இராஜபாளையம் தெற்குவெங்காநல்லூர் இந்திரா நகர்.செயல்படாத சுகாதார வளாகம், பாதியில் நிற்கும் ரோடு பணி அவதியில் மக்கள்.
இராஜபாளையம் தெற்குவெங்காநல்லூர் ஊராட்சி சஞ்சீவி மலை பின்புறம் இந்திரா நகர் வீடுகள் அமைந்து 25 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதி என எந்த பணியும் நடைபெறவில்லை, ரைஸ் மில் பின்புறம் உள்ள பகுதியில் கழிவு நீர் வெளியேற்ற வசதி இன்றி வீட்டின் முன் தொட்டிகள் அமைத்து நிறைந்த பின் வாளியில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் கொசு தொல்லை, துர்நாற்றம் சுகாதார கேடு ஏற்படுகிது. மழையின்போது கழிவுகள் தேங்கி பாதிப்பு அதிகரிக்கிறது.
மக்கள் எதிர்ப்பை மீறி குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை அமைந்ததால், குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் அருகே 9.5 லட்சம் செலவில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்ததால் பெண்கள் அப்பகுதி செல்ல அச்சப்பட்டு திறந்த வெளியை பயன்படுததும் கொடுமை உள்ளது.குடியிருப்பின் பல்வேறு பகுதிகளுக்கு முறையான ரோடு, சாக்கடை வசதி இதுவரை அமைத்து தரவில்லை. இதை யார் கவனிப்பார்கள் என்று இந்திரா நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply