ஒடிசாவின் கோனார்க்கில் இருந்து 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரது சிலை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவரது 12 பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே. 1/ மித்ரயா - அனைவரின் நண்பர்சூரியக் கடவுள் அனைத்து உயிரினங்களுக்கும் பாசத்தையும் உதவியையும் குறிக்கிறது. 2/ ராவயா - அனைவராலும் போற்றப்படுகிறார்அவரது கருணை மற்றும் ஒளிக்காக அனைவரும் அவரை மதிக்கிறார்கள். 3/ சூரியயா - அனைவருக்கும் வழிகாட்டிசூரியன் பகலின் அடையாளமாகவும் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் இருக்கிறார். 4/ பனவே - அழகைக் கொடுப்பவர்அவரது கதிர்கள் இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் அழகைக் கொண்டுவருகின்றன. 5/ ககாயா - புலன்களைக் கட்டுப்படுத்துபவர்சூரியன் நமது புலன்களை எழுப்பி சமநிலைப்படுத்துகிறார். 6/ புஷ்னே - அனைத்தையும் வளர்ப்பவர்அவரது ஆற்றல் உலகம் முழுவதையும் வளர்க்கிறது. 7/ ஹிரண்யகர்பயா - படைப்பாளர்சூரியன் பிரபஞ்சத்தின் படைப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. 8/ மாரிச்சாய - நோய்களை அழிப்பவர்அவரது கதிர்கள் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளன. 9/ ஆதித்யாய - ஊக்கமளிப்பவர்அவை நமக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் வழங்குகின்றன 10 சாவித்ரே - தூய்மைப்படுத்துபவர்சூரியனின் கதிர்கள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்துகின்றன 11/ அர்காய - ஒளியூட்டுபவர்அவரது பிரகாசம் உலகை ஒளிரச் செய்கிறது 12/ பாஸ்கர்யா - ஒளியூட்டுபவர்சூரியன் இருளை அகற்றி அறிவையும் ஒளியையும் பரப்புகிறார் ஓம் சூரியாய நமஹ .
படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்ளது. இங்கு சாவித்ரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அது எங்கு கீழே விழுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு 'நீலத்தாமரை' என்பது பொருள்.யாகத்தை தொடங்கும் முன் பிரம்மாவின் மனைவி சாவித்ரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போனது. பின்னர் இந்திரனிடம் ஆலோசித்து காயத்ரி தேவியைத் திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி, தன் கணவருடன் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இனி பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போகட்டும்' என சாபமிட்டு, அருகிலுள்ள குன்றான அருணகிரி மீதேறி அமர்ந்தாள்.கோயிலின் முகப்பில் 'ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்' என எழுதப்பட்டுள்ளது. இதற்கு 'உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்' என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் பிரம்மாவின் வாகனமான அன்னப்பறவை காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வந்த வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. தீர்த்தத்தின் பெயர் புஷ்கர்.நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின்சலவைக்கல் சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜபமாலை உள்ளன. இதை 'விஸ்வகர்மா கோலம்' என்கின்றனர். பிரம்மாவின் இடது புறம் காயத்ரி, வலது புறம் சாவித்திரி உள்ளனர்.பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக உள்ளனர். சந்நியாசி, பிரம்மச்சாரிகள் மட்டுமே கருவறைக்குள் நுழையலாம். எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி, சிறிய குன்றின் மீது காயத்ரி கோயில்கள் உள்ளன. கார்த்திகை மாத பவுர்ணமியன்று ஒட்டகத் திருவிழா நடக்கிறது.
ராணி சதி கோவிலானது நாராயணி தேவி கோவில், தாதி மா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது . தாதி என்றால் பாட்டி என்று பொருள். இது இந்தியாவின் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தேவி சதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இது 13 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்த ராஜஸ்தானி பெண்மணியான ராணி சதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும், இவர் தனது கணவர் இறந்த பிறகு தன்னையும் எரித்து தீக்குளித்தார். அதற்காக தான் அவருக்கு சதி தேவி என்ற பெயர் வந்தது. இந்தியாவில் சதி வழக்கத்தை முற்றிலும் தடை செய்த போதிலும், ராஜஸ்தானிலும் பிற இடங்களிலும் உள்ள அவருடைய பல கோயில்கள் அவருடைய வீரமான செயல்களை நினைவு கூறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.கம்பீரமான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் படைப்பானது கண்களுக்கு விருந்தாகவும் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கிறது.இந்த கோவில் பக்தர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களை இந்த கோவில் ஈர்க்கிறது, அவர்கள் ராணி சதி தாதியின் ஆசீர்வாதங்களைப் பெறவும் அவருக்கு மரியாதையை செலுத்தவும் வருகிறார்கள்.ராணி சதி தாதி கோவில் பாரம்பரிய ராஜஸ்தானி வடிவமைப்பின் தலைசிறந்த படைப்பாகும், இதில் சிக்கலான ஓவியங்கள், அழகாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் பிரமாண்டமான வளைவுகள் உள்ளன. கோயில் வளாகம் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கியது, மைய சன்னதி ராணி சதி தாதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு குறிப்பிடத்தக்க சிலை அல்லாத வடிவத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார் - ஒரு திரிசூலம்... இது துர்கா தேவியுடன் அவரது தொடர்பைக் குறிக்கிறது.பிரதான சன்னதியைத் தவிர, இந்தக் கோவிலில் மற்ற தெய்வங்களுக்கும் பல சிறிய கோவில்கள் உள்ளன. அவை அந்த இடத்தின் ஆன்மீக ஒளியை மேம்படுத்துகின்றன. கோவில் வளாகமானது பசுமையான தோட்டங்களாலும், பளிங்குத் தரைகளாலும் மற்றும் ராணி சதி தாதியின் கதைகளையும் அவரது தெய்வீகப் பயணத்தையும் விளக்கும் அற்புதமான கலைப்படைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோவிலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அதன் தனித்துவமான சிலை அல்லாத வழிபாடாகும். திரிசூலம் தெய்வத்தின் சக்தியை குறிக்கிறது, ராணி சதி தாதியின் உடல் வடிவத்தை விட ஆன்மீக ஆற்றலையும் சக்தியையும் இந்த திரிசூலமானது வலியுறுத்துகிறது.ராணி சதி கதை மகாபாரதத்துடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதப் போரில் அபிமன்யு இறந்தபோது, அவர் மனைவி உத்திரா தனது உடலையும் அபிமன்யுவின் இறுதிச் சடங்கில் எரித்து கொண்டு சதி ஆக விரும்பினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அந்த நேரத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய், ஆகவே இப்போது சதி செய்வது சரியில்லை என்றும் மேலும், உன்னுடைய சதி ஆக வேண்டும் என்ற விருப்பம் அடுத்த பிறவியில் கண்டிப்பாக நிறைவேறும் என்ற வரத்தையும் அவளுக்கு வழங்கினார்.கிருஷ்ணரின் அருள் வாக்குப் படி, அவள் அடுத்த பிறவியில் ராஜஸ்தானில் உள்ள டோக்வா கிராமத்தில் குர்சமாலின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு நாராயணி என்று பெயரிடப்பட்டது.அதேபோல், அபிமன்யு ஹிசாரில் ஜலிராமின் மகனாகப் பிறந்து தந்தன் என்று பெயரிடப்பட்டான். தந்தனும் நாராயணியும் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.அபிமன்யுவிடம் ஒரு அழகான குதிரை இருந்தது. அதை ஹிசார் மன்னரின் மகன் நீண்ட காலமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.மன்னரின் மகன் அந்த குதிரையை தனக்கு தர வேண்டும் என்று கேட்ட போது, தந்தன் தன் விலைமதிப்பற்ற குதிரையை ராஜாவின் மகனிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டான்.பின்னர் ராஜாவின் மகன் குதிரையை வலுக்கட்டாயமாக வாங்க முடிவு செய்து, தந்தனை சவால் விடுத்து போருக்கு அழைத்தான். தந்தன் தைரியமாக போரிட்டு, ராஜாவின் மகனைக் கொன்று விட்டான். இதனால் கோபமடைந்த ராஜா, போரில் நாராயணியின் முன்னால் தந்தனைக் கொன்று விட்டார். பெண் துணிச்சலுக்கும் சக்திக்கும் அடையாளமாக நாராயணி ராஜாவுடன் சண்டையிட்டு ராஜாவையே கொன்று விடுகிறாள். பின்னர் அவள் ராணாஜிக்கு (குதிரையின் பராமரிப்பாளர்) உடனடியாக தீக்குளிக்க ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டாள். அவளது கணவரின் தகனத்துடன் அவளையும் சேர்த்து எரிக்குமாறும் ஆணையிட்டாள்.தனது கணவருடன் சதி ஆக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் ராணாஜி முக்கிய பங்கு வகித்த காரணத்தினால், வரலாற்றில் தன் பெயரோடு உன் பெயரையும் சேர்த்து வழிபடுவார்கள் என்று அவனுக்கு ஆசி வழங்கினாள். அன்றிலிருந்து நாராயணி ராணி சதி என்று அழைக்கப்படுகிறார்.விசுவாசம், தைரியம் மற்றும் சுய தியாகத்தின் உருவகமாகக் கருதப்படும் ராணி சதி தாதியின் கதை, பெண்களை ஆழமாகப் பாதிக்கிறது. மேலும் அவரது கோயில் அவர்களுக்கு ஆன்மீக அடைக்கலமாக மாறியுள்ளது.பெண்கள் தங்கள் கணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள், குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மற்றும் தங்களுடைய குடும்ப ஒற்றுமைக்காகவும் ராணி சதி தேவியை பிரார்த்தனை செய்கிறார்கள்
திருமலை உருவாக காரணம், அதன் பெருமைகள், அங்கு நடத்தப்படும் உற்சவங்கள் என ஒவ்வொன்றிற்கும் திருப்பதி ஏழுமலையானை பற்றி விதவிதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் குபேரனிடம் பணக்கார கடவுள் ஏழுமலையான் வாங்கிய கடன் எப்போது அடையும் ?பவித்ரோற்சவம்திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடம் தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகள், மந்திரங்கள் , உபசாரங்கள் ஆகியவற்றில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனால் ஏற்படும் தோஷத்தை அல்லது பாவங்களை நீக்குவதற்காக சடங்குகள் செய்யப்படும் பவித்ரோற்சவம் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும்.சீனிவாசன் அவதாரம்பூலோகத்தில் சீனிவாசராக அவதரித்த வெங்கடேச பெருமாள் ஆகாச ராஜனுக்கு மகளாக அவதரித்த மகாலட்சுமியின் அவதாரமான பத்மாவதி தாயாரை மணப்பதற்காக பெரிய தொகையை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என சீனிவாசனிடம் கேட்டார் ஆகாச ராஜன்.ஏழுமலையானுக்கு குபேரன் விதித்த நிபந்தனைபத்மாவதியை மணம் முடிக்க குபேரனின் உதவியை நாடிய வெங்கடேச பெருமாளுக்கு குபேரன் ஒரு கோடியே 14 லட்சம் தங்க காசுகளை ஒரு நிபந்தனையுடன் கடனாகக் கொடுத்தார். கலியுகம் முடியும் வரை, கடனாக வாங்கிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பித் தரும் வரை, பூலோகத்திலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஏழுமலையானின் கடன் உணர்த்தும் உண்மைகள்குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் என்பது மூன்று விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று கடவுளே மனித உருவில் வந்தாலும் கடன் உள்ளிட்ட கர்ம வினைகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும். இரண்டாமாவது, தன் மீது அன்பு வைப்பவர்களுக்காக இறைவன் எதையும் செய்வார் என்பது. மூன்றாவது, திருமலைக்கு வரும். பக்தர்களை மட்டுமல்ல, கலியுகம் முடியும் வரை தொலைவில் இருந்தும் தன்னை நினைக்கும் பக்தர்களை காக்க பெருமாள் பூமியில் தான் இருப்பார்.ஏழுமலையான் கடன் எப்போது அடையும்?குபேரனிடம் வாங்கிய கடனுக்கு பெருமாள் இன்று வரை வட்டி மட்டும்தான் கட்டிக் கொண்டிருக்கிறார். தான் பட்ட கடனை பக்தர்கள் காணிக்கையாக கலியுகத்தில் செலுத்தி ,அடைப்பார்கள் என்று பெருமாள் சொன்னதாக சில கதைகளும் ,குபேரனிடம் வாங்கிய கடனை பெருமாள் எப்போதோ அடைத்து விட்டார் என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. தூணிலும் துரும்பிலும் இருக்கும் பரந்தாமனுக்கு குபேரன் விதித்த நிபந்தனைகளின் படி, ஏழுமலையானின் கடன் கலியுகம் முடியும் நேரத்தில் தான் அடையும்.அதுவரை ஏழுமலையானாக மக்களை காக்க பூமியிலேயே இருப்பார் பெருமாள். கலியுகம் முடியும் நேரத்தில், தனது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தையும் நிகழ்த்திய பிறகு தான், மீண்டும் வைகுண்டத்திற்கு பெருமாள் திரும்புவார் எனவும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.
காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி அல்லது வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி.ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி.நவராத்திரி என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.ஆஷாட நவராத்திரி, ஆனி, ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு .புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் முதல் வரும் நவராத்திரியே மிகப் பிரதானமாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியு டன் நிறைவுபெறுகிறதுஎருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.தேவர்கள்மகிழ்ந்தனர்.மகிசாசூரனிடம்போராடிப்போர்செய்துதேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள்.ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது..இந்த ஆண்டு நவராத்திரி விரதமானது வருகின்ற September 22 முதல் October 1 வரை நடைபெறவுள்ளது.நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் (மாலை 6 முதல் 9 மணி வரை) பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, பெண்கள் மாலை மற்றும் இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள் நவராத்திரியானது இந்து மக்களால் எந்த நாட்டில் இருந்தாலும் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம்.நவராத்திரி விரதங்களும் பல வகைகளைக் கொண்டுள்ளன. இந்த ஒன்பது நாட்களிலும் சிலர் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள், சிலர் பழங்களை சாப்பிடுகிறார்கள், சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுகிறார்கள்.நவராத்திரி விரதத்தின் போது கோதுமை மற்றும் அரிசி போன்ற வழக்கமான தானியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிச்சடி, உப்புமா, தோக்லாஸ் (குஜராத்தி) அல்லது பாயசம் (கீர்) தயாரிப்பதில் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது தினை, ஜவ்வரிசி (சாபுதானா) உபயோகப் படுதா படுகிறது பயன்படுத்தப்படலாம்.நவராத்திரி விரதத்தின் போது அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். சிலர் இந்த ஒன்பது நாட்களும் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள்.நவராத்திரி விரதத்தின் போது, பெரும்பாலான மக்கள் காய்கறிகள் - உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி இனிப்பு உருளைக்கிழங்கு, சூரன் கிழங்கு, பூசணி, கீரை, தக்காளி, வெள்ளரி, கேரட் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.நவராத்திரி விரதத்தின் போதுபால்மற்றும்பால்பொருட்கள், உட்கொள்ளப்படுகின்றன.வெங்காயம் அல்லது பூண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவுகள், முட்டை, மது, புகைபிடித்தல் ஆகியவையும் உட்கொள்ளக் கூடாதுநவராத்திரியின் தனிச்சிறப்பே இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பண்டிகையாகும்.அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்இந்த நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன.துர்க்கை: மகேசுவரி, கெளமாரி , வாராகி.இலட்சுமி: மாகா லெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி.சரஸ்வதி : சரஸ்வதி, நாரசிம்மி , சாமுண்டி.நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார அம்ச தேவதைகளாகவும் கொண்டாடுகிறோம்.சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் கொண்டாடுகிறோம்ஒன்பது நாட்கள் மகிசாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி – வெற்றியின் திரு நாள்குழந்தைகள் கல்வியினை கற்க இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.நவராத்திரி முதல் தினம் தொடங்கி ஒன்பது நாட்கள் முழுவதும் காலையில் நீராடி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்குப் பூச்சூடி, கற்பூரம், பழம் இதனுடன் நெய்வேத்தியம் வைத்து தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகிலுள்ள குருடு மலையில் லட்சுமிகணபதி கோயில் உள்ளது. முதல் யுகமான கிருத யுகத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனால் உருவாக்கப்பட்ட விநாயகர் குடியிருக்கிறார்.காலப்போக்கில் வழிபாடு இல்லாமல் போனது.' விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றி குருடு மலையில் இருப்பதாகவும், அங்கு கோயில் கட்டுமாறும் விநாயகர் உத்தரவிட்டார். அக்கோயிலே தற்போது வழிபாட்டில் உள்ளது. சாளக்கிராம கல்லால் ஆன விநாயகர் சிலையின் உயரம் 11 அடி. கிழக்கு நோக்கியுள்ள இவரை தரிசித்தால் முயற்சி எல்லாம் வெற்றி பெறும். கருவறைக்கு அருகில் பார்த்தால் சுவாமி சிலை சிறியதாகவும், வாசலுக்கு அருகில் நின்று பார்த்தால் பெரியதாகவும் தோன்றுவது வித்தியாசமானது. அஸ்திவாரம் இல்லாமல் சமதளமான பாறையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.பிரகாரத்தில் சாமுண்டீஸ்வரி, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சிவனுக்குரிய வில்வம் தலவிருட்சமாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில்கல்வெட்டுகள் உள்ளன.ஆதிகாலத்தில்தேவர்கள், ரிஷிகள்கூட்டமாகவழிபட்டதால் 'கூட்டாத்திரி மலை' என்றும் பெயருண்டு. அதுவே பின்னாளில் 'குருடு மலை' என்றானது.ஆங்கில புத்தாண்டு 'மகா பஞ்சாமிர்த அபிஷேகம்' நடக்கும். ரதசப்தமியன்று 13 கி,மீ., சுற்றளவு கொண்ட மலையைச் சுவாமி சுற்றி வருகின்றனர். பிப்ரவரி கடைசி ஞாயிறன்று வெண்ணெய் அலங்காரமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்ஸவமும் நடக்கும். கார்த்திகை மாத குமார சஷ்டியன்று 1108 லிட்டர் கரும்புச்சாறு அபிஷேகம்,1108 சகஸ்ர மோதக ஹோமம், 1108 வடைகளால் ஆன மாலை சாத்துகின்றனர்.இங்கு வழிபடுவோருக்கு வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.கணவன், மனைவி ஒற்றுமைக்காக இங்கு 'மண்டல பூஜை' நடத்துகின்றனர். பிரசாதமாக தரும் சந்தனத்தை பூசினால் செல்வம் பெருகும்.ராகு, கேதுதோஷம்அகலவிநாயகருக்கு ஏலக்காய்மாலைசாத்துகின்றனர்.நினைத்ததுநிறைவேற 1008 மோதகம் படைக்கின்றனர்.
சத்திய ஷேத்திரம் எனப்படும் திருமயம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.சத்தியமூர்த்தி, அனந்த சயனமூர்த்தி என்ற இரு மூலவர்கள் இங்குள்ளனர். இதில் அனந்தசயன மூர்த்தி குகைக்கோயிலின்மூலவராகஇருக்கிறார்.கருடன், சித்திரகுப்தன்.மார்க்கண்டேயமகரிஷி,பிரம்மா, தேவர்கள்,ரிஷிகள் கின்னரர்கள்பெருமாளைச் சுற்றிஇருக்கின்றனர். பாற்கடலில் பெருமாள் நித்திரையில் இருக்கும்போது ஒரு சமயம் மது, கைடபர் என்னும் அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவியை கடத்தினர். அரக்கர்களுக்கு அஞ்சிய பூதேவி, பெருமாளின் திருவடியிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளி ஒளிந்தனர். பெருமாளின் நித்திரையை கலைக்கமனமில்லாத ஆதிசேஷன், தன் வாயில் இருந்து விஷ ஜுவாலையை கக்கி அரக்கர்களை விரட்டினார். நித்திரை கலைந்த பிறகே பெருமாளுக்கு இந்த விஷயம் தெரிய வர, ஆதிசேஷனின் செயலைப் பாராட்டினார்.இந்த வரலாற்றை அப்படியே சித்தரிக்கும் விதத்தில் கருவறை உள்ளது. மனநிலை சரியில்லாதவர்கள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இங்குள்ள உஜ்ஜீவனவல்லி தாயாரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளபிள்ளையார்பட்டியில்இருப்பதுதான்புகழ்பெற்றஸ்ரீகற்பகவிநாயகர்திருக்கோவில். தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரத்தின் அடியில் நின்று நாம் என்ன வரம் வேண்டினாலும் அது கிடைக்கும். அதைப்போல தான் கற்பக விநாயகரிடம் நாம் மனதில் என்ன நினைத்து வேண்டினாலும் அது உடனேயே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான் இவருக்கு கற்பக விநாயகர் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவில் 2500 வருட பழமையான குடைவரைக் கோவிலாகும்.குன்றைக்குடைந்து கோவிலாகவும், ஸ்ரீ கற்பக விநாயகரின் சிற்பத்தையும், ஸ்ரீ திருவீசர் என்ற லிங்கத்தையும் பாண்டியர்கள் வடிவமைத்துள்ளனர்.இங்குள்ள கற்பக விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. விநாயகர் கையிலே தனக்கு பிடித்த மோதகம் இல்லை. அதற்கு பதிலாக யோகநிலையில் உலக நன்மைக்காக கையிலே லிங்கத்தை வைத்து ஞான தவம் புரியும் யோக விநாயகராக இருப்பதால், இவரிடம் கேட்ட வரங்களெல்லாம் எளிதிலே கிடைத்துவிடும். வடக்கு திசையை நோக்கியிருக்கும் வலம்புரி விநாயகரே பிள்ளையார்பட்டி விநாயகர். வலம்புரி விநாயகரை வணங்குபவருக்கு வாழ்வில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.விநாயகர் ஆவணி மாதம் வளர்பிறை சதூர்த்தி திதியில் அவதரித்தார். அதனால் தான் ஆவணி மாதம் வருகின்ற வளர்பிறை சதூர்த்தி திதியை விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடுகின்றோம். மாட்டு சாணம், களிமண், மஞ்சள், சந்தனம் இதில் ஒன்றை பிள்ளையாராக பிடித்து வைத்து இரண்டு அருகம்புல்லை வைத்தாலே போதும் நம் குறைகளை கேட்க ஓடோடி வரும் எளிமையான கடவுள் தான் பிள்ளையார்.பிள்ளையாரை இந்து மதத்தில் மட்டும் கடவுளாக வழிப்படவில்லை. பௌத்த மதத்திலும் ‘விநாயகா’ என்ற பெயரில் வழிப்படப்படுகிறார். திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் விநாயகருக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கிறார்கள் .
உத்தரபிரதேசத்தில் மீரட் நகர்கன்டோன்மென்ட்சர்தார்பஜாரில்காளிபல்தான்என்னும்இடத்தில் 'ஆகர்நாத்' என்னும் பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் தேசப்பற்று அதிகரிக்கும்.1857ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவப்படையும், அவர்களின் குடியிருப்பும் இங்கு இருந்தன. படையில் இருந்த இந்திய வீரர்களை கருப்பு ராணுவம் (காளி பல்தான்) என ஆங்கிலேயர்கள் இழிவாக குறிப்பிட்டு ' வந்தனர். இதை இந்தியர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் துறவி ஒருவர் இங்குள்ள கோயிலுக்கு வந்திருந்தார். அவரிடம் இந்திய வீரர்கள் ஆலோசித்ததன் விளைவாக சிப்பாய் கலகம் உருவானது. சுதந்திர போராட்டத்திற்கு இதுவே வித்திட்டது. இதற்கு காரணமானவர்கள் மரண தண்டனை பெற்றனர். இதன்பின் இக்கோயில் பிரபலம் அடைந்தது.விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர், மராட்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். 1968ல் கோயில் புதுப்பிக்கப்பட்டு செவ்வக வடிவ அடுக்குகளின் மீது மூன்று தளங்களாக உள்ளது. 4 கிலோ எடை கொண்ட தங்கக்கலசத்துடன் கோபுரம் 2001ல் நிறுவப்பட்டது. கருவறையில் சுயம்பு லிங்கமும், அதன்பின்புறம் சலவைக்கல்லால் ஆனசிவனும், பார்வதியும்நின்றநிலையில்உள்ளனர்.சிங்கவாகனத்தில்துர்கை, ராதாகிருஷ்ணர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோயிலின் பின்புறத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னம்ஒன்றும் உள்ளது. இங்கு சிப்பாய்க்கலகத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 10ல் விழா நடக்கிறது.சிரவண (ஆவணி) மாத திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே அமைந்துள்ளது நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவில் பக்தர்களின் பசியை போக்கும் புண்ணிய தல மாகவும், கேட்கும் வரத்தை கொடுக்கும் ஆலயமாகவும் இக்கோ வில் விளங்குகிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில், தியாகதுருகம் அருகே சந்தைமேட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவுடையார் கோவில். இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த சித்தர், பல ஆண்டு காலம் இங்கு தங்கி சிவனுக்கு பூஜைகள் செய்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வந்தார். அப்போது சித்தர் பெருமான், கோவில் வளாகத்திற்குள் வரும் நாக பாம்பின் நஞ்சை தனது கையில் வாங்கி உண்டு வந்துள்ளார். இதனால் அந்த சித்தர் 'நஞ்சுண்ட ஞான தேசிகர்' என அழைக்கப்பட்டார். பின்னர் நாளடை வில், சித்தர் பெருமான் கோவில் மூலவருக்கு அருகில் ஜீவசமாதி அடைவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்தார். அதன் பிறகு ஆவுடையார் கோவில், 'நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவில்' என அழைக்கப்படு கிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து, தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.சித்தர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சித்தர் தனது உடலில் உள்ள கை, கால்கள் மற்றும் தலை ஆகிய வற்றை தனித்தனியாக பிரித்து மீண்டும் இணைத்ததாகவும், இதனை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியமுடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு பார்த்த ஒரு சிலர் அதிர்ச்சியில் இறந்து போனதாகவும் முன்னோர் கள் கூறுகின்றனர்..