25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உரத்தால் உயரும் உஷ்ணம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உரத்தால் உயரும் உஷ்ணம்

பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயு தான் புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்துகிறது என்று எண்ணுகிறோம். ஆனால், இதை விட 300 மடங்கு மோசமானது நைட்ரஸ் ஆக்ஸைட் சமீபத்தில் ஆஸ் திரேலியாவைச் சேர்ந்த சிஸிரோ (csiro) விஞ்ஞான மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.இது ஓசோன் படலத்தை அரிக்கிறது. இந்த ஆபத் தான வாயு நம் வளிமண்டலத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. 1980 களில் இருந்ததை விட தற் போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

விவசாயத்தில் புரட்சி என்று கருதப்பட்டது நைட்ரஜன் உரங்களின் அறிமுகம். பயிர்கள் செழித்து வளர் வதற்கு நைட்ரஜன் அவசிய ம்.பயறு வகை தாவர ங்களில்இயற்கையாகநுண்ணுயிர்கள்  நைட்ரஜனைச் சேமிக்கும். இதைப் பார்த்தே நைட்ரஜன் உரங்கள் உருவாக்கப்ப ட்டன. இதனால் உணவு உற்பத்தி பெருகியது. ஆனால், இந்த உரங்களால் வளிமண்ட லத்தில் நைட்ரஸ் ஆக்ஸைட் பெருகுகிறது. இந்த மாசுபாட்டில் முன்னணியில் இருப்பவை சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், அமெரிக்கா உள் ளிட்ட நாடுகள் தான். அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியி ல் இருந்தன. தற்போது அவை உமிழ்வைக் குறைத்துக் கொண்டன.

உலகின் மொத்த நைட்ரஸ் ஆக்ஸைட் உமிழ்வில் நைட்ர ஜன் உரங்கள், விலங்குக் கழிவு உரங்கள் ஆகியவை சேர்ந்து ஏற்படும் உமிழ்வு 74 சதவீதம். இது தவிர கழிவுநீர், தொழிற்சாலைகள், புதைபடிவ எ ரி பொருட்கள் ஆகியவை காரணிகள் ஆகின்றன. உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இந்த வாயு உமிழ்வை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News