25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆன்மீகம்

Jul 10, 2026

கதிர்காமம் முருகன்.

முருக வழிபாட்டின் பழமையை பறை சாற்றும் தலம் கதிர்காமம்.இலங்கையின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தில் இக்கோயில் உள்ளது கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி திரைக்குப் பின்புறம் நின்று இங்கு பூஜை செய்கிறார்கள். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் கருவறையில் முருகன் சிலை கிடையாது. அங்குள்ள பெட்டிக்கே பூஜை நடக்கும். அதை பக்தர்கள் காண முடியாது.சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர் காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி,கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை திருமணம் புரிந்த முருகன் தனக்கு விருப்பமான இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார்.இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார்.காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். கதிர்காம மலையிலிருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர்.இங்குள்ள பழங்குடி வேடுவர்கள் ,முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர்.அருணகிரிநாதர் 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என பாடியுள்ளார். கதிர்காமத்தில் பூஜை செய்யும் கப்புறாளைமார் என்னும் சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல்கள் என்கின்றனர்.எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி பெற விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதமிருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் 2100 ஆண்டுகளுக்கு முன் கோயில் எழுப்பினான்.விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) சன்னதி தெற்கு நோக்கியும், வள்ளி சன்னதி வடக்கு நோக்கியும்எதிரெதிரில்உள்ளன.இங்கு முருகனின்கருவறைவண்ணத்திரையால்மூடப்பட்டிருக்கும்.அதில்வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை 'கப்புறாளைமார்' திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பிப்பர்.

Jul 03, 2026

அனுமந்தபுரம் வீரபத்திரர்.

தட்சனின் யாகத்தை நிறுத்த வீரபத்திரரை அனுப்பினார் சிவபெருமான். தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்ட, அவனது தலை யாகத்தீயில் விழுந்தது. இதைக் கண்ட தட்சனின் தந்தையாகிய பிரம்மாவின் ஆணையால் ஆட்டின் தலை தட்சனுக்குப் பொருத்தப்பட்டது. அங்கிருந்து சினத்துடன் புறப்பட்ட வீரபத்திரர் பூலோகத்தில் அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி சாந்தம் அடைந்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அமாவாசையன்று தீர்த்தத்தில் நீராடி சுவாமி வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து 10 கி.மீ.,

Jun 26, 2026

நந்தி பிறந்த ஊர் ஸ்ரீசைலம்.

நந்தி பிறந்த ஊர், 51 சக்தி பீடங்களில் சைல சக்தி பீடம், சித்தி, புத்தியை விநாயகர் மணந்த தலம் என பல பெருமைகளைக் கொண்டது ஸ்ரீசைலம். ஜோதிர்லிங்க தலத்தில் ஒன்றாகவும், தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் உள்ள இக்கோயில் ஆந்திர பிரதேசம், நந்தியால் மாவட்டத்தில் உள்ளது.சிலாதர் என்னும் மகரிஷி குழந்தை வரம் வேண்டி தவமிருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்னும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.ஒருமுறை குழந்தைகளைக் காண வந்த சனகாதி முனிவர்கள், 'குழந்தையான நந்தி சிலகாலம் மட்டுமே இந்த பூமியில் வாழ்வான்' என தெரிவித்தனர். தந்தையான சிலாதர் மிகவும் வருந்தினார். இதையறிந்த நந்தி, 'தந்தையே ... கலங்காதீர்கள். தவம் இருந்து சாகாவரம் பெறுவேன்' என சபதமிட்டு தவம் புரிந்து சிவனுக்கு வாகனமாகும் பாக்கியம் பெற்றார். கைலாய மலையில் தன் அனுமதி இல்லாமல் யாரும் சிவனை பார்க்க முடியாது என வரம் பெற்றார். இதற்கிடையில் நந்திதேவரின் தம்பி பர்வதனும் தவத்தில் ஈடுபட்டு பர்வத மலையாக மாறினார்.இந்த பர்வத மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் கொண்டார். கிழக்கு நோக்கிய கோயிலில் நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. வாசல் அருகிலுள்ள மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. நந்தி தவம் செய்த இடமான 'நந்தியால்'' மலை அடிவாரத்தில் உள்ளது.முன்பு மல்லிகாபுரி என்னும் இப்பகுதியை ஆட்சி செய்த சந்திரகுப்தனின் மகளான சந்திரரேகா மல்லிகைப் பூவால் சிவனை பூஜித்தாள். இதனால் சுவாமிக்கு 'மல்லிகார்ஜுனர்' எனப் பெயர் ஏற்பட்டது.பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு இங்கு அபிஷேகம் செய்யலாம்.இவரை ஒருமுறை தரிசித்தால் கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல ஆண்டு தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாலும் கிடைக்கும் புண்ணியம் நம்மைச் சேரும்.அம்மனின் திருநாமம் பிரமராம்பாள். அம்மன் சன்னதிக்குச் செல்ல 30 படிகள் ஏற வேண்டும்.துறவிகள், யோகிகள் தவம் செய்வதால் இத்தலத்திற்கு 'தட்சிண கைலாசம்' என பெயருண்டு. கிருத யுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமரும், துவாபர யுகத்தில் பாண்டவர்களும், கலியுகத்தில் ஆதிசங்கரரும், சத்ரபதி சிவாஜியும் பூஜை செய்துள்ளனர். ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீகிரி,ஸ்ரீசைலம் என அழைக்கப்படும் இத்தலத்திற்கு வந்தால் மோட்சம் கிடைக்கும்.

Jun 19, 2026

வரம் தரும் வள்ளல் சிந்தாமணி விநாயகர்.

கேட்டதை எல்லாம் அள்ளித் தரும் வள்ளல் தான் சிந்தாமணி விநாயகர். இவர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கேதார் காட் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.சிந்தாமணி என்ற தெய்வீக ரத்தினம் கபில முனிவரிடம் இருந்தது. கணர் என்னும் மன்னர் எப்படியாவது அதை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் முனிவரிடம் இருந்து திருடினார். விநாயகரின் திருவடியில் சரணடைந்தார் கபில முனிவர். தன் பக்தனுக்கு அருள்புரிய மாறுவேடத்தில் வந்த விநாயகர் சாதுர்யமாக பேசி ரத்தினத்தை வாங்கி கபிலரிடம் கொடுத்தார். மகிழ்ச்சியில் திளைத்த கபிலர் அதை விநாயகருக்கே காணிக்கையாக கொடுத்தார். இதனால் 'சிந்தாமணி வினய்' எனப் பெயர் பெற்றார்.சுயம்புவான விநாயகர் எட்டுக்கைகளுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைக்கும். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். இதனால் இவர் 'விக்ன ஹர்த்தா' (தடைகளை நீக்குபவர்), 'சங்கத் மோச்சன்' (தொல்லைகளை நீக்குபவர்) என்றும் அழைக்கப்படுகிறார். கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் கேது சாந்தி பூஜை செய்கின்றனர்.

Jun 12, 2026

வாட்ச் கட்டும் கடவுள்.

குஜராத்மாநிலம் கர்பூர் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுவாமி நாராயண் கோபிநாத் கோயிலில் கிருஷ்ணர் கையில் வாட்ச் அணிந்திருக்கிறார். இதன் பின்னணியில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.ஐம்பது ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஒருவர் இங்கு வந்தார். அவரிடம் அர்ச்சகர் இங்குள்ள கிருஷ்ணர் சிலை உயிரோட்டமானது என்றார். அப்போது ஆங்கிலேயர் தன் கை கடிகாரத்தை காட்டி, ''உடம்பின் நாடி துடிப்பால் ஓடும் வாட்ச் இது. கிருஷ்ணர் கையில் இதைக் கட்டுவோம். அப்போதும் வாட்ச் ஓடினால் நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன்" என்றார்.கையில் இருந்து வாட்சை கழற்றினார். அது நின்று போனது. அப்படியே அதை கிருஷ்ணர் கையில் கட்டினார் அர்ச்சகர். ஓட ஆரம்பித்தது. இன்றும் கிருஷ்ணர் கையில் இந்த வாட்ச் உள்ளது. தினமும் அலங்காரம் செய்யும் போது அர்ச்சகர் வாட்சை கழற்றி மறுபடியும் அணிவிப்பார். கழற்றும்போது நிற்கும் வாட்ச், கிருஷ்ணருக்கு அணிவிக்கும் போது ஓடத் தொடங்கும்.

Jun 05, 2026

ஆனைமலை மாசாணியம்மன்.

ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் குறுநில மன்னரான நன்னனுக்குரிய மாமரம் ஒன்று இருந்தது. அதில் பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என்பது மன்னரின் கட்டளை.ஒருநாள் ஆற்றில் நீராடிய கர்ப்பிணி, ஆற்றில் மிதந்த மாம்பழத்தை எடுத்து சாப்பிட்டாள். அவளுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன்.ஊரார் அவளுக்கு மயானத்தில் சயனகோலத்தில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினார். உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம்,திரிசூலம், உடுக்கை ஏந்தியிருக்கிறாள். நீதி தெய்வமான இவளை அமாவாசையன்று வழிபட பலன் இரட்டிப்பாகும்.பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,

May 29, 2026

ஓரியூரில் உள்ள சேயுமானார்  கோவில்.

மதுரையில் அருள்புரியும் சொக்கநாதர் தன் அடியவர்களுக்காக 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அதில் விருத்த குமார பாலரான திருவிளையாடல் நிகழ்த்தியது ஓரியூரில் உள்ள சேயுமானார் என்னும் இத்தலத்தில் தான்.விருபாட்சர், சுபவிரதை தம்பதிக்கு கவுரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சிவபக்தையான கவுரி திருமண வயதை அடைந்தாள். வைணவ இளைஞன் ஒருவனுக்கு மகளை மணம் செய்து வைத்தார் விருபாட்சர். அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவளை புறக்கணித்தனர்.இளம் வயதிலேயே கவுரி முக்தியை வேண்டி சிவனை சரணடைந்தாள். ஒருநாள் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து விட்டு வெளியே சென்றனர். அந்த நேரத்தில் அடியவர் வடிவில் வந்த சிவன் அவளை விடுவித்தார். அடியவர் வடிவில் நின்ற சிவனுக்கு வயிறார உணவு அளித்தாள் கவுரி: குழந்தையாக மாறிய சிவன் அவளுக்கு முக்தி அளித்தார்.குழந்தை வடிவில் காட்சியளித்த சிவனே இக்கோயிலில் மூலவராக இருக்கிறார்.1300 ஆண்டுக்கு முந்திய தலமான இது இயற்கை சீற்றத்தால் சிதிலமானது. திருப்பணி நடத்த முயற்சித்த போது அந்நிய மதத்தினரின் கெடுபிடியால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் திருப்பணியில் ஈடுபட்டு கோயிலை முழுமையாக்கினார் சிவபக்தையானபெங்களூரு அறம் வளர் நாயகி 'ஓரியூரில் உகந்து இனிதருளிப் பாரிகும் பாலகன் ஆகிய பரிசும்' என இத்தலத்தில் சிவபெருமான் விருப்பமுடன் குடியிருக்கிறார் என்கிறார் மாணிக்கவாசகர்.சுவாமியின் பெயர்சேயுமானார், அம்பிகையின்பெயர்மட்டுவார்குழலியம்மை.பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நால்வர், பிரம்மா, *துர்கை சன்னதிகள் உள்ளன.இங்கு வழிபட்டால் இளமையுடன் வாழலாம்.குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

May 22, 2026

'ஆரன்முழா குறளப்பன் ' திவ்ய தேச  பெருமாள் குறை தீர்ப்பவர்.

கேரளா  பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முழா திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அர்ஜூனன் பூஜித்த குறளப்பன் இங்கு மூலவராக இருக்கிறார். இவரை வழிபட்டால் நம் குறை அனைத்தும் தீரும். பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது கோளப்பகுதிக்கு வந்தனர். பம்பா நதிக்கரையில் நிலக்கல் என்னுமிடத்தில் பெருமாள் சிலை ஒன்றை அமைத்து அர்ஜூனன் வழிபட்டான். பின்னர் சிலையை ஆறு மூங்கில்களால் ஆன கட்டுமரம் ஒன்றில் வைத்து பம்பை ஆற்றில் விட்டான். கரை ஒதுங்கும் இடத்தில் யாராவது கோயில் கட்டட்டும் என்பதே அவனது எண்ணம். மலையாளத்தில் 'ஆறு முழா' (ஆறு மூங்கில்) என்பதற்கு 'ஆறு மூங்கில்' எனப் பொருள்.சிலையைச் சுமந்த கட்டுமரம் ஆறு மூங்கில்களால் ஆனதால் இத்தலம் 'ஆறுமுழா எனப்பட்டது. காலப்போக்கில் 'ஆரன்முழா' என மாறியது.சிலை கரை சேர்ந்த இடத்தில் பம்பை நதிக்கரையில் இளம்துறவி ஒருவர் வாழ்ந்தார். பெரும் பள்ளமாக இருந்த இப்பகுதியைத் தன் தவசக்தியால் மேடாக்கி கோயில் கட்டினார்.கேரளாவில் மற்ற கோயில்களை விடவும் உயரமான இடத்தில் கோயில் இருப்பது இங்கு மட்டுமே. கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயரில் மூலவர் இருக்கிறார். தாயார் பெய பத்மாசினி. நம்மாழ்வார் இங்கு பாடியுள்ளா பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு பெருமாள் வாமன மூர்த்தியாக காட்சியளித்துள்ளார்.'வல்லங்களி' எனப்படும் பிரபலமானபடகு போட்டி உருவானது இங்கு தான்.ஆண்டு தோறும் ஆவணி மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பம்பை நதியில் போட்டி நடக்கும். அர்ஜூனனின் பிறந்த நாளான அன்று வல்லங்களி கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுக்கும் மேலாக இப்போட்டி நடக்கிறது.இங்குள்ள வன்னி மரத்தின் காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி வீசினால் நோய் தீரும்.

May 15, 2026

மகிழ்ச்சி நிலைக்க குழித்துறை  மகாலட்சுமி கோயில்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள குழித்துறையில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் பணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.300 ஆண்டுக்கு முன்பு கேரளாவில் இருந்து தேவியர் சிலைகள் குழித்துறை பகுதிக்கு வந்தன. அதில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு அருகில் கிழக்கு நோக்கி சாமுண்டிதேவி கோயிலும், சற்று தொலைவில் வடக்கு நோக்கி மகாலட்சுமி கோயிலும் அமைக்கப்பட்டன.மகாலட்சுமிக்கு தனி கோயில் இருப்பது மிக அபூர்வம். நின்ற நிலையில் உள்ள மகாலட்சுமியின் சிலை 3/4 அடி உயரம் கொண்டது. தாயாரின் கருணையான முகமும், வலது கையில் கொடுவாளும், இடது கையில் பாசக்கயிறும், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரமும்,தாமரை மீதமர்ந்த கோலமும் தரிசிப்போரின் பாவத்தை போக்கி விடும். கன்னி மூலையில் கணபதி, இடதுபுறம் பூதத்தான் சன்னதிகள், வெளிப்புறம் மடப்பள்ளி, அருகில் பஜனை மடம் உள்ளன.வெள்ளி அன்று மகாலட்சுமிக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்தால் பணப் பிரச்னை வராது. பணப்புழக்கம் அதிகரிக்கும். காஞ்சி மஹாபெரியவர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பகவதி சேவை (ஐஸ்வர்ய பூஜை) தனலட்சுமி பூஜை, சுயம்வர அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், சண்டிகா ஹோமம் போன்றவை நடக்கின்றன.

May 08, 2026

திருப்பம் உருவாக. திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில்.

ராமானுஜர் திருப்பணி செய்த தலம் மைசூரு அருகிலுள்ள திருநாராயணபுரம் திருநாராயணர் கோயில். அடிவாரத்தில் திருநாராயணரும், மலை மீது யோகநரசிம்மரும் அருள்புரிகின்றனர். இவர்களை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். நல்ல திருப்பம் உருவாகும்.மகாவிஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு சிலை ஒன்றைப் பெற்றார் பிரம்மா. அதை மகனான சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே இங்கு நாராயணப் பெருமாளாக இருக்கிறார். சாண்டில்ய மகரிஷி இங்கு தவமிருந்து பெருமாளை பத்ரி நாராயணராகத் தரிசிக்கும் பேறு பெற்றார். இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரத நந்தினி என்னும் பக்தை, மூலவரின் திருவடியில் இருக்கிறாள். உற்ஸவர் செல்வ நாராயணர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இருக்கிறார். யதுகிரித் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதுார், திருக்கோஷ்டியூர் போலவே இங்கும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் 'பேசும் யதிராஜர் (ராமானுஜர்)' எனப்படுகிறார். இங்குள்ள இசைத்துாண் காண்போர் வியக்கும் விதத்தில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. பிரகலாதனுக்காக விஷ்ணு, நரசிம்மராக அவதரித்து இரண்யனைக் கொன்றார். தந்தை இறக்க காரணமாக இருந்த பிரகலாதனுக்கு 'பிதுர்ஹத்ய தோஷம்' ஏற்பட்டது. இதைப் போக்க இத்தலத்தில் தவம் புரிந்தார். அவருக்கு யோக நிலையில் காட்சியளித்து நரசிம்மர் தோஷம் போக்கினார்.அவரேஇங்கு வீற்றிருக்கிறார்.அடிவாரத்திலுள்ளதீர்த்தக்கரையில்பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன. 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டைக் கோயிலை அடையலாம்.நரசிம்மர் சன்னதியின் முன் நவக்கிரகங்கள் ஒன்பதும் படிக்கட்டுகளாக உள்ளன. இதில் ஏறி யோக நரசிம்மரைத் தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News