பார்க்கத்தான் கறுப்பு, ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு. அது என்ன? - தேயிலைகாதை திருகினால், பாட்டு பாடுவான் .அவன் யார்? - ரேடியோ
வால் நீண்ட குருவிக்கு, வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல. அது கடல் இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது.அது பட்டாசு
கையில்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?:படகு.எழுதி எழுதியே, தேய்ஞ்சு போனான். அவன் யார்? பென்சில்.
ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால், மறுபடியும் இயங்காது. அது என்ன? - இதயம்தண்ணியில்லாத காட்டிலே, அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? - ஒட்டகம்.
சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? மின்விசிறி மரத்துக்கு மரம் தாவுவான், குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான், சாமி அல்ல, அவன் யார்?: அணில்
கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? புகைகாலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம். அது என்ன? வானம்
நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன். நான் யார்? - மணிக்கூடு. ஆள் இறங்காத குளத்தில், ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன? -மத்து
காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு எண்ணெய் வேண்டா விளக்கு. எடுப்பான் கை விளக்கு. அது என்ன? மெழுகுவர்த்தி
காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? - மரம்-கரி-நெருப்பு எண்ணெய் வேண்டா விளக்கு. எடுப்பான் கை விளக்கு. அது என்ன? - மெழுகுவர்த்தி