சர்க்கரை 15 நாட்கள் முழுமையாக தவிர்க்கவும். காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். உணவை சற்றுக் குறைத்து எடுத்துக்கொள்ளவும். தினமும் 20-30 நிமிடம் வேகமாக நடக்கவும். அதிக புரதம் உள்ள காலை உணவு தேர்வு செய்யவும். ஒரு நாளில் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். வறுத்த உணவுகளை முழுமையாக தவிர்க்கவும். 7-8 மணி நேரம் உறங்கவும். இரவு 8 மணிக்குள் உணவு முடிக்கவும்.
குப்பைமேனிச் சாற்றுடன் மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் முடி வளர்வது குறையும்.
கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை இலைகளை கொதிக்கவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, உச்சந்தலையில் தடவவும்.குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும்.
கருவேப்பிலை ஒரு கப்பிடி, கசகசா ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு வற்றைத் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசவும். 30 நிமிடங்கள் இத்து முகம் கழுவ, தழும்பு குறையும். வடு மறையும் வரை தொடரவும்.
அடர்த்தியான முடி - Pumpkin seedsமுடி வளர்ச்சி முட்டை.வலுவான முடி வால்நட்.வெண்ணெய் பளபளப்பான முடி.முடி உதிர்வு குறைக்க - பசலைக்கீரை,பொடுகு குறைக்க - தயிர்.Scalp ஈரப்பதம் - தேங்காய் எண்ணெய்.வேகமான வளர்ச்சி சால்மன்.முடி உதிர்வு குறைக்க - சக்கரைவள்ளிக்கிழங்கு.Scalp ஆரோக்கியம் - Green tea.Damage repair - பாதாம்.Hair follider வலுப்படுத்த Flax seeds.மொந்த முடி ஆரோக்கியம் பருப்பு வகைகள்.உணவு சரியா இருந்தா,இயற்கையாக வலிமையானது.
பீட்ரூட், சிவப்பு செம்பருத்தி 10, கறிவேப்பிலை கப், இவற்றை கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் 200மிலி 'தண்ணீர் விட்டு அதனுடன் 3 ஸ்பூன் காபி தூளை போட்டு மிதமாக சூடேற்றி, அதில் முன்பே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து, 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின் 12 மணி நேரத்திற்கு ஆறவிடவும்மறுநாள் காலை ஆறவைத்த ஹேர் டையுடன் 1ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்துங்கள்.வாரத்தில் ஒருநாள் இந்த ஹேர் டை பயன்படுத்தினால் நரை முடி மாறும். இந்த ஹேர் டை 12 மணி நேரம் ஆறவைக்க வேண்டுமென்பதால் இரவில் தயாரிப்பது சிறந்தது.
முக சுருக்கத்தை போக்கும் கேரட்.முக பொலிவை தரும் பீட்ரூட்..சரும வறட்சிக்கு உருளைக்கிழங்கு.கருவளையத்தை போக்கும் வெள்ளரி.பொடுகை போக்கும் எலுமிச்சை.நரை முடியை போக்கும் நெல்லிக்காய்.முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி தழை.உதட்டில் உள்ள கருமையை போக்கும் புதினா இலை.தலை முடியை கருமையாக்கும் கருவேப்பிலை தழை.முகத்தை பொலிவுடன் வைக்கும் ஆப்பிள் .வசீகர அழகுக்கு ஆரஞ்சு.தோல் சுருக்கத்தைப் போக்கும் மாதுளை.
பப்பாளிப்பழத்தை மிக்சியில் அரைத்து. அத்துடன் முல்தானி மட்டி மற்றும் வேப்பிலைப் பொடி சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்.சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து,முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவலாம். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்னை உள்ளவர்கள், வெயிலில் சென்று, வீட்டிற்கு திரும்பியதும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து, முகம் பளபளப்பாகும்.
சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க, தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து, ஆறு மாதம் பூசி வர,வடு மறையும்.பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் பூசி வர, சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
முழங்கை கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பூசி வந்தால் மிருதுவாக மாறும். வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.