25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முக்கிய அறிவிப்பு

Apr 14, 2026

சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர பிரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம்.75 ஆண்டுகள்சின்மயா அம்ரித் மஹோத்சவ்,சின்மயா மிஷன் தொடங்கப்பட்டு 75ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டுஆன்மீக சிறப்புச் சொற்பொழிவுநிகழ்த்துபவர்பரமபூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் அனுகூலானந்தாஜீநாள் : 15-04-2026, புதன்கிழமைநேரம் : மாலை 06.30 மணிக்குஇடம் : ஸ்ரீமதி ருக்மணியம்மாள் அரங்கம், இராஜபாளையம்.அனைவரும் வருக !இப்படிக்கு "குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா.   டிரஸ்டி.

Apr 13, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து – நிரந்தர தீர்வு எப்போது?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கடந்த பல ஆண்டுகளாக உரிமம் இன்றி செயல்பட்டு வந்ததாக கூறப்படும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து, மாவட்ட மக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஆண்டுதோறும் குறைந்தது 15க்கும் மேற்பட்ட பட்டாசு விபத்துகளை சந்தித்து வருகிறது. இவ்விபத்துகளால் ஆண்டுக்கு சராசரியாக 60 முதல் 80 பேர் வரை உயிரிழப்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். இருந்தபோதிலும், விபத்துகள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அரசு நிவாரணம் வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் நீண்டகால திட்டமிடல் மற்றும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான திரு. பி. ராஜகோபால் அவர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,“விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பது போதுமானதல்ல. விபத்து நடைபெறாமல் தடுப்பதற்கான திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு முறைகள் பலவீனமாக உள்ளன. அதிகாரிகள் தங்களது கடமைகளை முறையாக செய்திருந்தால் இவ்வாறான விபத்துகளை தவிர்க்க முடிந்திருக்குமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த விபத்திற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனக்குறைவுக்கும், கடமையின்மைக்கும் உட்பட்டது என அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பான அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பற்ற சூழல், பயிற்சியற்ற மற்றும் தகுதியற்ற தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களா, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதனை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும், உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த துயர சம்பவம் மீண்டும் ஒருமுறை, பட்டாசு தொழில்துறையில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக அரசு எடுக்க வேண்டியது காலத்தின்தேவை என  வலியுறுத்துகின்றார்.P. Raja Gopal, Secretary General,Child Alert Alliance (CAA)Tamilnadu & Puducherry.

Apr 04, 2026

MEGA CAREER GUIDANCE FOR RAJAPALAIYAM EDUCATIONAL INSTITUTIONS & STUDENTS

MEGA CAREER GUIDANCE FOR RAJAPALAIYAM EDUCATIONAL INSTITUTIONS & STUDENTS.We are Happy to Invite you to theIIT For ALL PROGRAMMEA Great Opportunity for School Management & TeachersDATE: 06.04.2026, Monday,Time: 9.30 a.m. - 12.30p.m.VENUE: A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.

Apr 03, 2026

FIRST TIME IN RAJAPALAIYAM CAREER GUIDANCE PROGRAMME FOR +2 STUDENTS.

FIRST TIME IN RAJAPALAIYAMCAREER GUIDANCE PROGRAMME FOR +2 STUDENTSDATE: 04.04.2026, SaturdayTIME: 9.00 AM - 5.00 PMVENUE: A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE, RAJAPALAIYAM.An Initiative bySri. A.K.D. Krishnama Raju, Managing Trustee,Sri Rao Bahadur A.K.D.Dharmaraja Education Charity Trust, Rajapalaiyam.

Mar 30, 2026

கலெக்டர் சுக புத்ரா செய்திக்குறிப்பு -நீச்சல் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு.

ஏப். 1 முதல் ஜூன் 14 வரையிலான விடுமுறைக் காலத்தில் நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பு மாவட்டவிளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடத்தப்பட உள்ளது.நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலும், காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3:30 மணி முதல் 4:30 வரையிலும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்க உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.1770. சேர விரும்புவார்கால  அட்டவணை படி பங்கேற்கலாம். விவரங்களுக்கு 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம், என்றார்.

Mar 29, 2026

ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரிபூர்ண ஆசிகளுடன்நிகழும் மங்களகரமான1200ம் ஆண்டு விஸ்வாவஸுவருஷம் பங்குனி16ம் தேதி(30.03.2026) திங்கள்கிழமையும் திரயோதசி திதியும் மகம் நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்ஸ்ரீ  ராஜகணபதி, ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர், ஸ்ரீசாரதாம்பாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக வந்துகொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நிகழ்ச்சி நிரல் காலை 7.15 மணி - குருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம் காலை 7.50 மணி - ஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம் காலை 8.15 மணி - ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம் காலை 8.45 மணி - ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம் காலை 9.15 மணி- ஸஹஸ்ரநாம அர்ச்சனை காலை 10.00 மணி -தீபாராதனை, ப்ரசாதம் மாலை 6.30 மணி -ஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள் மாலை 7.15 மணி - ரதோற்சவம்இப்படிக்கு - "குருபக்தமணி" ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி,

Mar 27, 2026

*திருக்குறள் முற்றோதல்*

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்,மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,இணைந்து நடத்தும், *திருக்குறள் முற்றோதல்*5 வயது UKG மாணவன் ர. ஆதித்யா - வின் ,உலக சாதனை நிகழ்வு.நாள்: 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை .இடம்: அரசு பெண்கள் சிறார் நூலகம், இராஜபாளையம்.அன்பு ஆதித்யா செல்வத்துக்கு அன்பு வாழ்த்துகள்.ஆதித்யாவின் அண்ணன் அகிலேஷ் ஏற்கனவே 1330 குறள் சொல்லி பரிசு பெற்றவர்.

Mar 21, 2026

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை 46-ஆம் ஆண்டுக் கம்பன் விழா.

இராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை 46-ஆம் ஆண்டுக் கம்பன் விழா,நாள் : 2026 மார்ச் 22. ஞாயிறு இடம்:ஆனந்தா கார்டன், இராஜபாளையம் பட்டிமண்டபத் தலைப்பு :வியக்க வைக்கும் வல்லமை மிக்கவர்கள் கம்பன் பேசியவர்களா? கம்பனைப் பேசியவர்களா?நடுவர் : சொல்வேந்தர் திரு.சுகி.சிவம் அவர்கள்,அனுமதி இலவசம்.பார்வையாளர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Mar 20, 2026

ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா ஞாபகார்த்த கருத்தரங்கம்.

ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு டிரஸ்ட் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் தர்மாபுரம் காந்திஜி வாசகசாலை,இணைந்து நடத்தும்,சென்னை மாகாண முன்னாள் முதல்வரும், ஒடிசா மாநில ஆளுநருமான தியாகச்செம்மல்ஸ்ரீ P.S. குமாரசாமி ராஜா ஞாபகார்த்த கருத்தரங்கம்நாள் : 21.03.2026 சனிக்கிழமை, மாலை 6.30 மணி நேரம் : N.R.K. மண்டபம்,பழையபாளையம். ஊர்வலம் : மாலை சரியாக 5:30 மணிக்கு காந்திஜி வாசக சாலையிலிருந்து புறப்பட்டு N.R.K. மண்டபம் வந்தடைதல். 

Mar 19, 2026

குழந்தை நேய செயலகம், தமிழ் நாடு மற்றும் புதுவை குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026 Child Protection Manifesto – 2026

"குழந்தை நேய செயலகம்" என்பது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் பல ஆண்டுகளாக குழந்தைகள் பாதுகாப்பு,குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள்மற்றும் குழந்தை பாதுகாப்பு செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும்சார்ந்ததல்ல. இது முழுமையாக அரசியல் சார்பற்ற, சமூக நலன் நோக்குடைய, "குழந்தை பாதுகாப்பு" என்ற ஒற்றை குரலில்இணைந்த சமூக செயற்பாட்டு கூட்டமைப்பாகும். குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறை, பாலியல் குற்றங்கள், புறக்கணிப்பு,சுரண்டல் மற்றும் ஆபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சமூக விழிப்புணர்வு, பயிற்சி, ஆலோசனை மற்றும் பாதுகாப்புநடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது."குழந்தை நேய செயலகம்" சார்பாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுவைமாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைமைகளுக்கு “குழந்தை நேய தேர்தல் அறிக்கை 2026”கோரிக்கையாக கொடுக்கபட்டுள்ளது. மேலும் வேட்பாளர்களை சந்தித்து கோரிக்கைவைக்கபட இருக்கின்றோம்.நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கையில் கீழ்க்காணும்செயல்பாடுகளை உள்ளடக்கி முன்மாதிரியான குழந்தை பாதுகாப்பு மாநிலமாக உறுதிசெய்யவேண்டுகிறோம். 1. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதிசெய்யும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறைஎன்ற பெயரில் குழந்தைகளுக்கென்றே தனிஅமைச்சகம் / தனிதுறை ஏற்படுத்தப்படும்.2. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறையின் கீழ் ஒழுக்கம் உறுதி செய்யப்பட்ட தரமான கல்வி கிடைக்கஆவண செய்யப்படும்.3. குழந்தைகளின் பள்ளி பருவத்தில் மதநல்லிணக்க வகுப்பறைகளாக செயல்பட உறுதி செய்யப்படும். இதைவலுப்படுத்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணையபெற்ற குழுக்களுக்கு அங்கீகாரம்வழங்கப்படும்.4. மாநிலத்தின் தேர்தல் சம்பந்தமாக குழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடுத்த எந்த அரசியல்கட்சிக்கும் அனுமதி இல்லை என்ற சட்டவரைவு கொண்டுவரப்படும்.5. குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை உரிமைகள் மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்யமாநில அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கப்படும்.6. மாநிலத்தின் தேர்தல் ஆணையம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான ஒழுங்கு முறைகளை வகுத்துவெளிப்படையான விழிப்புணர்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விழிப்புணர்வுதிட்டம்தன்னார்வஅமைப்புகள்மூலம்செயல்படுத்தப்படும்.7. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை முழுவதும் கட்டுப்படுத்தக்கூடிய விரைவு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும். குழந்தைகள் மீதான வன்முறை குற்றவாளிகளை மக்களின் பார்வைக்கு கொண்டுவந்துகடுமையான தண்டனைவழங்கியதற்கான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும்.8. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்படும் அனைத்து செயல்பாட்டு குழுக்களிலும்தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுத்தப்படும் என்று உறுதி செய்யப்படும்.9. மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை, குழந்தை திருமண தடுப்பு அதிகாரி, தன்னார்வ அமைப்புகள்இணைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்யப்படும்.10. பள்ளி வாளாகத்தில் இருந்து நூறு மீட்டர் தூரம் வரை எந்த விதமான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யமுழுமையான தடை விதிக்கப்படும். அனைத்து வகையான போதை பொருட்களின் நடமாட்டம் முற்றிலுமாக தடுத்துநிறுத்தப்படும்.11. இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் குழந்தைகள் மீது நடைபெறும் Online Child SexualExploitation & Abuse (OCSEA) குற்றங்களை தடுக்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளபடும்.இவை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்ந்திட ஒரு தகுதியான சமூகத்தை உருவாக்கும் சிறந்த நலன் முன்வைத்துஎழுப்பப்பட்டுள்ள எங்களின் கோரிக்கைகள் இவற்றை அரசியல் கட்சிகளாகிய நீங்கள் தேர்தல் கோரிக்கையில்சேர்க்கவும் தேர்தல் களத்தில் பரப்புரையில் பயன்படுத்தவும் மேலும் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு மேற்கூறியகோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறோம்.நம் மாநிலத்தை ஒரு குழந்தை நேய மாநிலமாக உருவாக்குவோம்iகுழந்தை நேய செயலகம்,மாநில அமைப்பாளர், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி Mobile: 999 475 2121குழந்தைகள் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்புகுழந்தைகள் நேய செயலகம் – சமூகத்தின் உறுதி

1 2 3 4 5 6 7 8 9 10 ... 22 23

AD's



More News