மும்பை அணி, பஞ்சாப் அணி, நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் மோதியது. 'டாஸ்' ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பீல்ட்ங் தேர்வு செய்தார். மும்பை அணி ,20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சைப்ரஸ் நாட்டில் கடந்த 3 வாரங்களாக நடந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் 14-வது மற்றும் கடைசி சுற்றில் ரஷியாவின் கேத்ரினா லாக்னோவை தோற்கடித்த வைஷாலி 8½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து ரூ.31 லட்சம் பரிசுத் தொகையைதட்டிச்சென்றார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்ற வைஷாலி, ஆண்டின் இறுதியில் நடக்கும் பெண்கள் உலக செஸ் சாம்பி யன்ஷிப்பில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஜூ வென் ஜூனுடன் மோதும்வாய்ப்பை பெற்றுள்ளார். சாதனை படைத்த 24 வயதான வைஷாலி நாளை மறுதினம் சென்னை திரும்புகிறார். 5 முறை உலகசாம்பியனான செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டியுள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஷிப்புக்கு தகுதிபெற்றதன்மூலம் கனவு நனவாகி இருப்பதாக கூறியுள்ளார்.
விக்டர் ஆக்சல்சென்டென்மார்க்கை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீரர். நம்பர் ஒன் வீரரான ஆக்சல்சென் 2020 மற்றும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.2017 மற்றும் 2022-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பிலும், 2020, 2022-ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனிலும், ஐரோப்பிய சாம்பி யன்ஷிப்பில் ஒற்றையரில் 3 முறையும், அணிகள் சாம்பியன்ஷிப்பில் 6 முறையும் மகுடம் சூடியுள்ளார். தரவரிசையில் 183 வாரங்கள் 'நம்பர் ஒன்இடத்தில் இருந்தார் . சீனாவின் லின்டானுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இருமுறை மகுடம் சூடிய வீரர் இவர்தான்.விக்டர் ஆக்சல்சென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதுகுவலி பிரச்சினையால் எந்த போட்டியிலும் .விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். தனது 32-வது வயதிலேயே பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 23-வது ஆட்டத்தில் எதிர் கொண்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. லக்னோ அணி 20 ஓவரில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பெங்களூரு அணி 15.1 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 149 எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூர் அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா அணியும் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் மோதின. 'டாஸ்' ஜெயித்த கொல்கத்தா கேப்டன் அஜிங்யா ரஹானே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுக்கு 160 ரண்ணுக்குள் விழ்ந்தது. சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மாதந் தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை வாக்கெடுப்பு வாயிலாக (ஐ.சி.சி.) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்துக்கானசிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன் சஞ்சுசாம்சன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க - பேட்ஸ்மேன் கனோர் எஸ்டர் ஹய்ஜென் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்களில் ரசிகர்கள் மற்றும் விருதுக்கான கமிட்டியினர் அளித்த வாக்குகள்அடிப்படையில் சஞ்சு சாம்சன் விருதுக்கு தேர்வானார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் 3 அரைசதம் உள்பட 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதுக்கு தேர்வானார். அவருக்கு முதல்முறை யாக ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை பெற்றுக் கொடுத்துள்ளது.
கிரிக் கெட் லீக் தொடர் நேற்று, மும்பை யில் உள்ள வான்கடே மைதானத்தில் , நடந்த போட்டியில் மும்பை, பெங் களூரு அணிகள் மோதின.'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது.மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டு 222 ரன்களே எடுத்தது.பெங்களூரு அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி, குஜராத் டைட்டன்சை ,லக்னோவில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டது.'டாஸ்' ஜெயித்த குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. குஜராத் அணி 18.4 ஓவர்களில், 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று மோதின. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி, ஓவர் எதுவும்குறைக்கப்படவில்லை. 'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். 20 ஓவர்களில் பெங்களுரூ அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் /அணி 202 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. நான்காவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
.பெண்கள் அணிகளுக்கான 6 அணிகள் பங்கேற்றுள்ள ,பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி டெல்லியில் ,நேற்றுநடந்த ஆட்டத்தில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. இந்திய வீராங்கனைகள் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் அனு விஜின் கான்டோரையும், சஹஹா யமலாபள்ளி 6-0, 6-0 என்ற நேர்செட்டில் ஜர்கல் அல்டன்சர்னாயையும் ஒற்றையர் ஆட்டங்களில் தோற்கடித்தனர். இந்தியாவின் வைஷ்ணவி அட்கர்-ருதுஜா போசாலே இணை 6-1, 6-0 என்ற நேர்செட்டில் கோங்கோர்சுல் அல்டர்கிஷிக்-ஜர்கல் அல்டன்சர்னா ஜோடியையும் இரட்டையர் பிரிவில் தோற்கடித்தது. இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ,மங்கோலியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.