கைத்தறி நெசவாளர்கள் விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமல் அழிந்து வரும் பாரம்பரிய கைத்தறி தொழில்
.இராஜபாளையம் சத்திரப்பட்டி புனல்வேலி, முத்துச்சாமிபுரம், தளவாய்புரம், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர், ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் பிரதான தொழிலாக இருந்து வருகின்றது. பொங்கலுக்குரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . இதில் 5000 திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடி உறுப்பினராக இருந்தும், உப தொழில்களான கண்டு தயாரித்தல், தார் சுற்றுதல், சாயம் ஏற்றுதல், பாவு, உற்பத்தி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் உற்பத்தியை அதிகரிக்கும்பொருட்டு 2012ல் 90 விழுக்காடுமானியத்துடன்மின்சாரம்இலவசமாக்கப்பட்டு கைத்தொழில் அனைத்தும் பெடல் தறியாக மாற்றப்பட்டது. உடல் உழைப்பு குறைவு, உற்பத்தி அதிகம் என்பதால் கூலி ரூ.68 ஆக குறைக்கப்பட்டது. இறுதியில் 2015-ல் கூலியை உயர்த்தக்கோரி நெசவாளர்கள் பேராட்டம் நடத்தியதால் மீட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டது. இதில் உப தொழில்களில் ஈடுபடும் முதியோர்களின் நிலை என்பது 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தார் சுற்றினால் நாள் ஒன்றுக்கு 40 வரை மட்டுமே கூலியாக கிடைக்கிறது . நெசவாளர் பதினைந்து மணி நேரத்திற்கு மேல் நின்று வேலை செய்தாலும் அவரால் ரூ.250 மட்டுமே தினக்கூலியாக பெறமுடியம்.
நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் தங்களின் பெற்றோர் படும் துயரத்தை அறிந்து மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். அரசு வழங்கி வந்த முத்ரா கடன் திட்டம். இறப்புக்கு பின் வாரிசு தாரர்களுக்கு ஒய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அழிந்து வரும் பாரம்பரிய கைத்தறி தொழிலை காப்பாற்ற தமிழக அரசு, கைத்தறி துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே நெசவாளர்களின் கோரிக்கை.
0
Leave a Reply