சமையலில் மணமும் சுவையும் சேர்க்கும் சுக்கு, பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிப்பதாகக் கருதப்படுகிறது.சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குறைய உதவும்.சிறிய துண்டு சுக்கை வாயில் வைத்து மென்றால் பல்வலி தணியலாம்.சுக்கை நசுக்கி துணியில் கட்டி காதருகே வைத்தால் காதடைப்பு, நீரடைப்பு போன்ற பிரச்னைகளில் நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.சுக்குப் பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பது அஜீரணம், வாந்தி, பேதி, சீதபேதி போன்ற செரிமானக் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவும்.மார்பு எரிச்சல், வயிற்று வலி, புளியேப்பம், நெஞ்சு அசௌகரியம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.வயிற்றுப் பொருமல், பசியின்மை, வயிற்றிரைச்சல் போன்ற பிரச்னைகளுக்கு நன்மை தரக்கூடும்.சளி, இருமல், ஆஸ்துமா, சைனஸ் தொந்தரவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.வாத நோய்கள் மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகளுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி போன்றவற்றைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது.சுக்குத் தைலத்தை தலையில் தேய்த்து குளிப்பது தலைவலி, ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் காது வலிக்கு நிவாரணம் அளிக்கலாம்.தினமும் அளவோடு சுக்கை உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது.குறிப்பு: இவை பாரம்பரிய மருத்துவத்தில் கூறப்படும் பயன்பாடுகள். உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெறுவது அவசியம்.
உடலில் இரத்தச் சோகையைக் குறைக்க உதவக்கூடும். முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும். செரிமானத்தை சீராக்க உதவக்கூடும். உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற உதவக்கூடும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடும். உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவக்கூடும். சருமத்திற்கு இயற்கையான பொலிவை அளிக்க உதவக்கூடும். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கக்கூடும்.
நாவல் பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். பப்பாளி வெண் தோல் பாதிப்பைக் குறைக்க உதவும். விளாம்பழம் மலச்சிக்கலைத் தீர்க்க உதவும். சீத்தாப்பழம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அத்திப்பழம் உடல் எடையைக் குறைக்க உதவும். கொடுக்காப்புளிபுற்றுநோய் வராமல் தடுக்க உதவும். சப்போட்டாகண் பார்வையை மேம்படுத்த உதவும்.
சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு அல்லது "விஷம்" என்பது அறிவியல் ஆதாரமற்ற கருத்தாகும். தேவைக்கேற்ப சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிப்பது பொதுவாக பாதுகாப்பானது. சிலருக்கு அதிக அளவில் உடனடியாக தண்ணீர் குடித்தால் செரிமானத்தில் அசௌகரியம் ஏற்படலாம். ஆனால், இதனால் செரிமானம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதற்கு உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லை.
உடலின் ஆரோக்கியத்திற்கும், எந்தெந்த விட்டமின்கள் எந்த உணவில் கிடைக்கின்றன என்பதற்குமான எளிய குறிப்பு:விட்டமின் A: கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி. (உணவு: இனிப்பு உருளைக்கிழங்கு, முட்டை)விட்டமின் B1: தசை வளர்ச்சி மாற்றச் செயல்முறை மற்றும் ஆற்றல். (உணவு: முழு தானியங்கள், பருப்புகள், கொட்டைகள்)விட்டமின் B2: வாய்ப்புண்கள் குணமாக மற்றும் தோல் ஆரோக்கியம். (உணவு: தயிர், முட்டைகள்)விட்டமின் B5: ஹார்மோன் உற்பத்தி. (உணவு: கோழி இறைச்சி, சாமை தினைகள்)விட்டமின் B6: இரத்த சோகை தடுப்பு மற்றும் நரம்பு ஆரோக்கியம். (உணவு: மீன், முழு தானியங்கள்)விட்டமின் B7: தோல் மற்றும் முடி ஆரோக்கியம். (உணவு: கோழி கல்லீரல், முட்டைகள்)விட்டமின் B12:இரத்த சோகை மற்றும் நரம்பு சேதம் தடுத்தல். (உணவு: காளான், மீன்)விட்டமின் C: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. (உணவு: நெல்லிக்காய், கொய்யாப்பழம்)விட்டமின் D: எலும்புகள் மற்றும் தசை ஆரோக்கியம். (உணவு: சூரிய ஒளி, முட்டைகள்)விட்டமின் E: நரம்பு மற்றும் முடி ஆரோக்கியம். (உணவு: கொட்டைகள், விதைகள்)விட்டமின் K: காயம் ஏற்படும் போது இரத்த உறைதல். (உணவு: முட்டைகோஸ், கீரை)
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், உடல் மற்றும் மனநலத்தை நீண்ட காலம் சிறப்பாக பராமரிக்க முடியும்.இரவு 11 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்.தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை தண்ணீர் அருந்துங்கள். குறைந்தது 20–30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.அதிகம் பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுகளைத் தவிர்க்கவும். உறங்குவதற்கு 2–3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துவிடுங்கள். உணவில் மஞ்சள், இஞ்சி போன்ற இயற்கை நோய் எதிர்ப்பு பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். தினமும் சிறிது நேரம் காலை சூரிய ஒளியில் இருங்கள். (தோல் பாதிக்காத அளவில் மட்டும்.) மன அழுத்தத்தைக் குறைத்து, தினமும் மனம் திறந்து சிரியுங்கள்.வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் தசை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த நல்ல பழக்கங்களைத் தொடங்குங்கள்; ஆரோக்கியமான, உற்சாகமான வாழ்க்கைக்கு நல்லது.
காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் மிகவும் அருமையாக நடக்கும்.நாம் இளமையான தோற்றத்துடன் என்றும் இருக்க வேண்டுமென்றால் வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.இஞ்சி மற்றும் துளசியை கலந்து வெந்நீரை அடிக்கடி குடித்து வர முதுமை நம்மை நெருங்காது.நாம் வெந்நீர் அருந்தும் போது நமது உடலில் இருக்கும் கெட்ட நீரானது வியர்வை மூலம் வெளியேறி நமது உடலை சுத்தப்படுத்துகிறது.நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைத்து. பல உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தாமல் நம்மை பாதுகாக்கும்.வெந்நீர் தொடர்ந்து அருந்தி வர, பருக்கள் நம்மை நெருங்காமல், நம்முடைய முகம் மிகவும் பொலிவுடன் இருக்கும்.
வேப்பமரத்தில் பூவரும்.அந்தப் பூவை துவையலாக செய்து சாப்பிடுங்கள், அல்லது ரசம் (ரசத்தில் குடம்புளிதான் சேர்க்க வேண்டும்). இல்லையென்றால் வெந்நீரில் கொதிக்க வைத்துநீராகவும் அருந்தலாம்.நம் உடலுக்கு வேலி போல் காக்கும். நம் முன்னோர்கள் இதைப் பயன்படுத்தியே ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.வேப்பிலையும் நம் ஆராவை சுத்தம் செய்யும்: பண்டைய காலத்தில் குழந்தைகள் ஏதாவது பயந்து இருந்தால் வேப்பிலை அடிப்பார்கள். நம் ஆராவை முழுவதுமாக தூய்மைப்படுத்தும் குணம் வேப்பிலைக்கு உள்ளது.அதேபோல் பொடுகு பிரச்சனை, தலைமுடி உதிர்வது போன்றவர்க்கு வேப்பிலை இரவிலே தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில அந்த தண்ணீரில் தலை முழுகவும்.எந்த தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும். வெட்டுக்காயங்கள், பாத வெடிப்பு -வேப்பெண்ணை தடவினால் சரியாகிவிடும்.அதேபோல் வாரம் மூன்று முறை வேப்பிலை சாறு குடியுங்கள். நல்ல குளிர்ச்சியை தரும். உடலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைந்திருக்கும்.வேப்பம்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. இருந்தாலும் சரியாகிவிடும். ரத்தம் சுத்திகரிக்கும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். பித்தத்தை தணித்து மனம் சாந்தமடையும்.
பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கிய இடம் பெற்றுள்ள கோவை இலை, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு இயற்கையான நிவாரணமாகக் கருதப்படுகிறது.கோவை இலையில் உள்ள சில இயற்கைச் சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது. இதன் சாற்றை அளவோடு பயன்படுத்துவது அல்லது கோவைக்கீரையை உணவில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது.வாய் புண், நாக்கு வெடிப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் பச்சை கோவை இலைகளை மென்று அதன் சாற்றை சில நிமிடங்கள் வாயில் வைத்திருக்கலாம். இது எரிச்சலை குறைக்க உதவும்.கோவை இலையில் உள்ள இயற்கை கிருமி எதிர்ப்பு பண்புகள் தோல் தொடர்பான சில பிரச்சினைகளில் உதவக்கூடும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வெளிப்புறமாக பயன்படுத்தும் பழக்கம் சில இடங்களில் உள்ளது.கோடைக்காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, கோவைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என கூறப்படுகிறது. பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதும் நல்ல தேர்வாகும்.சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீர் எரிச்சல் (Urinary Tract Infection) சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் நீர் எரிச்சலை குணமாக்க இதன் சாறு உதவுகிறது. பயன்படுத்தும் முறை :கோவை இலைச் சாற்றுடன் சம அளவு இளநீர் அல்லது மோர் கலந்து குடித்து வர சிறுநீர் எரிச்சல் உடனடியாகக் குறையும். மருத்துவப் பிரச்சினைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். இயற்கை மூலிகைகள் துணை சிகிச்சையாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
வில்வ இலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி ஒரு30 மிலி அளவுக்கு வாரம் ஒருமுறை என4 வாரங்கள் தொடர்ந்து குடித்தாலே போதும். இந்த சாறை குடித்த பிறகு சரக்கு அடிப்பது கடினம், சரக்கு வாசத்தை கண்டவுடன் வாந்தி உணர்வு தோன்றும், மூக்கை பிடித்துக் கொண்டு குடிக்க முயன்றாலும் வாந்தியாக வெளியேறும். இதை முடிந்த வரை பகிரவும், பலருக்கும் உதவியாக இருக்கும்.