மாடித் தோட்டத்தில் நித்திய கல்யாணி(Vinca) செடியை எளிதாக வளர்க்க, வடிகால் வசதியுள்ள தொட்டியில் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்தவும். அதிக சூரிய ஒளி(6-8 மணிநேரம்) தேவைப்படும் இந்தச் செடிக்கு, மண்ணின் மேற்பரப்பு காய்ந்ததும் நீர் ஊற்றினால் போதும். பூக்கள் அதிகம் பூக்க, அவ்வப்போது மண்புழு உரம் இட்டு பராமரிக்கலாம். தொட்டி மற்றும் மண்: சிறியது முதல் நடுத்தர அளவிலான தொட்டிகள்(10-12 இன்ச்) போதுமானது. சாதாரண தோட்ட மண், செம்மண் அல்லது தேங்காய் நார் கழிவு(Cocopeat) கலந்த மண்ணில் நன்றாக வளரும்.சூரிய ஒளி: நித்திய கல்யாணி செடிக்கு முழுமையான சூரிய ஒளி தேவை. மாடியில் அதிக வெயில் படும் இடத்தில் வைத்தால் தான் பூக்கள் அதிகமாக பூக்கும்.நீர் மேலாண்மை: தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. மண்ணின் மேல் அடுக்கு காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக நீர் ஊற்றினால் வேர் அழுகிவிடும்.உரம்: மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது தொழு உரம் அளிப்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அதிக பூக்களுக்கும் உதவும்.பராமரிப்பு: செடி நன்கு அடர்த்தியாக வளர, நுனி கிளைகளை அவ்வப்போது கிள்ளி விடலாம்(Pruning). இது புதிய கிளைகளை உண்டாக்கி பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.நோய்பூச்சி கட்டுப்பாடு: பொதுவாக பூச்சிகள் தாக்காது. சில நேரங்களில் செம்பேன் பாதிப்பு இருந்தால் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இந்த மருத்துவக் குணங்கள் நிறைந்த செடியை, மிகக் குறைந்த பராமரிப்பில் மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்.
ரகங்கள்: ஆரம்ப நிலையினருக்குச் செர்ரி தக்காளி (Cherry Tomato) வளர்ப்பது எளிது. இடவசதிக்கு ஏற்பசெடிவகை (Determinate) அல்லது கொடி வகை (Indeterminate) தக்காளியைத் தேர்வு செய்யவும்.மண் & தொட்டி: உரம் கலந்த, நல்ல வடிகால் வசதியுள்ள வளமான மண் தேவை. தரையிலோ அல்லது வடிகால் துளையுள்ள பெரிய தொட்டிகளிலோ வளர்க்கலாம்.ஆழமாக நடுதல்: நாற்றுகளை நடும் போது தண்டுப் பகுதியும் மண்ணுக்குள் புதையுமாறு ஆழமாக நட வேண்டும்; இது கூடுதல் வேர்கள் உருவாகி செடி வலுவடைய உதவும்.சூரிய ஒளி: தக்காளி செழித்து வளர தினமும் 6 முதல் 8 மணி நேர நேரடி சூரிய ஒளி அவசியம்.நீர் மேலாண்மை: இலைகளில் படாமல் செடியின் வேர்ப் பகுதியில் சீராகவும் ஆழமாகவும் நீர் பாய்ச்ச வேண்டும். சீரற்ற நீர்ப்பாசனம் பழங்களில் வெடிப்பை உண்டாக்கும்.உரமிடுதல்: ஆரம்பத்தில் நைட்ரஜனும், பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த கரிம உரங்களையும் இரு வாரங்களுக்கு ஒருமுறை இட வேண்டும்.ஆதரவு & கத்தரித்தல்: கொடி வகைகளுக்குக் கம்புகள் அல்லது கூண்டுகள் மூலம் முட்டுக் கொடுக்க வேண்டும். நல்ல காற்றோட்டத்திற்கும் நோய் தடுப்பிற்கும் கீழ் இலைகளையும், வீணான பக்கக் கிளைகளையும் (Suckers) கத்தரிக்க வேண்டும்.பூச்சி & நோய் தடுப்பு: இலைகள் நனையாமல் பார்த்துக் கொள்வது பூஞ்சை நோய்களைத் தடுக்கும். அசுவினி மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். தக்காளி தானாகவே மகரந்தச் சேர்க்கை செய்துகொள்ளும் என்பதால், பூக்களை லேசாகக் குலுக்கி விடுவது காய் பிடிப்பதை அதிகரிக்கும்.பழங்கள் தங்களுக்குரிய நிறத்தை முழுமையாகப் பெற்றவுடன், செடியைப் பிடுங்காமல் கத்தரிக்கோலால் காம்போடு வெட்டி அறுவடை செய்ய வேண்டும். தொடர்ந்து அறுவடை செய்வது புதிய காய்கள் உருவாவதைத் தூண்டும்.
வகைகள்: சிறிய இடங்கள் மற்றும் தொட்டிகளுக்கு குட்டி (Mini) கத்தரிக்காய் வகைகள் மிகவும் ஏற்றது. தவிர, நீளவகை அல்லது குண்டு வகைகளையும் தேர்வு செய்யலாம்.மண் & தொட்டி: நல்ல வடிகால் வசதியுள்ள, கரிம உரம் கலந்த வளமான மண் (pH 5.5–6.8) தேவை. வேர் வளர்ச்சிக்கு குறைந்தபட்சம் 12-16 அங்குல ஆழமுள்ள தொட்டிகள் அல்லது வளர்ப்புப் பைகளைப் பயன்படுத்தவும்.நாற்று தயாரிப்பு: விதைகளை விதை தட்டுகளில் முளைக்க வைத்து, 4-6 உண்மையான இலைகள் வந்தவுடன் மாற்றி நடவும் (அல்லது நேரடியாக ஆரோக்கியமான நாற்றுகளை வாங்கி நடலாம்). சூரிய ஒளி & நீர்: செழிப்பான வளர்ச்சிக்கு தினமும் 6-8 மணி நேர நேரடி சூரிய ஒளி அவசியம். மண் தேங்காமல் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்க வாரத்திற்கு 2-3 முறை (வெப்பமான நாட்களில் தேவைக்கேற்ப) நீர் பாய்ச்சவும்.உரமிடுதல்: ஆரம்பத்தில் நைட்ரஜன் நிறைந்த உரங்களையும், பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்த உரங்களையும் இட வேண்டும்.ஆதரவு & கத்தரித்தல்: செடி சாயாமல் இருக்க கம்புகள் கொண்டு முட்டுக்கொடுக்கவும். பலவீனமான கிளைகளை கத்தரித்து காற்று சுழற்சியை மேம்படுத்தவும்.பூச்சி கட்டுப்பாடு:அசுவினி, வண்டுகள் மற்றும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் அல்லது பூச்சிக்கொல்லி சோப்பு தெளிக்கவும்.அறுவடை: பூத்த 60-80 நாட்களில் கத்தரிக்காய் அறுவடைக்குத் தயாராகும். பழங்கள் உறுதியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்போது கத்தரிக்கோலால் தண்டுடன் சேர்த்து வெட்டவும். தொடர்ந்து அறுவடை செய்வது புதிய காய் உற்பத்தியைத் தூண்டும்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது போதுமான அளவு தான் இருக்கணும்.குறைவாக இருந்தாலும் செடி வதங்கிடும் .முதல்ல மண்ணுல ஈரப்பதம் இருக்கா இல்லையா என்பதையும் கவனிக்கவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது தொட்டியின் அளவு பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மீண்டும் தண்ணீர் ஊத்த வேண்டாம். அதே சமயம் தொட்டில தண்ணீர் ஊத்தினப்போ அது உடனே கீழே உள்ள hole வழியா வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் மண்ணில் உள்ள சத்து குறைந்து விடும் மண்ணும் கொஞ்ச நீரை பிடித்து வைத்துக் கொள்ளும் அப்ப தான் செடிக்கு தேவையான ஈரம் கிடைக்கும். நாம ரெகுலராக தண்ணீர் செடிக்கு ஊற்றும் போது ஒரு குறிப்பிட்ட செடி வதங்குவதும் தெரியும், அவ்வாறு வதங்கும் செடிக்கு 2 முறை காலையிலும், மாலையிலும் ஊற்ற வேண்டும். இவ்வாறு கவனித்தால் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து நமக்கு நல்ல பலன் தரும். வாருங்கள் இயற்கையை நேசிப்போம்.
வகையைத் தேர்ந்தெடுத்தல் & தயாரிப்புவகைகள்: உங்கள் தேவைக்கேற்ப ஆரம்ப கால (70-90 நாட்கள்), பருவகால (90-120 நாட்கள்) அல்லது பிந்தைய கால (120-150 நாட்கள்) வகைகளைத் தேர்வு செய்யவும்.விதை உருளைக்கிழங்கு:கடையில் வாங்குவதைத் தவிர்த்து, முளைகள் உள்ள ஆரோக்கியமான கிழங்குகளைத் தேர்ந்தெடுக்கவும். பெரியதாக இருந்தால் 1-2 கண்கள் கொண்ட துண்டுகளாக வெட்டி, 2 நாட்களுக்கு உலர்த்தி நடவும்.நடவு முறைகள் & பராமரிப்புஇடம்: தோட்டப் படுக்கைகள், 12-16 அங்குல ஆழமுள்ள தொட்டிகள் அல்லது வளரும் பைகளைப் (Grow Bags) பயன்படுத்தலாம்.நடவு: வசந்த கால துவக்கத்தில், 3-4 அங்குல ஆழத்திலும், 12-15 அங்குல இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.மண் மேடு போடுதல் (Earthing up): செடி 6-8 அங்குலம் வளர்ந்தவுடன், கிழங்குகள் சூரிய ஒளியில் படாமல் இருக்கவும், அதிக மகசூலுக்கும் தண்டைச் சுற்றி மண் மேடு போட வேண்டும். வளர்ப்புத் தேவைகள்சூரிய ஒளி & நீர்: தினமும் 6-8 மணி நேர நேரடி சூரிய ஒளி தேவை. மண் தேங்காமல் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்க வாரத்திற்கு 2-3 முறை நீர் பாய்ச்சவும்.உரம்: நடவின் போது கரிம எருவையும், வளரும் போது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உரங்களையும் இட வேண்டும்.பூச்சி மேலாண்மை: அசுவினி மற்றும் வண்டுகளைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் தெளிக்கவும்; நல்ல வடிகால் வசதி மூலம் பூஞ்சை நோய்களைத் தவிர்க்கவும். அறுவடை & சேமிப்புஅறுவடை: செடிகள் பூத்து, இலைகள் வாடத் தொடங்கும் போது (70-150 நாட்கள்), கைகளால் அல்லது முட்கரண்டி கொண்டு மெதுவாகத் தோண்டி அறுவடை செய்யவும்.சேமிப்பு: அறுவடை செய்த உருளைக்கிழங்கை குளிர்ந்த, இருண்ட, காற்றோட்டமான இடத்தில் சேமிக்கவும். வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக் கூடாது.
நல்ல சூரிய ஒளி படும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, காய்கறி விதை அல்லது நாற்றுகளைப் பயன்படுத்தி, கோகோபீட், மண்புழு உரம், கலந்த கலவையை நிரப்பி நடவு செய்து, தினமும் காலை மாலை தண்ணீர் ஊற்றி, மண் காய்ந்து விடாமல் பராமரித்தால் 4-5 நாட்களில் விதைகள் முளைத்து நல்ல விளைச்சல் கிடைக்கும். வெண்டைக்காய் வெப்பத்தை தாங்கும் என்பதால், மார்ச் மாதம் நடவு செய்ய ஏற்ற காலம். மாடித் தோட்டத்தில் வெண்டைக்காய் வளர்க்கும் முறை மாடித் தோட்டத்தில் நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடத்தைத் தேர்வு செய்யவும்.வெண்டைக்காய் விதைகள் அல்லது நாற்றுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.மார்ச் மாதங்கள் வெண்டைக்காய் நடவு செய்ய சிறந்தவை, ஏனெனில் இது வெப்பத்தை தாங்கும் பயிர்.கோகோபீட், மண்புழு உரம், மண் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம்.விதைத்த 4-5 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும்.செடிக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். எனவே, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் மாடித் தோட்டத்தில் சுவையான வெண்டைக்காய்களை விளைவிக்கலாம்.
ரோஜா செடியை கட்டிங்ஸில் இருந்து உருவாக்கலாம் நர்சரிக்கு சென்று நாட்டு ரோஜா செடியில் இருந்து ஒரு கிளையை வெட்டி வாங்கவும்.பென்சிலின் அடர்த்தியில் ரோஜா கட்டிங்ஸ் இருப்பது அவசியம்.இந்த கட்டிங்ஸை வேர்கள் உற்பத்தி ஆன பிறகு செம்மண் கலவையில் சேர்த்து தொட்டியில் வளர்க்கலாம்.15 செ மீ நீளம் அதாவது சின்ன ஸ்கேல் அளவில் கட்டிங்ஸ் எடுத்து அடிபாகத்தை 45.50 டிகிரி அளவில் கூர்மையாக வெட்டவும்இப்போது ஒரு மூடி தேன் எடுத்துக் கொண்டு கூர்மைபடுத்திய ரோஜா கட்டிங்ஸை அதில் மூழ்கி எடுக்கவும்வேர்கள் நன்றாக வளர கற்றாழை ஜெல் அல்லது தேன் பயன்படுத்தலாம். இதே போல 4-5 கட்டிங்ஸ் தயாரிக்கவும்இதை மண் புழு உரத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்து காற்று புகாதவாறு பிளாஸ்டிக் போட்டு மூடி உாத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் உள்ள இடைவெளியில் தண்ணீர் ஊற்றவும்.நிழலான இடத்தில் வளர்த்தால் 20 நாட்களில் வேர் பிடித்துவிடும். ஐந்து கட்டிங்ஸில் மூன்றாவது நன்கு வேர்கள் பிடித்து தயாராகிவிடும்.ரோஜா செடிக்கு மண் கலவை-பத்து அங்குல மண் தொட்டியில் உதிரியான செம்மண் 50 விழுக்காடு, கோகோபீட் 25 விழுக்காடு, இயற்கை உரம் 25 விழுக்காடு நிரப்பி வேர் பிடித்த கட்டிங்ஸ் வைக்கவும்.கோகோபீட் என்பது தென்னைநார் கழிவு ஆகும். தொட்டியில் நான்கு - ஐந்து ஓடைகள் இருந்தால் தண்ணீர் சரியாக வெளியேற்றப்பட்டு வேர் அழுகல் நோய் தவிர்க்கப்படும்இயற்கை உரம் என்பது மாட்டு சாணம் உரம் அல்லது மண் புழு உரம் பயன்படுத்தலாம்.15-20 நாட்களுக்கு ஒரு முறை டிஏபி உரம் பயன்படுத்தலாம். இதை செடியில் நேரடியாக பயன்படுத்தாமல் வேர் பகுதியை சுற்றி கொஞ்சம் மண் தோண்டி அதில் போடவும் செடிக்கு தண்ணீர் ஊற்ற அரிசி கழுவும் தண்ணீர் பயன்படுத்தலாம்.இலைகள் வளர ஆரம்பித்த சில நாட்களில் அதன் நுனிகள் காய்ந்து நிறம் மாறி கருப்பாக மாறும் அப்போது இலைகளை வெட்டி விடவும் புதிய இலைகளையும் வெட்டி விடுங்கள்.இதற்கு அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் சின்ன ஷாம்பு பாக்கெட்டுடன் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றி வாரத்திற்கு ஒரு முறை தெளித்து வாருங்கள்.தினமும் 6 மணி நேரம் மாடியில் ரோஜா செடி மீது வெயில் படும் படி வளர்க்கவும்மொட்டுக்கள் வைத்த பிறகு அதில் கருப்பு நிறத்தில் பூச்சிகள் வளரும் முட்டையிடும்.இதை தடுத்திட வேப்ப எண்ணெய்யை கொஞ்சம் ஷாம்புவுடன் கலந்து ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி செடி மீது அடிக்கவும்.2-3 நாட்களில் பூச்சிகள் ஓடிவிடும் நன்கு கவனிப்புடன் ரோஜா செடி வளர்த்து வந்தால் தோட்டம் போல பூத்து குலுங்கும்.
மாடித் தோட்டத்தில் நித்திய கல்யாணி(Vinca) செடியை எளிதாக வளர்க்க, வடிகால் வசதியுள்ள தொட்டியில் தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்தவும். அதிக சூரிய ஒளி(6-8 மணிநேரம்) தேவைப்படும் இந்தச் செடிக்கு, மண்ணின் மேற்பரப்பு காய்ந்ததும் நீர் ஊற்றினால் போதும். பூக்கள் அதிகம் பூக்க, அவ்வப்போது மண்புழு உரம் இட்டு பராமரிக்கலாம். சிறியது முதல் நடுத்தர அளவிலான தொட்டிகள்(10-12 இன்ச்) போதுமானது. சாதாரண தோட்ட மண், செம்மண் அல்லது தேங்காய் நார் கழிவு (Coco peat) கலந்த மண்ணில் நன்றாக வளரும்.நித்திய கல்யாணி செடிக்கு முழுமையான சூரிய ஒளி தேவை. மாடியில் அதிக வெயில் படும் இடத்தில் வைத்தால் தான் பூக்கள் அதிகமாக பூக்கும்.தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. மண்ணின் மேல் அடுக்கு காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக நீர் ஊற்றினால் வேர் அழுகிவிடும்.மாதத்திற்கு ஒருமுறை மண்புழு உரம் அல்லது தொழு உரம் அளிப்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அதிக பூக்களுக்கும் உதவும்.செடி நன்கு அடர்த்தியாக வளர, நுனி கிளைகளை அவ்வப்போது கிள்ளி விடலாம் .(Pruning). இது புதிய கிளைகளை உண்டாக்கி பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.பொதுவாக பூச்சிகள் தாக்காது. சில நேரங்களில் செம்பேன் பாதிப்பு இருந்தால் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இந்த மருத்துவக் குணங்கள் நிறைந்த செடியை, மிகக் குறைந்த பராமரிப்பில் மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்.
வெயில் காலத்தில் செடிகளை பாதுகாக்க மூடாக்கு போடுவது மிகவும் முக்கியம் .தேங்காய் பஞ்சு, உலர் இலைகள், கரும்பு சக்கை தோட்ட கழிவுகள் போன்றவற்றை செடியை சுற்றி மூடினால் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருந்து செடி ஆரோக்கியமாக வளரும்்திலஅதோட காலை அல்லது மாலை நேரத் மட்டும் தண்ணீர் ஊற்றினால் செடி வளர்ச்சி கோடையிலும் நிதானமாக நடைபெறும் செடியில் உள்ள முற்றிய இலைகளை நீக்கினால் பூக்களும் காய்களும் பெருகுவதற்கு ஏதுவாக இருக்கும். வெயில் அதிகமா இருப்பதால் இலைகள் சுருண்டு போவது 'மொட்டுக்கள் கருகுவது போன்ற அறிகுறிகள் தெரியும் அப்படிப்பட்ட சமயத்தில் செடியை உடனே நிழலில் பாதுகாக்க வேண்டும் இப்படிச் சரியான பராமரிப்பு கொடுத்தால் வெயிலிலும் செடிகள் நன்றாக வளர முடியும் .
பாகற்காய் கொடியை செழிப்பாக வளர்க்க, நல்ல வடிகால் வசதியுள்ள மணல் வண்டல் மண்ணில், ஜனவரி,ஜூலை மாதங்களில் விதைகளை விதைக்க வேண்டும். போதுமான வெயில்(6-8 மணி நேரம்) அவசியம். விதைகள் முளைத்த15-20 நாட்களில் கொடிகள் படர பந்தல் அமைக்க வேண்டும். ஈரப்பதமான மண் மற்றும் வாரத்திற்கு இருமுறை நீர் ஊற்றுவது, அதிக மகசூல் பெற, இலைப்பேன் மற்றும் கொடி அழுகல் நோயைத் தடுக்க உதவும். பாகற்காய்வளர்க்கும் முறைநல்லஅங்ககச்சத்துகொண்டமண்ணில், சூடான, ஈரப்பதமானகாலநிலை (ஜனவரி - ஜூலை) சிறந்தது.விதைகளை 1 மீட்டர்இடைவெளியில், பார் ஓரத்தில்விதைத்து, மண்ணால்மூடிநீர்தெளிக்கவேண்டும்.கொடிகள்படரஆரம்பிக்கும்போது, சுமார்1.5 முதல்2 மாதங்களுக்குள்பந்தல்அமைத்து, கயிறுகளைப்பயன்படுத்திகொடிகளைமேலேற்றவேண்டும்.மண்எப்போதும்ஈரப்பதமாகஇருக்கும்படி, ஆனால்நீர்தேங்காமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.கரிமஉரங்கள்அல்லதுதொழுஉரம் (Compost) இடுவதுசிறந்தது.நடவுசெய்த60-70 நாட்களில், பாகற்காய்பிஞ்சுநிலையில்(முழுமையாகமுதிர்வதற்குமுன்) இருக்கும்போதுஅறுவடைசெய்யலாம், அப்போதுதான்ருசியாகஇருக்கும். பாகற்காய்செடிக்கு,10 லிட்டர்கொள்ளளவுகொண்டபெரியதொட்டிகள்அல்லதுபைகளைமாடிதோட்டத்தில்பயன்படுத்தலாம்.வளர்ச்சியின்ஆரம்பகட்டங்களில்கயிறுகளில்கொடிகளைக்கட்டிவிடுவது, அது பந்தலில்ஏறுவதற்குஉதவும்.