டிகளும் ஆக மொத்தம் 2333 எனவும்,   காரியாபட்டியில் மாணவர்களுக்கு  463  மதிவண்டிகளும்,  மாணவிகளுக்கு 666  மதிவண்டிகளும்  ஆக மொத்தம் 1129 எனவும்,  நரிக்குடியில்  மாணவர்களுக்கு 285, மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 262  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  547  எனவும்,  இராஜபாளையம் நகராட்சியில் மாணவர்களுக்கு 1492 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 1992  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  3484 எனவும்,  சாத்தூரில்  மாணவர்களுக்கு 504 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 676 மிதிவண்டிகளும்  ஆக மொத்தம்  1180 எனவும், சிவகாசி  நகராட்சியில் மாணவர்களுக்கு 1107 மிதிவண்டிகளும்,  மாணவிகளுக்கு 1766  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  2873 எனவும், திருவில்லிபுத்தூர் ஊராட்சியில் மாணவர்களுக்கு 932 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் 1003 ஆக மொத்தம்  1935 எனவும், திருச்சுழியில் மாணவர்களுக்கு  411 மிதிவண்டிகளும்,  மாணவிகளுக்கு 471  மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  882 எனவும், வெம்பக்கோட்டையில் மாணவர்களுக்கு 329, மாணவிகளுக்கு 413, ஆக மொத்தம்  742 ஆக மொத்தம் எனவும், விருதுநகரில்  மாணவர்களுக்கு 1072 மிதிவண்டிகளும் , மாணவிகளுக்கு 1315 மிதிவண்டிகளும் ஆக மொத்தம்  2387 எனவும் , வத்திராயிருப்பு ஊராட்சியில் மாணவர்களுக்கு 515 மிதிவண்டிகளும் ,  மாணவிகளுக்கு 578 மிதிவண்டிகளும்   ஆக மொத்தம்  1093 எனவும்,   என  ஆக மொத்தம் 18585 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், மாணவ / மாணவியர்களின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தர்லட்சுமி சிவப்பிரகாசம், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News