25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Feb 26, 2024

அடர்த்தியாக புருவம் வளர

1. விளக்கெண்ணெய், 2. தேங்காய் எண்ணெய், 3. ஆலிவ் எண்ணெய் 4. சின்ன வெங்காய சாறு 5. கற்றாழை சாறுஇந்த5 பொருட்களையும் கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒன்றாக கலந்து இரவில் பருவங்களில் தடவி மறுநாள் கழுவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.'

Feb 23, 2024

கோல்டன் பிளாண்ட் பொன்னாங்கண்ணி கீரை

பச்சை பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து,20 முதல்30 நிமிடங்கள் உறை வைத்து குளிக்க, கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும், தலைமுடியும் கொட்டுவது நின்று, கறுத்து வளரும். பொன்னாங்கண்ணி சாறு,கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால் எண்ணெய், அதனுடன் சிறிது அதிமதுரம் இவற்றை சமமான அளவில் எடுத்து, பால் விட்டு அரைக்கவும், இக்கலவையை கலந்து காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து தலை மூழ்கி வர கண் வியாதிகளும், பித்த நோய்களம் குணமாகும் என கூறியுள்ளனர். சித்தர்கள், பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வர, எலும்புகள் நல்ல வலுப்பெறும், நோயால் குறைந்த உடல் எடை, மீண்டும் இயல்பு நிலைக்கும் வரும்.வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.

Feb 22, 2024

மென்மையான சருமத்திற்கு சந்தனம்மற்றும்தயிர்கலந்தஃபேஸ்பேக்

தயிரை நாம் முகத்தில் தடவுவதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், மிக சிறந்த பொலிவையும் தயிர் நமக்கு தருகிறது.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்கிறது.தயிர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி என்றும் பளப்பளப்பான மற்றும் மென்மையான சருமத்தைஅளிக்கிறது.சந்தனம்(sandalwooduses) ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன், தேன் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை முகத்தில் வைத்து.பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும. இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.சந்தனப்(sandalwooduses) பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.சந்தனப் பொடியை (sandalwood uses) முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.சந்தனப் பொடியில்(sandalwooduses) தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

Feb 19, 2024

பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்க....

 பாதாம் எண்ணெய், தேங்காய்எண்ணெய் அல்லது ஆலிவ்எண்ணெயை பயன்படுத்தி, தலைச்சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.இரவு முழுவதும் நன்குஊற விட்டு, காலையில்எழுந்ததும், தலையை ஷாம்புகொண்டு அலச வேண்டும்.குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்கற்றாழை ஜெல்லை, தலைச்சருமத்தில்தேய்த்துக்கொள்ளுங்கள்.20 நிமிடங்கள்கழித்துஒருஷாம்புவைகொண்டு தலையைஅலசிக் கொள்ளவும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு தொல்லைநீங்கும்.சில வேப்பஇலைகளை எடுத்து, அதைநன்கு பேஸ்ட் செய்து,அதனை அப்படியே தலையில்தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில்தலையை அலச வேண்டும்.இவ்வாறு செய்தால்பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்கும்.சமமான அளவைக்கொண்ட, ஆப்பிள் மற்றும்ஆரஞ்சு பழங்களை கொண்டுஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை தலைமுடி ஸ்கால்ப்பில் நன்றாகதடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையைஅலச வேண்டும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு பிரச்சனைமிக விரைவில் சரியாகும்.

Feb 17, 2024

1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )

1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )naiநெய் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது. நாம் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நெய்யை முகத்திற்கு மாய்ஸ்ச்சரைஸராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக நெய்யை 100 முறை கழுவி எடுத்து, இறுதியில் கிடைக்கும் க்ரீமை முகத்தில் அப்ளை செய்திருக்கிறார்கள். இதற்கு சதா தௌத க்ரிதா என்று பெயர். இது மார்க்கெட்டுகளில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது....விதவிதமான மாய்ஸ்ச்சரைஸர்கள். நிரந்தரமான பயன்களைத் தருவதில்லை.. அப்ளை செய்யும்போது மட்டும் சருமம் ஹைட்ரேட்டிங்காக இருக்கிறது. சிறிது நேரத்திலேயே வறட்சி அடைந்து விடுகிறது. ஆனால் நெய் அப்படியல்ல. சருமத்தை நாள் முழுமைக்கும் மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.ஷதா தௌத க்ரிதா (Shata Dhauta Ghrita) செய்வது எப்படி?தேவையான பொருள்கள்நெய் - 100 கிராம்,தண்ணீர் - 1 கப்,மஞ்சிஸ்டா பொடி - 1 ஸ்பூன்,அதிமதுரம் - 1 ஸ்பூன்,துளசி பொடி - கால் பூன்,செம்பு தாம்பலம் - 1செம்பு டம்ளர் - 1​செய்முறைசெம்பு தாம்பலத்தைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சிஸ்டா பொடி, அதிமதுரப் பொடி, துளசி பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.செம்பு தாம்பலத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து நெய்யில் விட்டு, செம்பு டம்ளரைக் கொண்டு வட்ட வடிவில் நன்குதேய்க்க வேண்டும்.ஊற்றிய தண்ணீரை நெய் முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறது அடுத்த ஸ்பூன் தண்ணணீரை ஊற்றித் தேய்க்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 100 முறை நெய்யை அந்த தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். 100 முறை கழுவி எடுத்த பின், ஸ்மூத்தான மாயஸ்சரைஸர் க்ரீம் கிடைக்கும். நெய் முழுசாக க்ரீமாக மாறியிருக்கும்.இதுதான் நெய்யை 100 முறை கழுவினால் கிடைக்கும் Shata Dhauta Ghrita என்னும் ஆயிரங்காலத்து பழமையான மாயஸ்ச்சரைஸர்.​பயன்படுத்தும் முறைமுகத்தை சுத்தம் செய்து விட்டு, நேரடியாக மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவது போல இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.நாள் முழுக்க சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.குழந்தைகளுக்குக் கூட இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இந்த க்ரீமை சருமத்தில் அப்ளை செய்யும் சருமத்தில் இருக்கிற7 வகை லேயர்களுக்கு உள்ளேயும் ஊடுருவிச் செல்லும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதிலுள்ள ஒமேகா3, ஒமேகா9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நுண்ணிய கோடுகள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இயற்கையான சன் ஸ்க்ரீன்,கருவளையங்களை போக்கும்.பரு, தழும்புகளை போக்கும்.வயதாவதை தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

Feb 16, 2024

தேங்காய் பால் ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்தது.

 தேங்காய் எண்ணெய்  ,தேங்காய் பாலும் கூந்தலுக்கு சிறந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இரண்டிலுமே லாரிக் அமிலம் காணப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருவி ஈரப்பதத்தை கொடுக்கிறது. வறட்சியை தடுக்கிறது.தேங்காய் பாலில் கரோட்டீன் புரதம் காணப்படுகிறது. இது முடியிழைகளை வலுவாக்கி முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது. தேங்காய் பாலை ஹேர் மாஸ்க், கண்டிஷனராகக் கூட பயன்படுத்தலாம். ஷாம்பு போட்ட பிறகு தேங்காய் பால் கலந்த தண்ணீர் கொண்டு கூந்தலை அலசலாம். பொடுகுத் தொல்லையை போக்குகிறது, பாதிக்கப்பட்ட கூந்தலை ரிப்பேர் செய்யும். அதிக வெப்பத்தால் முடி வறண்ட உடைவதை தடுக்கிறது. தினமும் கூட அப்ளை செய்யலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு முன்பு அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது,. உச்சந்தலை எரிச்சல் மற்றும் அரிப்பை போக்கி கூந்தலை பொலிவாக மாற்றுகிறது. 

Feb 14, 2024

பொடுகு தொல்லை தீர மருதாணி இலை

பொடுகு தொல்லைதீரவாரத்தில் ஒரு முறைமருதாணி இலையை அரைத்துசிறிதளவு தயிர் மற்றும்எலுமிச்சை சாறு சேர்த்துதலை தேய்த்து குளித்துவர பொடுகு தொல்லைநீங்கும்.. நெல்லிக்காய் பொடி,வெந்தய பொடி மற்றும்சிறிதளவு தயிர் சேர்த்துதலை தேய்த்து சிறிதுநேரம் வைத்திருந்து பின்புதலை தேய்த்து குளித்துவர பொடுகு தொல்லைநீங்கும்.இந்த பொடுகுதொல்லை தீர எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய்கலந்து தலையில் தேய்த்துவந்தாலோ.எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்துதலையில் தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகுநீங்கும்.பொடுகு குணமாக வினீகர் சமமானஅளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையைதயாரித்துக் கொள்ளுங்கள்.இந்தகலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமானஷாம்புவால் தலை முடியைஅலசுங்கள்இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையைதலைச் சருமத்தில் தடவி,பின் ஒரு மணிநேரம் கழித்து முடியைஅலசுங்கள்.இந்த சிகிச்சைபொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.

Feb 13, 2024

முகம் கருமை,எண்ணெய் பசை நீங்க.....

முகம் கருமையடையாமல் இருக்க வேப்பிலை, புதினாசிறிதளவு மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, அவற்றைதூள் செய்து பாலில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் கருமை குணமாகும்..ஆரஞ்சு பழ தோலை நன்கு காயவைத்து, பொடி செய்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் கருமை நீங்கும்.எண்ணெய் பசை முகத்திற்கு தக்காளி பழத்தை2 துண்டு எடுத்து முகத்தில் தேய்த்து வர முக எண்ணெய் பசை நீங்கி, முகம்பளிச்சென்று இருக்கும்.ஆப்பிள் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை நீங்கும்.

Feb 10, 2024

முகத்தை பொலிவாக்கும் வாழைப்பழ தோல்

மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம்,. வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று.வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.ஆனால், நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தின் தோலின் நன்மைகள் பயன்கள்அதிகமாக காணப்படுகின்றதுஇரவில் உறங்குவதற்கு முன்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் மருக்கள் மறைவதுடன் மீண்டும் வராமல் இருக்கும்.வாழைப்பழத்தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கு துணைப்புரிகின்றது.வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் தழும்புகள் மற்றும் கறைகளை போக்குகின்றது.வாழைப்பழத்தோல்களில்பொட்டாசியம்மற்றும்ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை சருமத்தில் இருக்கும் நுண் துளைகளைத் திறந்து ஆக்ஸிஜனை உள்ளே செல்ல உதவுகின்றது.முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது தடவினால் முகம் உடனடி பொலிவு பெறும். இது முகத்தை சுத்தப்படுத்தவும். அழுக்குகளை குறைக்கவும் துணைப்புரிகின்றது.இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்களை சுற்றி கருவளையம் காணப்படும். அதனை தவிர்க்க வாழைப்பழ தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் கருவளையம் விரைவில் மறைய ஆரம்பிக்கும்.முகத்தில் அதிக சுருக்கங்கள் இருந்தால், இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்ததை சீர் செய்வதுடன் சுருக்கங்களை நீக்கும். வாழைப்பழ தோலில் சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை இருக்கமாக்க உதவுகின்றது.முகச்சுருக்கங்கள் நீங்கி என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாழைப்பழ தோலை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

Feb 07, 2024

( DRY SKIN ) வறண்ட சருமத்திற்கு....

சருமம் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் அப்போது முகத்தில் ஆலிவு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.மோரை முகத்தில் தேய்த்து20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும் மற்றும் முகம் மென்மையாக இருக்கும். சருமம் மிருதுவாக பழுத்த வாழை பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ சருமம் மிருதுவாக காணப்படும். தினமும் முகத்திற்கு தேங்காய் பாலுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் மிகவும் புத்துணர்ச்சி பெரும்.சருமம் அழகுபெற பால், கடலை மாவு, மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளப்பளப்பாகவும் மாறும், குறிப்பாக சருமம் அழகுபெற பெரிதும் உதவும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 21 22

AD's



More News