சிறுநீரக கற்களை இயற்கையாக வெளியேற்றவும், மஞ்சள் காமாலையின் தீவிரத்தை படிப்படியாக குறைக்க வும் பயன்படக்கூடிய முக்கியமான மூலிகை ரணகள்ளி செடி. இந்த செடியின் ஒரு இலையை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்து, காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு இலைதான் சாப்பிட வேண்டும். அதன்பின் அரை கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தால், சிறு நீரக கல் இயல்பாக சிறு நீரில் வெளியேறி விடும். இதில் டயுரட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், சிறு நீரக கற்களால் ஏற் படும் வலியை குறைக்கவும் இது உதவும்.சிறுநீர் பாதையில் உள்ள தொற் றுகளையும் குணப்படுத்தும். மஞ்சள் பாதிப்பு நோய் இருந்து சிகிச்சை எடுப்பவர்களும் இந்த இலையை 10 நாட்கள் சாப்பிடலாம். நோயின் தீவிரம் குறையும்.சர்க்கரை கோளாறு இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 நாட்களும் கட்டுப்பாட்டில் வைக்கும். 10 நாட்களுக்கு மேல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம். மைக்ரேன் உட்பட எந்தவிதமான தலைவலியாக இருந்தாலும், ரணகள்ளி இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து அரைத்து பற்று போடலாம். ஒரு வாரம் இப்படி செய்யும் போது, தலைவலியின் பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும், நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்துபோகும்.சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள்.தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள் தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும். சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும் அதற்கும் இது நல்ல தீர்வு.
பழங்கால மருத்துவத்தின் பகுதியாகவும், அதன் சக்திவாய்ந்த குணப்படுத்தும் பண்புகளுக்காகவும் இஞ்சி பெயர்பெற்றது.வெதுவெதுப்பான இஞ்சி நீரைக் குடிப்பதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். சளி மற்றும் காய்ச்சல் இஞ்சி நீர் குணப்படுத்தும் .இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இது உடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.வெதுவெதுப்பான இஞ்சி நீரைக் குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவவியையும் போக்கலாம்.வெதுவெதுப்பான இஞ்சி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.மாதவிடாயின்போதுபெண்கள்வெதுவெதுப்பானஇஞ்சிநீரைக்குடிப்பதுதசைப்பிடிப்புமற்றும்அசௌகரியத்தைகுறைக்கவும், கருப்பையின் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது.
பீர்க்கங்காவில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்று நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.இதன் இலை, விதைகள் மற்றும் வேர் என, அனைத்தும்மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வர, நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.மஞ்சள் காமாலை நோய்க்கு, பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில், இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலை சாற்றை பூச,நிவாரணம் கிடைக்கும்.பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது. தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாக பயன்படுகிறது.கண் பார்வை நன்றாக தெரியவும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும், பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தோல் நோயாளிகள் தவறாமல் இதை சேர்த்துக் கொண்டால், விரைவில் குணமடையலாம்.வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதை தடுத்து, வயிற்றில், புண்கள் வராமல் காக்கும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தி ஆகும். இதனை கொல்லாம் பழம் என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தில் கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் பி, இரும்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனை கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி முந்திரி பழத்தில் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அளவை கட்டுப்படுத்துகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.
பன்னீர் ரோஜா இந்திய மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் ரோஜா மலச்சிக்கலை தீர்க்கிறது. இதன் மொட்டுகளை அரைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். பன்னீர் ரோஜா அஜீரணத்தைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. பன்னீர் ரோஜா சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும். பன்னீர் ரோஜாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இளமையை இருக்க உதவியாக இருக்கும். பன்னீர் ரோஜா சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.பன்னீர் ரோஜாவில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும். சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம்.20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,
கருங்காலி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி, அல்சர் பிரச்சனையை தீர்க்க வல்லது. மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் மருத்துவகுணம் கொண்டது.ஒரு பங்கு கருங்காலிக் கட்டையை எடுத்து எட்டு மடங்கு நீரை சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கடுக்காய் தான்றிக்காய்,நெல்லிக்காய் போன்றவைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின் ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை அருந்தி வர உடலிலுள்ள கெட்ட நீரான விஷநீர் வெளியேறும். மற்றும் சளி, காய்ச்சல், நெஞ்சு சளி போன்றவற்றை வெளியேற்றி உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடம்பை சீர்படுத்தும்.இதை உபயோகித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சீர்படும் மற்றும் உடம்பிலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கும், உடம்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடம்பில் தேங்கியுள்ள அதிகப்படியான பித்தத்தை வெளியேற்றுகிறது.கருங்காலி மரத்தின் வேரை நீரில் காய்ச்சி குடித்துவர இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். கருங்காலி மரப்பட்டையின் பொடியை நாவல் பட்டை பொடி, வேப்பம் பட்டை பொடி எடுத்து ஒன்றாக கலந்து அதை நாள்பட்ட மற்றும் ஆறாத புண்ணாகிய புண்ணானது விரைவில் ஆறும்.
இதய ஆரோக்கியத்தை பொருத்தவரை, பல ஊட்டச்சத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டு வருகிறது.பழங்கள், காய்கறிகள்,கடுகு எண்ணெய்,உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது .இதில்ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளதால், இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் இதயத்திற்கு நல்லது. இந்த எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருப்பதால், இதனை பயன்படுத்துவது இதய நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பண்புகள் கடுகு எண்ணெயில் உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதுடன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் தவிர்க்கலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலிகைகளில் மிகுந்த மணம் கொண்டது நன்னாரி.நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தி யன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது.நன்னாரி வேர் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது வெளிநாட்டினருக்கு தெரிந்தும் அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இதனை பலரும் பயன்படுத்துவது இல்லை. அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மூலிகையில் இது மிக முக்கியமான ஒன்று.கொடி வகையை சேர்ந்த நன்னாரியின் வேரானது சித்தா ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமியோபதி மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுகிறது. நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.குடிப்பதற்கு இதமாகவும், சிறுநீர் போக்கை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்த நச்சுக்களை அகற்றிரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. இது உடலின் உள் வெப்பத்தை தணிக்கிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை, கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடிய சில சத்தூட்டங்கள் நன்னாரி வேரில் காணப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதீத வெப்பம் தணிந்துஉடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது.
கொத்தவரை செடி வகை தாவரம்.சீனிஅவரைஎன்றும்அழைப்பர்.செடிமூன்றுமுதல், நான்குஅடிஉயரம்வரைவளரும்.இது, நைட்ரஜன் சத்தை மண்ணில்அதிகரிக்கச் செய்து, வளம் பெருக்கும்.மிதமான சூரிய ஒளியும், ஈரப்பதமானகாலநிலையும் இருந்தால் பலவகைமண்ணிலும் வளரும். இந்தியாவின்வடமேற்கு பகுதி மற்றும் அண்டை நாடானபாகிஸ்தானில் அதிகம் பயிரிடப்படுகிறது.கொத்தவரையில் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறைந்த எரிசக்தியும், அதிக நார்ச்சத்தும் உடையது. புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் சத்துகளும் நிறைந்துள்ளன.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இதமான உணவுகளில் ஒன்று. உடல் எடை, கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலை போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து,ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும். இதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவும். போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.கொத்தவரையில்உள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.