குளிக்காமல் சுத்த பத்தமாக இல்லாத போது பூஜை செய்யக் கூடாது. குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு, அதே மாதிரி இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு பூஜை செய்யக் கூடாது. 11 வது நாள் சுத்தமாகி பூஜை செய்து கொள்ளலாம். இருப்பினும் சாவு விழுந்த வீட்டில் குடும்ப தலைவர் 12 வது நாளில் தான் பூஜையில் ஈடுபட வேண்டும். வீட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை செய்ய வேண்டாம். வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை அறைக்கு திரைச்சீலை இட்டு வையுங்கள்.
வீட்டு அருகிலிருக்கும் பழமையான முருகன் கோயில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 48 நாட்கள் விளக்கேற்றி வர நினைத்தது நிறைவேறும்.கோயிலுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அகலமான நிலைவாசலை தாண்டி தான் செல்ல வேண்டும்.அதை மிதித்து செல்லுதல் கூடாது. இதை தாண்டி செல்வதால் நமது பிரச்சனைகளையும், தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தாண்டி செல்வதாக ஐதீகம்.அந்த படிக்கெட்டை குனிந்து கைகளால் தொட்டு புருவத்தின் நடுவே வைத்து அழுத்துவதால் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் தூண்டப் பெறும்.இதையெல்லாம் கடைபிடித்தால் உங்க வாழக்கைல இனிமே கஷ்டமே வராது!
கோவிலில் அபிஷேகம் நடைபெறும் சமயம் பிரகாரம் சுற்றக் கூடாது.கோவிலுக்குள் கோபம் கொள்ளுதல், கடுமையான வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது.தெய்வத்தின் பெயரை உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும்.கற்பூர தீபம் காட்டும் போது மனதை ஒருநிலை படுத்தி சுவாமியைக் காண வேண்டும்.ஆலயத்தில் வழிபாடு நடக்கும் போது நெட்டி முடித்தல், சோம்பேறி முறித்தல் கூடாது.வெற்றிலை பாக்கு அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். நாம் அதை கோவிலுக்குள் சுவைத்து பார்க்க கூடாது.ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.
கேரளா மக்கள் யானை உருவத்தை வைத்திருப்பார்கள்.யானை விநாயகரையும், ஆன்மீக பலத்தையும் குறிப்பதால் யானை உருவங்கள், யானை படங்கள், யானை பொம்மைகளை வாங்கி வீட்டின் வாசலில் வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றல்களையும் பெருக செய்யும்.பல பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் பார்த்தால் தெரியும், குதிரை, யானை போன்றவற்றில் மண் பொம்மைகளை வாங்கி வைத்திருப்பார்கள்.இவையெல்லாம் ஒரு வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சின்னங்களும், பொருட்களும் ஆகும்.இவற்றில் உங்களுக்கு பிடித்தமான வாங்கி வைத்து நீங்களும் அதிர்ஷ்டம் பெறலாம்.
சாமிக்கு படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு,நெய்,இவைகளை கைகளால் பரிமாறக்கூடாது, ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம்.வீட்டில் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு தரையை தடவி தாயம் விளையாடுவது, பேன் பார்த்தல், நகம் வெட்டுவது, இந்த செயல்களை செய்யக்கூடாதுஎந்த ஒரு நல்ல விசேஷத்திற்கு நீங்கள் தேங்காய் உடைக்கும் போது உங்கள் குலதெய்வத்துக்கு முதலில் உடைத்த பிறகு தான் மற்ற தெய்வத்திற்கு உடைக்க வேண்டும் .எந்த வீட்டில் சாப்பாடுக்கு ஊறுகாய் இருக்கிறது. அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
திருப்பரங்குன்றம் ரிஷபம்,துலாம் . திருச்செந்தூர் மேஷம்,விருச்சிகம் . பழனிமலை சிம்மம், மகரம் •சுவாமிமலை தனுசு,மீனம் • திருத்தணி கடகம்,கும்பம் . பழமுதிர்சோலை மிதுனம், கன்னி
1.சாப்பாடு அரிசியும், கல் உப்பும் குறையாது இருந்தால் தரித்திரம் வராது. 2.காலையில் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வரியம் நீங்கிவிடும். 3அரிசியை அளந்து பானையில் போட்ட பின் மீண்டும் கொஞ்சம் எடுத்து அரிசி டப்பாவில் சேர்த்துவிட்டால் அன்னத்திற்கு குறைவு வராது. 4.இரவில் கொஞ்சம் சாதமாவது சமையல் அறையில் மிச்சம் வைக்க லட்சுமி நம் வீட்டில் தங்கிவிடுவாள்.
.வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும் .
குளிக்கும் நீரில்கல் உப்பினைகலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும்வாரத்திற்கு ஒருமுறை கல் உப்பினை குளிக்கும் நீரில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு குளித்தால், கண்திருஷ்டியால் ஏற்படும் பல விதமான உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்கும். அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கியவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து, தேங்காயில் விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகள் தீருவதுடன், முன்னேற்றத்தை தடை செய்யும் தேக்க நிலை மாறும் .
மனிதர்கள் ஆகட்டும், மற்ற எந்த உயிரினங்கள் ஆகட்டும் நாம் அவர்களைப் பார்த்து பாவம் என்ற வார்த்தையை சொல்லக்கூடாது. நம் மனதளவில் இரக்கப்படலாம், உதவிகள் செய்யலாம்.. ஆனால் அவர்களை பார்த்து அய்யோ பாவம் அல்லது- பாவம் என்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது.அப்படி சொன்னால் அவர்களுடைய பாவத்தில் 6 மாத பாவம் நம்மை வந்து பிடிக்கும் என்பது சாஸ்திரம்.