25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Jan 10, 2025

குளிக்காமல் பூஜை செய்யக்கூடாது.

குளிக்காமல் சுத்த பத்தமாக இல்லாத போது பூஜை செய்யக் கூடாது. குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு, அதே மாதிரி இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு பூஜை செய்யக் கூடாது. 11 வது நாள் சுத்தமாகி பூஜை செய்து கொள்ளலாம். இருப்பினும் சாவு விழுந்த வீட்டில் குடும்ப தலைவர் 12 வது நாளில் தான் பூஜையில் ஈடுபட வேண்டும். வீட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை செய்ய வேண்டாம். வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை அறைக்கு திரைச்சீலை இட்டு வையுங்கள்.

Jan 06, 2025

கோயிலில் நிலைவாசலை மிதிக்க கூடாது.

வீட்டு அருகிலிருக்கும் பழமையான முருகன் கோயில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 48 நாட்கள் விளக்கேற்றி வர நினைத்தது நிறைவேறும்.கோயிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அகலமான நிலைவாசலை தாண்டி தான் செல்ல வேண்டும்.அதை மிதித்து செல்லுதல் கூடாது. இதை தாண்டி செல்வதால் நமது பிரச்சனைகளையும், தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தாண்டி செல்வதாக ஐதீகம்.அந்த படிக்கெட்டை குனிந்து கைகளால் தொட்டு புருவத்தின் நடுவே வைத்து அழுத்துவதால் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் தூண்டப் பெறும்.இதையெல்லாம் கடைபிடித்தால் உங்க வாழக்கைல இனிமே கஷ்டமே வராது!

Jan 03, 2025

ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.

கோவிலில் அபிஷேகம் நடைபெறும் சமயம் பிரகாரம் சுற்றக் கூடாது.கோவிலுக்குள் கோபம் கொள்ளுதல், கடுமையான வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது.தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும்.கற்பூர தீபம் காட்டும் போது மனதை ஒருநிலை படுத்தி சுவாமியைக் காண  வேண்டும்.ஆலயத்தில் வழிபாடு நடக்கும் போது நெட்டி முடித்தல், சோம்பேறி முறித்தல் கூடாது.வெற்றிலை பாக்கு அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். நாம் அதை கோவிலுக்குள் சுவைத்து பார்க்க கூடாது.ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.

Jan 02, 2025

நம் வீட்டு வாசலில்  அதிர்ஷ்டம் பெருக இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள். 

 கேரளா மக்கள் யானை உருவத்தை வைத்திருப்பார்கள்.யானை விநாயகரையும், ஆன்மீக பலத்தையும் குறிப்பதால் யானை உருவங்கள், யானை படங்கள், யானை பொம்மைகளை வாங்கி வீட்டின் வாசலில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றல்களையும் பெருக செய்யும்.பல பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் பார்த்தால் தெரியும், குதிரை, யானை போன்றவற்றில் மண் பொம்மைகளை வாங்கி வைத்திருப்பார்கள்.இவையெல்லாம் ஒரு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சின்னங்களும், பொருட்களும் ஆகும்.இவற்றில் உங்களுக்கு பிடித்தமான வாங்கி வைத்து நீங்களும் அதிர்ஷ்டம் பெறலாம்.

Dec 24, 2024

எந்த வீட்டில் சாப்பாடுக்கு ஊறுகாய் இருக்கிறது. அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.

சாமிக்கு படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு,நெய்,இவைகளை கைகளால் பரிமாறக்கூடாது, ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம்.வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயம் விளையாடுவது, பேன் பார்த்தல், நகம் வெட்டுவது, இந்த செயல்களை செய்யக்கூடாதுஎந்த ஒரு நல்ல விசேஷத்திற்கு நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்கள் குலதெய்வத்துக்கு முதலில் உடைத்த பிறகு தான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும் .எந்த வீட்டில் சாப்பாடுக்கு ஊறுகாய் இருக்கிறது. அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.

Dec 20, 2024

ராசிகளுக்கு ஏற்ற அறுபடை வீடு முருகன் - கோவில்

திருப்பரங்குன்றம் ரிஷபம்,துலாம் . திருச்செந்தூர் மேஷம்,விருச்சிகம் . பழனிமலை சிம்மம், மகரம் •சுவாமிமலை தனுசு,மீனம் • திருத்தணி கடகம்,கும்பம் . பழமுதிர்சோலை மிதுனம், கன்னி 

Dec 17, 2024

இரவில் கொஞ்சம் சாதமாவது சமையல் அறையில் மிச்சம் வைக்க.....

1.சாப்பாடு அரிசியும், கல் உப்பும் குறையாது இருந்தால் தரித்திரம் வராது. 2.காலையில் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வரியம் நீங்கிவிடும். 3அரிசியை அளந்து பானையில் போட்ட பின் மீண்டும் கொஞ்சம் எடுத்து அரிசி டப்பாவில் சேர்த்துவிட்டால் அன்னத்திற்கு குறைவு வராது. 4.இரவில் கொஞ்சம் சாதமாவது சமையல் அறையில் மிச்சம் வைக்க லட்சுமி நம் வீட்டில் தங்கிவிடுவாள்.

Nov 26, 2024

குளிக்கும் நீரில்கல் உப்பினைகலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.

.வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும் .

Nov 25, 2024

கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்க கல் உப்பு

குளிக்கும் நீரில்கல் உப்பினைகலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும்வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும் .

Nov 22, 2024

பாவம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது

மனிதர்கள் ஆகட்டும், மற்ற எந்த உயிரினங்கள் ஆகட்டும் நாம் அவர்களைப் பார்த்து பாவம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது. நம் மனதளவில் இரக்கப்படலாம், உதவிகள் செய்யலாம்.. ஆனால் அவர்களை பார்த்து அய்யோ பாவம் அல்லது- பாவம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது.அப்படி சொன்னால் அவர்களுடைய பாவத்தில் 6 மாத பாவம் நம்மை வந்து பிடிக்கும் என்பது சாஸ்திரம்.

1 2

AD's



More News