25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


நலம் வாழ

Mar 26, 2025

செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் முந்திரி.

முந்திரி  பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு காப்பர், செலினியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப் பொருட்கள் அதிக அளவில் உள்ளது.இது செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை  அதிகரிக்க செய்கிறது.

Mar 24, 2025

உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்க...

பச்சைப் பயறு, மோர், உளுந்து வடை, பனங்கற்கண்டு, சின்ன வெங்காயம், சுரைக்காய்.நெல்லிக்காய், வெந்தயக்கீரை மாதுளம் பழம், இளநீர், வெந்தயம், நாவற்பழம், கோவைக்காய் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

Mar 21, 2025

 மலச்சிக்கல் உள்ளவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகம்.

 .புகை பிடித்தல், மன அழுத்தம், உடல் பரு மன் ஆகியவை தான் இதய நோய்களுக்கான காரணிகளாக அறியப்பட்டு வந்தன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை23,814 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் மலச்சிக்கல் உள்ளதோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

Mar 19, 2025

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்  உளுந்தம்பால்.

செய்முறை-அரை கப் உளுந்தை நன்றாக கழுவி, குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அரைத்த விழுதை ஊற்றி ,வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்தவுடன் 1 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். தேங்காய் துருவல், சுக்குத்தூள் கலந்து பருகலாம் புரதம் நிறைந்த இந்த பால், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலை இரும்பு போல் மாற்றும்.

Mar 12, 2025

உடல் எடையைக் குறைக்க வெந்தயம்.

 வெந்தய விதைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது .நெய்யில் வறுத்த வெந்தயத்தை பொடி செய்து அதை வெது வெதுப்பான பாலில் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சருமம் மற்றும் தலை முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெந்தயத்தை சிறிது நெய்யில் வறுத்து, காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறையும்.

Mar 11, 2025

சிறுதானியத்தின் பலன்கள் 

வரகு - உடல் எடை மற்றும் சர்க்கரை நோய்க்கு. குதிரைவாலி-  இதய நோய் சம்பந்தமான குறைபாட்டுக்கு.சாமை - இரத்த சோகை மற்றும் உடலின் கொழுப்பினை குறைக்க.திணை- இதயத்தை பலப்படுத்தும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த.சோளம்- இரத்த ஓட்டம், செரிமான சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வாயுத்தொல்லை நீங்க.நாட்டு கம்பு- உடல் வெப்பம், பார்வைதிறன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க.நாட்டு ராகி- இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, பெருங்குடல் புற்றுநோய் & தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க.பனி வரகு- சருமத்தை பிரகாசமாக வைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலமாக்க.

Mar 08, 2025

இவற்றை இவற்றோடு சேர்த்து சாப்பிட்டால் நல்லது 

பால் -வாழைப்பழம் கீரை -மிளகு மிளகாய் வற்றல்- கொத்துமல்லி விதை நிலக்கடலை - கருப்பட்டி அவல் - பால், நெய் உளுந்து வடை- தேன்,நெய்,பேயன் வாழைப்பழம்  பலாப்பழம் - தேன் சாதம்  - துவரம் பருப்பு பொடி, நெய் பச்சை மிளகாய் -பச்சை கொத்துமல்லி வெள்ளரிக்காய் - மிளகு பொடியும் உப்பும்

Mar 05, 2025

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கில் உள்ள மாவுசத்து அடி வயிறு வீங்குவத்தை தடுக்கிறது.இதன் சாறை,எரிக்காயம்,சிராய்ப்புகள்,.போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம்."இரத்தம் கெட்டுபோதல், மலச்சிக்கல், சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.தசை வீக்கம், வாத நோயை குணமாக்கும்வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, இதன் சாறு வரப்பிரசாதமாகும்.ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.முகப்பருக்கள். கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. தோல் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும் மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.இதை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பும் ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல்' மற்றும் மனச்சோர்வை போக்கி முளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

Mar 03, 2025

இரத்தஅழுத்தத்தை சமப்படுத்த செம்பருத்தி தேநீர்

செம்பருத்தி வெறும் மலர் மட்டுமல்ல. பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் செம்பருத்தி பல நோய்களுக்கு மருந்தாகிறது.செம்பருத்தியில் வைட்டமின் சி உள்ளது.செம்பருத்தி தேநீர் அருந்துவது இரத்தஅழுத்தத்தை சமப்படுத்துகிறது.செம்பருத்தி பூ கொழுப்பை குறைக்கிறது.கண் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. செம்பருத்தி பூ சாப்பிடுவது முடி வளர்ச்சியையும், நோய் எதிர் ப்பு சக்தியையும்  அதிகரிக்கிறது.தோல் புற்றுநோயை தடுப்பதில் செம்பருத்திபூ உதவுகிறது.

Feb 25, 2025

சருமத்தை பளபளப்பாகவும், ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள தக்காளி

ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும்,ரத்த உற்பத்திக்கும் தக்காளி உதவுகிறது.ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.தக்காளி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். சருமத்தை பளபளப்பாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள தக்காளி உதவுகிறது.தக்காளி ஜூஸை முகத்தில் தடவி30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவும்போது முகம் பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைய தொடங்கும்.தினமும் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சாப்பிடுவதால் உடல்பருமனை குறைக்கலாம். உடலுக்கு வளத்தையும், பலத்தையும் தரும் ஆற்றல் உடையது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 22 23

AD's



More News