25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் >> Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) >> ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு. >> உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள். >> புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம். >> ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

May 16, 2025

தோஷங்கள் நீங்கும் மயிலிறகு

மூன்று மயிலிறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு 'ஓம் சனீஸ்வராய நமஹ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயிலிறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து 'ஓம் சோமாய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்து தோஷம் நீங்கும்

May 09, 2025

பெண்களுக்கான ஆன்மீக  குறிப்புகள்.

பெண்கள் தனது வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ,ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.சாமி படங்களில் உலர்ந்த பூக்களை  விட்டு வைக்கக் கூடாது.

Apr 25, 2025

வாசல் தெளித்து கோலம் போடுவதும் பூமி பூஜையே.

ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியிடம் தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார். அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா என்று கேட்டார்.யாரால் செய்யப் படுகிறது?" என்று வினவினார். வேலைக்காரி தான் என்றாள் கோடீஸ்வரரின் மனைவி, மஹா ஸ்வாமிகள் நிதானமாக, "பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து விட்டது!" என்றார். எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்ய வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார்.

Apr 18, 2025

ஆறுமுகங்களின் தொழில்கள்.

1 முதல் முகம் உலகுக்கு ஒளி தருவது 2-ஆம் முகம் - வேள்வி காப்பது 3-ஆம் முகம் - அடியார் குறைநீக்குவது- 4-ஆம் முகம் - வேத ஆகமப்பொருளை விளக்குவது 5-ஆம் முகம் - தீயோரை அழித்துநன்மை செய்வது 6-ஆம் முகம் - வள்ளிக்கு மகிழ்வைத் தருவது.

Apr 11, 2025

தெய்வங்களும் அவர்களுக்குஆகாத மலர்களும்.

சிவன் -தாழம்பூவிநாயகர் - துளசிபைரவர் - அலரிபார்வதி- பாதிரிசூரியன் - தும்பைதுர்க்கை - நந்தியாவட்டை

Apr 04, 2025

சனி பகவானை கோபமாக்கும் செயல்கள் .

முதல் நாள்  உடுத்திய துணியை அடுத்த நாள் உடுத்துவது .இருள் சூழ்ந்திருக்கும் வீடுகள்  சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதன் காரணமாக மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மேலும் அமங்கல சொற்கள் பேசுவதும், சுத்தமில்லாத இடங்களும் சனி பகவானுக்கு பிடிக்காது .மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டவர்கள், சனி பகவானால் அழிவை சந்திப்பது நிச்சயம். அனைத்து கிரகங்களையும் சிறைபிடித்த ராவணனால், சனி பகவானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாற்றான் மனைவி மீது கொண்ட ஆசையே அவனது அழிவுக்கும் காரணமானது. மேலும் வஞ்சகம் இது செய்து வெற்றி பெறலாம் நினைத்தால், சனி பகவான் தண்டிக்காமல் விடமாட்டார்.

Mar 28, 2025

கோவிலில் செய்ய கூடாத தவறுகள்?

1.கோவிலில் தூங்கக் கூடாது. 2. தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது. 3. கொடிமரம், நந்தி, பலிபீடம் நிழல்களை மிதிக்கக் கூடாது. 4.விளக்கு இல்லாமல் வணங்கக் கூடாது. 5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது. 6 .குளிக்காமல் கோவில் போகக் கூடாது. 7. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது. 8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது. 9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது. 10. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது. 11.கோவில் படிகளில் உட்காரக் கூடாது. 12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும். 13.பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது. 

Mar 25, 2025

வீட்டை ஆளும் நமக்கு வீட்டுத்தலைவாசல் தான் பாதுகப்பு.

100 சதுர அடியில் இருந்தாலும் 10,000 சதுரஅடியில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு பாதுகாப்பு நிலை வாசல் கதவு தானே.அப்பேற்பட்ட நிலைவாசலை - நம்மில் பலர் சரியாக கவனித்துக் கொள்வதில்லை.ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலை 6-7 மணிக்குள் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து 2 சாமந்தி பூவாவது வாசலின் இரு புறத்தில் வைக்கவும்.முடிந்தவர்கள் வாசலில் ஒர் அகல் விளக்கு ஏற்றி 2 ஊதுபத்தி வைக்கவும்."பன்னீர் பச்சைகற்பூரம் சேர்த்து மஞ்சள்குழப்பிவைக்கவும்.குல தெய்வமும் மற்ற தெய்வங்களும் வரும் வழியை இப்படி தான் வைக்க வேண்டும். தினமும் வெளியில் சென்று வந்தவுடன் நிலை வாசலின் மேற்பகுதியை தொட்டு நல்ல படியாக வீடு வந்து சேர்ந்ததற்கு நன்றி சொல்லவும்.தினமும் தூங்கி எழுந்தவுடன் கதவு திறக்கும் போது நிம்மதியான உறக்கத்தைக் கொடுத்து பாதுகாப்பாய் இருந்ததற்குநன்றி என்று சொல்லிப் பாருங்கள். முன்னேற்றத்தைக் கண்கூடாக பார்க்கலாம்.

Mar 21, 2025

தானத்திலேயே சிறந்தது அன்னதானம்.

நாம் அரிசியை வீணாக்குபர்களுக்கும், ஒருவர் நம் வீட்டு படியேறி வந்து, தானம் கேட்டால் இல்லை என்பவர்களுக்கும். செய்யும் பாவங்கள் இரட்டிப்பாகும் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.அரிசி கொஞ்சம் கீழே சிந்தினாலும் பெரியவர்கள் அதை ஒவ்வொன்றாக பொறுக்கி அரிசியோடு சேர்ப்பார்கள். அரிசியை வீணாக்கினால் அன்னபூரணியை வீணாக்குவது போல ஆகும். பசிப்பவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.தானத்திலேயே சிறந்தது அன்னதானம் வாழ்க்கையில் எவர் ஒருவர் அடுத்தவர்களின் பசியை போக்கி உள்ளார்களோ அவர்கள் தான்அதிகபுண்ணியத்தைசேர்த்து வைத்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Mar 14, 2025

மாசி மகம்

 மாசி மகம் அன்று தான் முருகப் பெருமான், தன்னுடைய தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக சொல்லப்படுகிறது.அதே போல் பாதாள உலகத்தில் இருந்து பூமியை பெருமாள், வராக அவதாரம் எடுத்து மீட்டு வந்ததும் மாசி மகம் நாளில் தான்.அதனால் இந்த நாளில் சிவ பெருமான், அம்பாள், முருகப் பெருமான், பெருமாள், முன்னோர்கள், குலதெய்வம் என எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் வழிபடலாம்.மாசி மகம் அன்று விரதம் இருந்து, வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.முடிந்தவர்கள் அருகில் உள்ள  நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடலாம்.

1 2 3 4

AD's



More News