'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம்' என்பர். இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி அருகே கணக்கபிள்ளைவலசை வேல்மலை யில் அமைந்துள்ளது, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவில் சுமார் 1300 ஆண்டு களுக்கு முன்பு வேல் மலையில் ஆதிநாத சித்தர் வாழ்ந்து வந்தார். சிறந்த தவசீலரான இவர் முருகனின் திருப்பாதங் கள் தனது சிரசின் மீது எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பி பல ஆண்டுகள் தவம் புரிந்தார். அவரது வேண்டுதலுக்கு இணங்க முருகப்பெரு மான் பாலகனாக அவருக்கு காட்சி தந்து முக்தியளி தார். அவரது ஜீவசமாதி பீடத்தின் மீது முருகப்பெரு மான், பாலசுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கின்றார்.முன்பொரு காலத்தில் குற்றாலநாதர் கோவில் வைணவ ஆலயமாக இருந்தது. அப்போது பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், ஹரி யும் சிவனும் ஒன்று என் பதை உணர்த்த எண்ணி னார். அதன்படி, முருகன் ஆணைக்கு இணங்க மகாவிஷ்ணுவை பிரார்த் தனை செய்து குற்றா லத்தை சிவதலமாக மாற்றினார்.பின்னர் அகத்தியரை வேல்மலைக்கு வருமாறு முருகப்பெருமான் அழைத்தார். உடனே குற்றாலம் பொங்குமாங் கடலில் மூழ்கிய அகத்தியர், தனது தவ வலிமை யால் வேல்மலையில் இருந்த சுனை வழியாக வெளியே வந்து முருகப் பெருமானை வழிபட்டார்.எனவே வேல்மலையை அகத்தியர் அமர்ந்த மலை' என்றும் அழைக்கின்றனர்.
அர்த்தமுள்ள இந்துமதம்' தோன்றிய வரலாறும்" -மற்றும் தன்னைக் காப்பாற்றிய பெரியவா மீது கண்ணதாசன் இயற்றிய கவிதையும்-'"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்றதீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்துகூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!"சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
முன் காலத்தில் சுசீந்திரம் என்ற ஊர், ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது. அங்கு அத்ரி முனிவர், தனது மனைவி அனுசூயாவுடன் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும், ஒரே இடத்தில் தரிசிக்க நினைத்த நாரதர், அதற்காக ஒரு கலகத்தை நடத்த முன்வந்தார். அந்த நேரத்தில் மும்மூர்த்திகளின் மனைவியரான பார்வதி,லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு, தங்களை விட கற்பில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் ஏற்பட்டிருந்தது.நாரதர் தன்னுடைய ஆசையின் வாயிலாக மும்பெரும் தேவியரின் கர்வத்தையும் அகற்ற எண்ணினார். முப்பெரும் தேவியர்களை சந்தித்த நாரதர், அவர்களிடம் அனுசூயாவின் பெருமையைப் பற்றி புகழ்ந்தார். இதனால் மூன்று தேவியர்களும், தங்கள் கணவர்களை அனுசூயாவின் இருப்பிடம் அனுப்பி, அவளது பதிவிரதை தன்மையை சோதிக்கும்படி அனுப்பினர். அதன்படி ஞானாரண்யம் வந்த மும்மூர்த்திகளும், முதியவர் வேடத்தில் அனுசூயாவின் ஆசிரமம் முன்பு நின்று யாசகம் கேட்டனர்.மேலும் 'ஆடை அணிந்தவர்களிடம் நாங்கள் உணவை ஏற்பதில்லை" என்றும் கூறினர். இதையடுத்து அனுசூயா தேவி, தன்னுடைய தவ வலிமையால், அத்ரி முனிவரின்கமலண்டல நீரைக் கொண்டு, மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினார். பின்னர் அவர்கள் விருப்பப்படியே ஆடையின்றி அமுது ஊட்டி பசியாற்றினார். பின்னர் மூன்று கடவுளரையும், தொட்டிலில் கிடத்தி தூங்கச் செய்தார். இந்நிலையில் தங்கள் கணவரைக் காணாமல், முப்பெரும் தேவியரும் பதறினர். நடந்ததை அறிந்ததும், உடனடியாக அனுசூயாவிடம் வந்து, தங்களின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, தங்கள் கணவர்களை சுய உரு பெறச் செய்யும்படி வேண்டினர். அதன்படியே அனுசூயா, மும்மூர்த்திகளுக்கும் சுய உரு வழங்கினார்.இதையடுத்து மும் மூர்த்திகளும் தங்களின் மனைவியருடன் ஒரே இடத்தில் காட்சி கொடுத்தனர். அந்தக் காட்சியை நாரதரும் கண்டு மகிழ்ந்தார். பின்னர்அங்கிருந்த கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்கள் தோன்றின. தற்போது சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தாலும், ஆதிக் கோவிலான கொன்றையடி நாதர் சன்னிதி, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கருவறையில் தாணுமாலயன் என்ற பெயரில் மும்மூர்த்திகளும் ஓர் உருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
உ த்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது.கேதாரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்திற்கு சாலை வழி யாக செல்ல முடியாது. கவுரி குண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக் கிறது,புகுர்ந்த் பைரவர் கோவில், இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கிய மானவராக கருதப்படும். பைர வர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந் துள்ள இந்த கோவிலை, கேதார் நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலய மும் அழகாகத் தெரியும்.கேதாரீஸ்வரர் கேதார்நாத் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவ தற்கு முன்பாகவே, மலை உச்சி யில் உள்ள இந்த பைரவர் கோவி லுக்கு பூஜைகள் செய்யப்படு கின்றன. ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுந்த மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.
புத்த மதம் - விஹாராம் கிறிஸ்துவ மதம் - தேவாலயம் இந்து மதம் - கோவில் இஸ்லாம் மதம் - மசூதி சமண மதம் -- பசாதி ஜூடாய்ஸ மதம் - சினகாக் ஜொராஸ்டிரிய மதம் - அகியாரி
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஒசூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை.இங்கு கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது. இது ஒரு நாக தோஷ பரிகார தலமாகும். "கவி" என்றால் கன்னட மொழியில் 'குகை' என்று பொருள். இது ஒரு குகைக் கோவில் என்பதால், மேல் கூரை மிகவும் தாழ்வாக இருக்கும். எனவே பக்தர்கள் இறைவன் முன் உட்கார்ந்தபடிதான் பிரார்த்தனை செய்ய முடியும். இந்தக் கோவில் ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக்கோவில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.சில படையெடுப்பின் காரணமாக, இந்த ஆலயமும், அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளும் சிதிலமடைந்தன. இதனால் கோவிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. பல ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று இந்தக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளில் இக் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சாலை வசதி இல்லாததாலும், விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாகவும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்திருந்தது. ஆனால் தற்போது சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில்உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொங்கு மண்டல பகுதியில் அமைந்த ஏழு சிவத்தலங்களில் முதன்மை யா னது என்ற பெருமை கொண்டது. இதன் புராதனப் பெயர் திருக்கொடிமாடச்செங்குன்றுர் ஆகும். திருச்செங் கோட்டை இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பார்கள்.சிவன் கோவில்களில் சிவ பெருமான் லிங்க திரு மேனியாகவும், சக்தி தனிச் சன்னதியிலும் இருப்பதே வழக்கம். ஆனால் திருச்செங் கோடுமலையில் மட்டும் சிவனும். சக்தியும் ஆண் பாதி, பெண்பாதி உருவமான அர்த்தநாரி யாக காட்சி அளிப்பது விசேஷமான ஒன்று. திருச்செங்கோடுமலை 6 கிலோமீட்டர் பரப்பள வுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இரு மலைகள் ஒன்றாக இணைந்து இரு சிகரங் களை கொண்டது போல பிரமாண்டமாக காட்சி தருகிறது. இந்த மலையின் மீதுதான் அர்த்தநாரீஸ்வரர் கோவில் எழிலுற அமைந்துள்ளது. 1,901 அடி உயரம் கொண்ட மலைமீதுள்ள கோவிலை அடைய 1,200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். கோவிலின் தலவிருட்சம் இலுப்பை மரம் ஆகும்.பிருங்கி முனிவர், சிறந்த சிவ பக்தர். அவர் சிவனை மட்டுமே வழிபடுவார். கயிலாயத்தில் ஈசனின் அருகில் இருக்கும் உமாதேவியைக் கூட வழிபடமாட்டார். அமை யப்பன் இருவருக்கும் இடையே வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து சிவனை மட்டுமே வழிபடுவார்.இதனால் கோபம் அடைந்த பார்வதி, "முனிவரே சக்தியாகிய என்னை அவ ம தித்ததால் சக்தி இழந்துபோவீர் " என சாபமிட்டாள். உடனே பிருங்கி முனிவர் சக்தி இழந்து நிற்கக்கூட முடியா மல் கீழே விழுந்தார். உடனே சிவபெருமான், "நானும் சக்தி யும் ஒன்றுதான். சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லாமல் சக்தியும் இல்லை” எனக்கூறி உமா தேவிக்கு தன் இடப்பாகத்தில்இடம்கொடுத்தார்.அப்படி அவர்கள்இருவரும்இணைந்தவடிவமே 'அர்த்தநாரீஸ்வரர்' ஆகும். 'அர்த்தம்' என்றால் 'பாதி' என்றும் 'நாரி' என்றால் 'பெண்' என்றும் பொருள். பாதி பெண் ணாக அமைந்த வடிவம் என்பதால் இப்பெயர் பெற்றது திருச்செங்கோடு.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகிலுள்ள கட்டீல் என்னும் இடத்தில் துர்காம்மா கோயில் உள்ளது. யட்சகானம் என்னும் வழிபாடு செய்தால் இவள் அருளால் விருப்பம் நிறைவேறும்.இங்கு நிலவிய பஞ்சத்தைப் போக்க ஜாபாலி முனிவர் தவத்தில் ஈடுபட்டார். இதன் பயனாக காமதேனுவின்(தேவலோக பசு) மகள் நந்தினியை பூமியில் தங்கி வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளையிட்டார். ஆனால் பூமிக்கு வர நந்தினிக்கு மனமில்லை. அத்துடன் தன்னை பூலோகத்திற்கு அனுப்பக் கூடாது என பார்வதியை சரணடைந்தது. “நீ பசுவாகச் செல்ல வேண்டாம். புனித நதியாக மாறி மக்களுக்கு சேவை செய்" என உத்தரவிட்டாள் பார்வதி. அதன்படி நேத்திராவதி என்னும் நதியாக நந்தினி இங்கு ஓட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அருணாசுரன் என்பவன், பூவுலகில் அட்டகாசம் செய்து வந்தான். அவனிடம் இருந்து உயிர்களைக் காக்கும்படி முனிவர்கள் வேண்டினர்.அசுரனை வதம் செய்யும் நோக்கில் மோகினியாக பூமியில் தோன்றினாள் பார்வதி. அவளது அழகில் மயங்கிய அசுரனும் பின்தொடர்ந்தான். நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்புறம் ஒளிவது போல பார்வதி நாடகமாட, அசுரன் அவளை பிடிக்க முயன்றான். வண்டு வடிவெடுத்து அசுரனை அழித்தாள் பார்வதி. உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர். உக்கிரம் தணிந்த அவள் ஆற்றின் நடுவில் 'துர்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோயில் கொண்டாள்சிவலிங்க வடிவில் இருக்கும் இவளுக்கு ''துர்காம்மா' என்றும் பெயருண்டு. நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால் இத்தலம் 'கடில்' எனப்பட்டது. 'கடில்' என்றால் 'மடி'. தற்போது 'கட்டீல்' எனப்படுகிறது.கோயிலின் பின்புறம் ஆறு இரண்டாக பிரிந்து கோயிலைச் சுற்றி ஓடுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக தீர்த்தம் தரப்படுகிறது. நோய், குடும்பத் தகராறு,சொத்து பிரச்னை தீர ,இளநீர் காணிக்கை செலுத்துகின்றனர். அம்மனுக்கு,அணிவிக்கப்படும் மாலையில் உடுப்பி சங்கரபுரம் மல்லிகை முதலிடம் வகிக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் கிடைக்க மல்லிகைப்பூக்களை தொடுத்து அணிவிக்கின்றனர். கணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாக தேவதை, பிரம்மா சன்னதிகள் உள்ளன.
சிவபெருமான் வழிபாட்டிற்குரிய பொருட்களில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை, திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது.இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக வும், வில்வத்தைப் போற்றுகிறார்கள்.மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியபோது, அவ ரது கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக புராணங்கள் கூறுகின் றன. மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக வில் வமரம் உள்ளது.வில்வ மரத்தின் கிளைகள் வேதங்களாகவும், இலைகள் சிவசொரூப மாகவும், வேர்கள் கோடான கோடி ருத்திரர்களாகவும் பாவிக்கப்படுகின்றன. சிவனுக்கு பிரியமான வில் வத்தை கொண்டு, அவரை அர்ச்சிப்பதன் மூலம் அவரது திருவருளை எளிதாகப் பெறலாம். முறைப்படி விரதம் இருந்து வில்வ மரத்தை பூஜிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனை அர்ச்சிப்பது, லட்சம் தங்க மலர் களைக் கொண்டு அர்ச்சிப்பதற்கு சமம் ஆகும்.துளசி மாடம் போல், வீட்டில் வில்வ மரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதன்படி ஒருவர் தன்னுடைய வீட்டில் வில்வ மரத்தை வளர்ப்பது என்பது, அஸ்வமேத யாகம் செய்த தற்கான பலனைக் கொடுக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக் கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பெரும் பாக்கி யம் ஏற்படும்.அர்ச்சனை வில்வத்தால் செய்யும் போது, சிவபெருமா னோடு நாம் இன்னும் நெருங்க முடியும், அவரது அருளைப்பெற முடியும். ஏழரைச் சனியின் பிடியில் இருப்பவர்கள், வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து வழிபடுவது சிறந்தது. இத்தகையை சிறப்புமிக்க வில்வ மரத்தின் இலைகளை, சோமவாரம் (திங்கட்கிழமை), சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மரத்தில் இருந்து பறிக் கக்கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக்கூடாது என்பதும் ஐதீகம்.
திருவாரூர் - பிறக்க முக்தி. காசி - இறக்க முக்தி. திருவண்ணாமலை - நினைக்க முக்தி. சிதம்பரம் - தரிசிக்க முக்தி. வேதாரண்யம் - தீர்த்தமாட முக்தி. மதுரை - கூற முக்தி. அவினாசி- கேட்க முக்தி.