25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆரோக்கியம்

Apr 17, 2026

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பலாப்பழம்.

மேற்குதொடர்ச்சி மலையின் தென்பகுதியை பூர்வீகமாக கொண்டது பலா. பலா மரங்களுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.பலாப்பழத்தில் வைட்ட மின்கள்,நியாசின், ரிபோப்ளேவின் மற்றும் போலிக் அமிலம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.பொட்டாசியம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம் போன்றவையும், கரிம அமிலங்களும் உள்ளன.பலாப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதயம் மற்றும் ரத்த நாளங்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது நோய்களை தடுக்க உதவுகிறது. தசை, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.ரத்தசோகையைதடுக்கஉதவுவதுடன்சீரானரத்தஓட்டத்துக்கும்உதவுகிறது.தைராய்டுசுரப்பிசீராகசெயல்படஊக்குவிக்கிறது.சிறுநீரகபாதிப்புஇருக்கும்நோயாளிகள்டாக்டரின்பரிந்துரைஅடிப்படையில்பலாப்பழம்உட்கொள்ளலாம், காரணம் பலாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதுதான். 

Apr 09, 2026

மூட்டுகளுக்கு பலம் தரும் சித்த வைத்தியம்.

நாட்டு பாக்கு10 மற்றும் புளியங்கொட்டை10 ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து. தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்து. அதில் இரண்டு முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி முட்டியில் பற்று போட வேண்டும். பற்று கீழே விழாமல் வெள்ளை துணியால் கட்டி, அதன் மீது சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்: அது காய்ந்த பிறகு மீண்டும் எண்ணெய் ஊற்றலாம். முட்டிக்கு நல்ல பலம் வரும். கிழிந்த ஐவ்வும் கூடும்.

Apr 08, 2026

உடல் எடையைக குறைக்க உதவும்  எளிய உணவு முறை.

வீட்டில் இருக்கும் சில எளிய சமையல் பொருட்களே உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம்.+ சோம்பு தண்ணீர் (Fennel Water)ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நாள் முழுவதும் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.+ சீரக தண்ணீர் (Cumin Water)அடுத்த நாள் தண்ணீரில் சீரகம் சேர்த்து குடிக்கலாம். ஒருநாள் சோம்பு ஒருநாள் சீரகம் என மாற்றி மாற்றி குடிப்பது உடலுக்கு நல்ல பலன் தரும்.உணவில் சேர்க்க வேண்டியவைசுரைக்காய், சௌ சௌ போன்ற நீர்ச்சத்து அதிகமான காய்கறிகள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.உணவு மட்டும் போதாது! தினமும் குறைந்தது,30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை மெதுவாகவும் ஆரோக்கியமாகவும் குறையும்.எந்த உணவு முறையையும் தொடங்குவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Apr 07, 2026

மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ள அவகோடா பழம்.

மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது,'அவகோடா' பழம். இது,'ஆனைகொய்யா' என்று, தமிழில் அழைக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் குவாடமாலா நாடுகளை பூர்வீகமாக கொண்டது.16ம் நுாற்றாண்டில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருந்து,உலகம் முழுவதும் பரவியது.இப்பழத்தில், மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்,'ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவையும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.கர்ப்பிணியர் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், இதை உண்பதை தவிர்ப்பது நல்லது.அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்த நாளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்.இதற்கு அவகேடோ பழத்தில் உள்ள க்ளுடாதியோன் தான் காரணம்.இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களையும் வெளியேற்றும்.மேலும் அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இந்த பழத்தில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது உடலின் தினசரி இயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் உடலில் இதயம், சிறுநீரகம் போன்ற செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை பொட்டாசியம் வழங்குகிறது.அவகேடோவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கச் செய்வதுடன், சோடியத்தால் உடலில் ஏற்படும் விளைவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.அவகேடோவில் லுடீன் மற்றும் சியாகசிந்தின் போன்ற மூலக்கூறுகள் அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த மூலக்கூறுகள் கண் பார்வையில் ஏற்படும் மாகுலர் சிதைவு செயல்முறையைத் தாமதப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Apr 06, 2026

மல்லிகைப்பூ அழகு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும்.

மல்லிகைப்பூ பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்கு தெரியாது. முறையாக பயன்படுத்தினால், இது பல உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். மல்லிகைப்பூ வயிற்றில் பூச்சிகள் இருந்தால், உடல் எடை குறைவதுடன், சருமத்தில் வெள்ளை நிறத் திட்டுகளும் தோன்றும். இந்த பிரச்சனைக்கு,4 மல்லிகைப் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால், குடலில் உள்ள நாடாப் புழு, மற்றும் கொக்கிப் புழு, போன்ற ஒட்டுண்ணிகள் அழியும்.  மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, அதை தண்ணீரில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது.வயிற்றில் புண் இருந்தால், அதன் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படலாம். இதை சரிசெய்ய, மல்லிகை பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாக சுண்டிய பிறகு வடிகட்டி, காலை மற்றும் மாலை என இருவேளை அருந்தி வரலாம். இது வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஆகிய இரண்டையும் குணப்படுத்த உதவும். மல்லிகை பூவின் எண்ணெயும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த பூக்களை மருத்துவ பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தும் முன், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

Apr 04, 2026

சர்க்கரை அளவு கட்டுப்பட அருகம்புல் சாறு.

அருகம்புல் ஒருசிறந்த இயற்கைஇரத்த சுத்திஆகும். தினமும்காலை வெறும்வயிற்றில் இதன்சாறு அருந்தினால்இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்.தோல் ஆரோக்கியமாக மெருகூட்டப்படும்.பண்டைய வைத்தியர்கள் இதனை“இயற்கை அமிர்தம்” எனவே அழைத்தனர்.அருகம்புல் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை அளிக்கும்.வெப்பத்தால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வயிற்றுப்புண், உள் சூடு ஆகியவற்றைத் தணிக்கும்.உடலில் பித்தம் அதிகரித்திருந்தால், அருகம்புல் சாறு அதனை சமநிலைப்படுத்தும்.சூடான காலங்களில் தினமும் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு குடிப்பது உடல் வெப்பத்தைக் குறைத்து மன அமைதியை அளிக்கும்.அருகம்புல் புண்களை விரைவாக ஆற்றும் தன்மை கொண்டது.காயம் ஏற்பட்ட இடத்தில் அருகம்புல் சாறு தடவினால் ரத்தம் உடனே நிற்கும்.மஞ்சளுடன் கலந்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு, படர்தாமரை, வேர்குருபோன்ற தோல் பிரச்சனைகளில் பூசினால் விரைவில் குணமாகும்.இது சொரியாசிஸ், அக்கி கொப்புளம் போன்ற தோல் நோய்களுக்கும் பயன்படுகிறது. அருகம்புல்+ பசு வெண்ணெய் சேர்த்து40 நாட்கள் தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் எடுத்தால்,உடல் தளர்ச்சி நீங்கும்.நரம்புகள் வலுப்படும்முகம் பளபளப்பாக மாறும்.அதனால் பண்டைய சித்தர்கள் இதனை “உடல் தேற்றி” என்று அழைத்தனர்.அருகம்புல் சாறு ஒரு சிறந்த இம்யூனிட்டி பானம். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கைப்பிடி அருகம்புல் மற்றும் 10-12 மிளகு சேர்த்து கொதிக்கவைத்து தினமும் குடிக்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஒவ்வாமை(Allergy) பிரச்சனைகள் குறையும்.அருகம்புல் சாறு100 மில்லி அளவிற்கு குடித்தால் மாதவிடாய் காலரத்தப்போக்கு சமநிலைப்படுத்தப்படும்.அதிக ரத்தப்போக்கு குறையும்.கருப்பை ஆரோக்கியம் மேம்படும்.அருகம்புல் சிறுநீர் பெருக்கி மற்றும் கல்லடைப்பு நீக்கும் இயற்கை மருந்து.இதன் சாற்றில் மிளகுத்தூள், நெய் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடக்கம் நீங்கும்.குடல் புண் சரியாகும், வயிற்றுப்போக்கு, வெள்ளைப்போக்கு குறையும். அருகம்புல் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தக்குழாய் தடிமனாகாது தடுக்கிறது.உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் இரண்டுமே கட்டுப்படும்.இதயத்துடிப்பு ஒழுங்காகும், மனஅழுத்தம் குறையும்.நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை வெறும் வயிற்றில்அரைடம்ளர்அருகம்புல் சாறு குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.காலில் எரிச்சல், சோர்வு, கை நடுக்கம் போன்றவை குறையும்.உடல் எடை சீராகும்.

Mar 31, 2026

உடலின் வெப்பம் சமநிலைப்படுத்தும், எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் மூலம் உடலின் வெப்பம் சமநிலைப்படுகிறது. அதீத உடல் சூடு குறைய உதவுகிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது மனதையும் அது பாதிக்கிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையில் மன அழுத்தத்தை குறைத்து, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட உதவுகிறது. உடலில் சூட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறையாக எண்ணெய் குளியல் உள்ளது.தோலில் படிந்துள்ள கழிவுகள் ,தோலில் எண்ணெய் தேய்த்து விடுவதால் நீங்கி, ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலில் ரத்தம் நன்கு பாயும்போது உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மனிதன் தொடர்ந்து நடக்கும்போது கால் மூட்டுகளானது உடல் எடையுடன், அதிர்வுகளையும் தாங்கி இயங்குகின்றன. பல்வேறு காரணங்களால் மூட்டு வலி. வாதம் மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை குறைக்க எண் ணெய் குளியல் உதவுகிறது. வாரம் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் தோல் மென்மையாகி, பளபளப்பாகவும் மாறுகிறது. தோல் நோய்களும் நீங்கி விடுகின்றன. தலைக்கு எண்ணெய் தடவுவதால் முடி வறட்சி, உதிர்தல், பொடுகு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நீங்கிமுடிகருமையாக வளரும்.. நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். தேங்காய் எண்ணெய் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். சிலர் விளக்கெண்ணெயை கூட குளியலுக்கு பயன்படுத்துகின்றனர். சித்த மருத்துவம் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயானது எண்ணெய் குளியலுக்கு உகந்தது என்கிறது

Mar 30, 2026

மருத்துவ குணம் நிறைந்த நுங்கு.

ஒரு பனை இருந்தால் அதைச் சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர். ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின் றன., கோடை காலத்தில் பனை தரும் நுங்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தநுங்கு விற்பனைக்கு வரும். கோடை வெயிலை தாங்கி மனித உடல் குளிர்ச்சி பெற நுங்கு துணை புரிகிறது.நுங்கில் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம். பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்பநிலையை சமநிலைசெய்கிறது. கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும். இதனைதடுப்பதில் நுங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும், உடல் வெப்பத் தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை போக்குகிறது.வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் நோய்கள், கொப்புளங்களை தடுக்க நுங்கு அவ்வப்போது உண்ணலாம். நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Mar 28, 2026

உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு.பழைய சோறு .

சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் ,தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை  சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. ஆனால் இன்று பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்து வரும் இது,உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதால், நம் முன்னோர்களால் அமுதம் என்று போற்றப்பட்டது.பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவக்கூடியவை. குறிப்பாக, குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கக்கூடியவை. பழைய சோற்றில் கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும், அரிதான வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பழைய சோற்றில் உள்ள இந்த நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன.பழைய சோற்றின் புளிப்புச் சுவைக்கு காரணம் அதில் உள்ள லாக்டிக் பாக்டீரியா அமிலம் ஆகும். பழைய சோறு சாப்பிடும்போது, தயிர், உப்பு, சீரகம், சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது சுவையையும், சத்துக்களையும் அதிகரிக்கும்.

Mar 23, 2026

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திராட்சைப் பழம் .

திராட்சை பழத்தில் வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கும் சரும அழகிற்கும் பெரிதும் உதவுகின்றன. இதை உட்கொள்வதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.குறிப்பாக, கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கின்றன. புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் பண்பு கொண்ட திராட்சை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதுடன், இதிலுள்ள லிவோலியிக் அமிலம் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி கூந்தல் உதிர்வை தடுக்கிறது. தினசரி உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.வெற்று வயிற்றில் சாப்பிடும்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த சுத்திகரிப்புக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறதுதிராட்சையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்துகள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 29 30

AD's



More News