25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விடுகதை

Jul 13, 2026

பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. அது என்ன?.

பிறக்கும் போது வால் உண்டு, இறக்கும் போது வால் இல்லை. அது என்ன? - தவளை.  முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்?  - துடைப்பான் .

Jul 06, 2026

.வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன பாய் ?

சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். அவன் யார் ?  செங்கல்  .வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன பாய் ?  ரூபாய்

Jun 29, 2026

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்

ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?  -  மூச்சு   ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன?  -  ஊதுபத்தி

Jun 22, 2026

கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான்.

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன?  -  முதுகு.கலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்?  -  சேவல்

Jun 15, 2026

கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும்.

கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன?- கண்ணீர் கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம் கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன?  வேம்பு 

Jun 08, 2026

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?.

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அது என்ன?  - உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அவன் யார்? - சோளக்கதிர்  

Jun 01, 2026

.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன்.

கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு.மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்? – பஞ்சு.  

May 25, 2026

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். 

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? -தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? - மின் விசிறி

May 18, 2026

ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது.

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? - விளக்குத்  திரி. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்.  

May 11, 2026

அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான்.

மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன? வயது அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News