உயரத்திலிருந்து விழுவான் ,அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன? - அருவி நீர். பச்சைக் கீரை சமைக்க உதவாது ,வழுக்க உதவும். அது என்ன? – பாசி.
என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை. அது என்ன? - உளுந்து. .மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான். அவன் யார்? - மண்புழு.
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? தராசு. தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்/-? தேங்காய்.
நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்? - வெங்காயம் உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? - கடல் அலை
காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும். அது என்ன?--நாதஸ்வரம் காற்று இல்லாத கண்ணாடி கூண்டில், மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது.--முட்டை
காலால் உதைத்தால், காற்றால் உருளும். அது என்ன? - மிதிவண்டி . காளை கட்டிக்கிடக்குது, கயிறு ஓடிக் கிடக்குது. அது என்ன? - பரங்கிக்காய்
கால் இல்லை கை இல்லை, கண்கள் உண்டு, வால் உண்டு, சிறகுண்டு. அது என்ன? மீன் பூ இருந்தும், பறப்பதில்லை. அது என்ன? சேவல் கொண்டை
பூவை பூவெடுத்து பூ மீது வைத்தால், பூ போக மீதி பூ என்ன இருக்கும்?எறும்பு, கரும்பு, வரப்பு விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது. அது என்ன?தஞ்சாவூர் பொம்மை .
கரிச்சட்டி வயிற்றிலே, வெள்ளை முத்துக்கள். அது என்ன? சாதம் வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே.அது என்ன? -அல்லிப்பூ .
ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப் போகிறாள். --பாதகுறடு, சந்தனம், விசிறி . கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.-உமி, நெல் .