வேர்க்கடலையில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை உட்கொள்வதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க முடியும்.வேர்க்கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துவது கொலஸ்ட்ரால் அளவைச் சமநிலைப்படுத்த உதவும். வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவோடு சாப்பிடுவது நல்லது.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது.சப்போட்டா உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்சனைகள் வரலாம்.இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது.சப்போட்டாபழம். தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், பல உடல் நல பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. கோடைக்காலத்தில் அதிகம் பார்க்கப்படும் சப்போட்டா இனிப்புசுவை கொண்டது. தினமும் இதை சாப்பிடலாம். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம். நீரிழிவு, ஒவ்வாமை, செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பொதுவாகவே சப்போட்டாவை தவிர்க்க வேண்டும்.
பாதாம் - நரம்புகளுக்கு தேவையான வைட்டமின் E வழங்கும்.வால்நட் - நரம்பு செயல்பாட்டை தூண்டும் நல்ல கொழுப்பு.முருங்கைக் கீரை - மக்னீசியம், வைட்டமின்கள்; நரம்பு சோர்வை குறைக்கும்.வெந்தயம் - நரம்பு பலவீனத்தை மெதுவாக சரிசெய்ய உதவும்.மோர் - குடல் நலம் சீராக இருந்தால் நரம்பு நலமும் மேம்படும்.நல்லெண்ணெய் (அளவோடு) - நரம்பு மென்மை மற்றும் பாதுகாப்புக்கு உதவும்.நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.குறிப்பு - தூக்கக் குறைவு, அதிக மன அழுத்தம், சத்தற்ற உணவு -நரம்பு பலவீனத்தின் காரணங்கள்.
கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதுடன் உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் மிகவும் உதவி செய்கிறது.கொய்யாப் பழத்துடன் சப்போட்டா பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலு பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வை நீக்குவதுடன், பித்தம் நீங்கும்.
முதல் நாள் இரவில் பீட்ரூட்டை பாதியாக அறுத்து, ஒரு பாதியை தண்ணீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் அந்த பீட்ரூட் தண்ணீரை நன்கு வடிகட்டி குடிக்கவும்.இதை தொடர்ந்து குடித்து வந்தால்உடலில் ஹீமோகுளோபின் அளவு மேம்பட உதவும்.முகம் பளிச்சிடும்.கரும்புள்ளிகள் குறைந்து இயற்கை பொலிவு கிடைக்கும்.
பித்தம் பிரச்சனைகள் தீர எளிய வழிமுறைகள்எலுமிச்சை பித்தத்தை குறைக்கும்.தனியாவும் இஞ்சியும் ஜீரணத்தை அதிகரிக்கும்.உலர் திராட்சை மலச்சிக்கலை போக்கும்.தேன் வயிறு பிரச்சனைகளை சரிசெய்யும்.பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.பித்தம் குறைய தேவையான பொருட்கள் :இஞ்சி – 25 கிராம்,கொத்தமல்லி விதை (தனியா) – 2 ஸ்பூன்,எலுமிச்சை – 1,உலர் திராட்சை – 10,பூண்டு – 4 துண்டுகள்,தேன் – 1 ஸ்பூன்,செய்முறை :இஞ்சியின் தோலைப் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும்.தனியா, உலர் திராட்சை, பூண்டு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பின் இதனை வடிகட்டவும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.இதை மாதம் ஒருமுறை குடிக்கலாம், அல்லது எண்ணெய் பதார்த்தம் கலந்த உணவை உண்டபின் இதனை அருந்தினால் பித்தம் குறையும்.
உடம்பு சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கி சாறு.தேனுடன் இஞ்சி கலந்து சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.பூண்டில் பென்சிலின் சக்தி அதிகம் உள்ளது."மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு.வாத நோய் தடுக்க அரைக்கீரை.வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.உடல் பருமன் குறைய முட்டைக்கோஸ்.பித்தம் தணிக்க நெல்லிக்காய்.வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
எலும்பு வலுவாக இருக்க பால், மோர். வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள்,துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை.வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம்,கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.சுத்தமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும்.காரமான உணவுகள்,காபி,மதுபானம் தவிர்க்க வேண்டும். தண்ணீர், தயிர், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.நெலிக்காய் சாறு அல்லது ரோஸ் வாட்டர் உடல் முழுவதும் தடவலாம்.வெந்தய தண்ணீர் அதிகமான வியர்வையை குறைக்கும்.குளித்த பிறகு உடல் நன்றாக காய்ந்த உடைகளை அணிய வேண்டும்.தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் போன்றவை உடல் வெப்பத்தை குறைக்கும்.வியர்வை அதிகமாக இருந்தால் தோல் மருத்துவரை அணுகவும்.
காலிஃபிளவர்மூளையை போன்றதோற்றம் உடையது.அதேபோல் இதுமூளை வளர்ச்சிக்கும்உதவுகிறது.வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. தினமும்90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது.புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.செரிமான கோளாறுகளை சரிசெய்யும் தன்மை இதற்கு உண்டு.காலிஃபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்துகளை தயாரிக்கலாம்.