விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு /ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கை மூலம் 30.09.2024 முடிய சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழிற்பிரிவுகளில் 100மூ பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் 30.10.2024 முடிய நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 30.10.2024-க்குள் உரிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை செலுத்தி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள (இயந்திர வேலையாள், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் மற்றும் தொழிற்துறை) ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம். மேலும், சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- ஆகும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை /மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) /சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் /பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் / பயிற்சியாளர் அடையாள அட்டை/ அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- மற்றும் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட முதல் பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஃ- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 9578855154 / 7010040810 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 15,914 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்15.10.2024- மீசலூர்16.10.2024- பட்டம்புதூர்17.10.2024- ஒ.கோவில்பட்டி18.10.2024- வச்சக்காரப்பட்டி19.10.2024 மற்றும் 20.10.2024 - சங்கரலிங்கபுரம், ஆகிய கிராமங்களில்நடைபெறுகிறதுஅருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்15.10.2024- மலைப்பட்டி16.10.2024- வதுவார்பட்டி17.10.2024- அம்பலத்தேவநத்தம்18.10.2024- ஆமணக்குநத்தம்19.10.2024- கட்டங்குடி20.10.2024- சின்னவள்ளிகுளம், ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.சிவகாசி ஊராட்சி ஒன்றியம்15.10.2024- எம்.துரைச்சாமிபுரம்16.10.2024- பேராபட்டி17.10.2024- A.மீனாட்சிபுரம்18.10.2024- காக்கிவாடான்பட்டி19.10.2024- காரிச்சேரி20.10.2024- M.புதுப்பட்டி. ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறதுகாரியாபட்டி ஊராட்சி ஒன்றியம்15.10.2024- மாந்தோப்பு16.10.2024- அல்லலப்பேரி17.10.2024- வலையன்குளம் (சந்திரன்குளம் )18.10.2024- கழுவனாச்சேரி19.10.2024- A.நெடுங்குளம்20.10.2024- கம்பிக்குடி, ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறதுநரிக்குடி ஊராட்சி ஒன்றியம்15.10.2024-அம்மன்பட்டி16.10.2024- சொரிகுளம்17.10.2024- T.கடம்பன்குளம்18.10.2024- அழகாபுரி19.10.2024- நாலூர்20.10.2024- வேளானூரணிஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்15.10.2024- கோபாலபுரம்16.10.2024- தென்கரை17.10.2024- புத்தூர்18.10.2024- நல்லமங்கலம்19.10.2024- மேலராஜகுலராமன்20.10.2024- இளந்திரைக்கொண்டான் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்15.10.2024- N.மேட்டுப்பட்டி16.10.2024- முள்ளிச்செவல்17.10.2024- நல்லி18.10.2024- நத்தத்துப்பட்டி19.10.2024- நென்மேனி20.10.2024- ஒத்தையால் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது. திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்15.10.2024- மடவார்வளாகம்16.10.2024 மற்றும் 17.10.2024 - பிள்ளையார்குளம்18.10.2024- அச்சந்தவிழ்த்தான்19.10.2024- பாட்டகுளம் சல்லிப்பட்டி20.10.2024- செங்குளம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.திருச்சுழி ஊராட்சி ஒன்றியம்15.10.2024- மீனாட்சிபுரம்16.10.2024- மேலையூர்17.10.2024- மிதிலைக்குளம்18.10.2024- கண்ணகி19.10.2024- கீழ்குடி20.10.2024- புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்15.10.2024- கல்லமநாயக்கன்பட்டி16.10.2024- கல்லமநாயக்கன்பட்டி17.10.2024- எதிர்கோட்டை18.10.2024- கனஜாம்பட்டி19.10.2024- முத்தாண்டியபுரம்20.10.2024- திருவேங்கிடபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறதுவத்றாப் ஊராட்சி ஒன்றியம்15.10.2024 மற்றும் 16.10.2024- W.புதுப்பட்டி17.10.2024- கான்சாபுரம்18.10.2024- காடனேரி19.10.2024- கோட்டையூர்20.10.2024- அயன்கரிசல்குளம் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.மேலும் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் முறையே 15.10.2024 அன்று KPD - இல்லம், 16.10.2024 அன்று KKK - மழலையர்பள்ளி, 17.10.2024 மற்றும் 18.10.2024 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி பள்ளி, 19.10.2024 அன்று வள மீட்பு மையம், புல்லலக்கோட்டை சாலை, 20.10.2024 அன்று அஹமத்நகர் வாட்டர்டேங்க் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு இதுவரை பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட திட்ட அலுவலர்,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விருதுநகர்,கைப்பேசி எண். 73730 04974 தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி 21.08.2024 அன்று முதல் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகிறது.தற்போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தினை இன்னும் சிறப்பாக பயன்பாட்டில் கொண்டுவரும் வகையில் சிவகாசி முதல் மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும், விருதுநகர் முதல் திருமங்கலம், மதுரை மார்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் / மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த நடைமுறையானது நாளை 16.10.2024, முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.வழித்தடங்கள்:விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம்,(நகர் பேருந்துகள்)விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - பழைய பேருந்து நிலையம் - கள்ளிக்குடி - வழியாக திருமங்கலம் செல்ல வேண்டும். மீண்டும் திருமங்கலத்திலிருந்து அதே வழித்தடத்தில் திரும்பவும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரை மார்க்கம். ( புறநகர் பேருந்துகள்)விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி - திருமங்கலம் - மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும். சிவகாசி முதல் மதுரை மார்க்கம் (புறநகர் பேருந்துகள்)சிவகாசி - நந்தா ஹோட்டல் - புறவழிச்சாலை - எம்ஜிஆர் சாலை - புதிய பேருந்து நிலையம் - கருமாதி மடம் - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி வழியாக மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் சிவகாசி செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சேவைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து தீர்வு காணும் வகையில் "வணக்கம் விருதுநகர்" என்ற 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர்க்கும் சேவை எண் 97913-22979 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றவுள்ளனர். இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். பொதுமக்களின் குறைகள் மீது விரைந்தும், திறம்படவும் செயலாற்ற அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரிவிக்கப்படும் புகார்கள் துறை வாரியாக பிரித்து அனுப்பப்படுவதோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.எனவே பொதுமக்களின் அடிப்படை வசதிகள், சேவைகள் தொடர்பான குறைகளை 97913-22979 என்ற தொலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டும் அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவும் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.• குழந்தை திருமணங்கள் மற்றும் இளவயதில் கருவுறுதல் போன்றவற்றால் குழந்தைகள் பிறப்பின் போது, மனவளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் பிறப்பதுடன், குழந்தை பிறப்பின் போது குழந்தை மற்றும் குழந்தையின் தாய்மார்கள் இறப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.• விருதுநகர் மாவட்டத்தில் மாணவ/மாணவிகள் தங்களுடைய கல்வியினை தொடர்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதும்;, குழந்தை திருமணங்கள், இளவயது கருவுறுதல் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்வுகள் பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்படும் போதிலும் குழந்தை திருமணங்கள், இளவயது கருவுறுதல் போன்றவற்றால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், உடல் நிலையும் பாதிக்கும் நிலை உள்ளது.• குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.• குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.• இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள்• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.• குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.• இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.• 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் கடந்த 01.04.2023 முதல் 31.03.2024 வரை நூற்றி பதினெட்டு (118) குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக நானூற்றி ஐந்து (405) குழந்தைகளின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், அதன் மீதும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S ,., அவர்கள் தெரிவித்தார்.
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரா ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடா வெளியிட்ட அறிக்கையில்‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.இந்நிலையில் தான் ரத்தன் டாடா, மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.09) இரவு, 11.30மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஓய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர் களுக்கு முன்னோடியாகவும் உலகஅரங்கில் திறமையான திகழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ரத்தன் டாடாவின் இறப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்பு செய்து தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்'' என கூறியுள்ளார்.ல்,‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது.இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை திட்டமிடப்பட்டு மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழாவிற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகள் வர விரும்புவதாலும், கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காகவும் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று மேலும் மூன்று நாட்கள் 10.10.2024 வியாழக்கிழமை மாலை வரை புத்தகக் காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கிட சிறப்பு முகாம் வரும் 09.10.2024 புதன்கிழமை அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து அதிகஅளவில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொள்ளுமாறும், கலந்துகொள்ள விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள்https://docs.google.com/forms/d/1WLiFUFOri9FCZBEYD8GYoNCc84r9JgQp0qFlNS1qiGI/edit என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறும் மாவட்டஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதம் 17-ம் தேதி (03-10-2024) வியாழக்கிழமை முதல் புரட்டாசி மாதம் 26-ம் தேதி (12-10-2024) சனிக்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.அனைவரும் மன அமைதியும், வளமும், நலமும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்..நவராத்திரி நன்னாளில் கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்கள்.நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.00-9.00 மணி வரை ஸப்தஸதீ பாராயணம் நடைபெற உள்ளது. மாலை சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.நாள்,03.10.2024 வியாழக்கிழமை -ஸ்ரீ ராஜராஜேச்வரீ - மங்கள இசை04.10.2024 வெள்ளிக்கிழமை - ஸ்ரீ மீனாக்ஷி, ஸ்ரீமதி ராதிகா அவர்களின் மாணவிகள் வழங்கும் வாய்ப்பாட்டு05.10.2024 சனிக்கிழமை - ஸ்ரீ அன்னபூர்ணா - ஸ்ரீ முருகன் அவர்களின் மாணவ மாணவியர் வழங்கும் வயலின் & வாய்ப்பாட்டு06.10.2024 ஞாயிற்றுக்கிழமை-ஸ்ரீ தான்யலக்ஷ்மீ -ஸ்ரீ P.M.பாலு அவர்களின் மாணவியர் வழங்கும் வாய்ப்பாட்டு07.10.2024 திங்கள்கிழமை -அனந்தசயனம் - ஸ்ரீ அன்னப்பராஜா அவர்களின் மாணவ மாணவியர் வழங்கும் கீபோர்டு08.10.2024 செவ்வாய்க்கிழமை-ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ரூபிணி -ஸ்ரீமதி ஐஸ்வர்யா அவர்களின் மாணவியர் வழங்கும் பரதநாட்டியம்09.10.2024 புதன்கிழமை ,ஸ்ரீ துர்கா, லக்ஷ்மீ ஸரஸ்வதி - ஸ்ரீ கோகுல்நாத் அவர்களின் மாணவ மாணவியர் வழங்கும் வாய்ப்பாட்டு & மிருதங்கம். 10.10.2024 வியாழக்கிழமை,ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி - துர்க்காஷ்டமி11.10.2024 வெள்ளிக்கிழமை (சரஸ்வதீ பூஜை) - ஸ்ரீ சிவபூஜா ரூபிணிமுனைவர் S.B.பத்மசங்கர் அவர்களின் மாணவியர் வழங்கும் வீணை12.10.2024 சனிக்கிழமை (விஜயதசமி)ஸ்ரீ மீனாக்ஷி கல்யாண அலங்காரம் - வாழும் கலைக் குழுவினர். இராஜபாளையம்.குறிப்பு:நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 7.00-9.00 மணி வரை ஸப்தஸதீ பாராயணம் நடைபெற உள்ளது. மாலை சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.ஸப்தஸதீ பாராயண ஸங்கல்பத்திற்கு நாளொன்றுக்கு ரூ 1000/-இத்திருக்கோவிலில் 10-10-2024 வியாழக்கிழமை துர்க்காஷ்டமி அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறும் சிறப்பு திருவிளக்கு பூஜையில் பங்கு கொண்டு அனைத்து நலங்களும் பெற்றுய்ய கேட்டுக்கொள்கிறோம்.துர்க்காஷ்டமியன்று திருவிளக்கு பூஜை செய்வது சிறந்த பலனைத்தரும். திருவிளக்கு பூஜை கட்டணம் ரூ 25/-நவராத்திரி பூஜை கட்டளைதாரராக விரும்புபவர்கள் ரூ 3000/- நன்கொடையளித்து திருக்கோவிலில் முன்பதிவு செய்து கொள்ளவும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது 9003273690 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்). அக்ஷராப்யாஸம்--"ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ! வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே ஸ்தா!!''நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 26-ம் தேதி (12-10-2024) விஜயதசமி நன்னாளாகிய சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் நமது திருக்கோவிலில் உள்ள வித்யாஸரஸ்வதி சந்நிதிக்கு முன்பாக அக்ஷராப்யாஸம் சிறப்பாக நடைபெற உள்ளது.அக்ஷராப்யாஸம் செய்து கொள்ளக்கூடிய குழந்தைகள் தாம்பாளம்,வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உதிரிபுஷ்பம், சரம், பச்சரிசி மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றுடன் காலை 6.00 மணிக்குள் வித்யா ஸரஸ்வதியின் அருள் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.அனைவரும் மன அமைதியும், வளமும், நலமும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம்.இப்படிக்கு பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்
புரட்டாசி மாதம் 17-ம் தேதி (03-10-2024) வியாழக்கிழமை முதல் புரட்டாசி மாதம் 26-ம் தேதி (12-10-2024) சனிக்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தசதீ பாராயணமும், அம்பாளுக்கு அபிஸேகமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது..நவராத்திரி நன்னாளில் கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்கள்.நாள்,கிழமை,அலங்காரம்03.10.2024 வியாழக்கிழமை - ப்ராஹ்மீ04.10.2024 வெள்ளிக்கிழமை-புவனேச்வரீ05.10.2024 சனிக்கிழமை -கோவிந்த ரூபிணீ06.10.2024 ஞாயிற்றுக்கிழமை - ஐந்த்ரீ07.10.2024 திங்கள்கிழமை - மாஹேச்வரீ08.10.2024 செவ்வாய்க்கிழமை -கௌமாரீ09.10.2024 புதன்கிழமை - வைஷ்ணவீ10.10.2024 (துர்க்காஷ்டமி)வியாழக்கிழமை - மஹிஷாசுரமர்த்தினி11.10.2024 (சரஸ்வதீ பூஜை) வெள்ளிக்கிழமை - மஹாஸரஸ்வதீ12.10.2024 (விஜயதசமி) – சனிக்கிழமை,மாலை 6 மணிக்கு காலபைரவர் அபிஸேகம். அனைவரும் வளமும், நலமும் மன அமைதியும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம். ஸப்தஸதீ பாராயணம் நாளொன்றுக்கு சிறப்பு ஸங்கல்பத்திற்கு ரூ 1000/-நவராத்திரி சிறப்பு பூஜைக்கு நாளொன்றுக்கு ரூ 2000/- மேலும் பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளும் பூஜா திரவ்யங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது - 9003273690 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).இப்படிக்கு பி. ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.