25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மக்களின் எதிர்பார்ப்பு

Feb 27, 2026

மாமரங்களில் நன்றாக பூ எடுத்துள்ளஇந்தாண்டு. அமோகம்தான் மாம்பழ உற்பத்தியாளர்கள் நம்பிக்கை.

மாமரங்களில் இந்தாண்டு பல இடங்களிலும் நன்றாக பூ எடுத்துள்ளது. காலநிலை ஒத்துழைத்தால் இந்தாண்டும் மாம்பழ விளைச்சல் அதிகமாகவே இருக்கும். மார்ச்பாதியில் விளைச்சல் துவங்கும்.அல்போன்சா, கேசர் உள்ளிட்ட மாம் பழங்களுக்கு  தனித்த சுவை, வாசனை, நிறம் ஆகியவற்றால்,வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள், மாம்பழ ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாக உள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம், அமெரிக்காவின் வரி குறைப்பு ஆகியவற்றால், இந்திய மாம்பழங்கள் இந் தாண்டு கூடுதலாக ஏற்றுமதியாகும்,” என்றனர்.   1.46 லட்சம் ஹெக்டேரில் தமிழகத்தில் மாம்பழ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டன் மாம்பழங்கள்  உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்தாண்டு பல இடங்களிலும் மாமரங்களில் நன்றாக பூ பூத்துள்ளது. போதுமான விலை கிடை த்தால் .இந்த ஆண்டும் அமோகம்தான். என விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்  

Feb 14, 2026

ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் பணிகள் நடைபெறுவதால் ,ராஜபாளையம் தென்காசி ரோடு இணைப்பு சாலை தொடக்கப்பகுதியில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து அபாயம் உள்ளது.  2025  பிப். 8ல் இணைப்பு சாலை பணிகள்ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டுக்கு ரூ.38.34 கோடியில் 2.10 கி.மீ துாரத்தில் 100 அடி அகலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. .இணைப்பு சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் நுழைவு, வெளியுறும், பகுதிகளில் சென்டர் மீடியன் பணி நடக்கிறது.டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் நடைபெறும் பணியால்வளைவில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமத்துடன் விபத்து அபாயம்ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். நுழைவு பகுதி விரிவாக்கத்தில் உள்ள சிக்கலைமாவட்ட நிர்வாகம் தலையிட்டு ,கனரக வாகனங்களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

Feb 13, 2026

மக்காச்சோளம் வெளி மாநிலங்களிலிருந்து வருவதால் உள்ளூரில் விலை இல்லை .விவசாயிகள் கவலை ?

10 ஆயிரம் ஏக்கரில், விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப் பட்டுள்ளது. பன்றிகள், மயில்கள் தொல்லை, முறையான மழையின்மை இது போன்ற இடர்பாடுகளை கடந்து மக்காச்சோள பயிர்கள் நன்கு விளைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு 15 இல் இருந்து 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து உள்ளனர்.அறுவடை செய்யப்படுவதால் நல்ல விலை போகும் என்று விவசாயிகள் நினைத்த நிலையில், சென்ற ஆண்டு 1 குவிண்டால் 2,500 க்கு விற்றது .இன்றைக்கு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 1200 லிருந்து 1700 வரை விலை போகிறது. அரசு தரப்பில்எந்த விதமான கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்வதில்லை. கால்நடைகள், கோழி பண்ணைகளுக்கு மக்காச்சோளம் அதிக அளவு தேவைப்படுவதால் என்றைக்கும் மக்காச்சோளத்திற்கு கிராக்கி உள்ளது. . அரசுக்கு இது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் இதற்குரிய கூட்டங்கள் நடத்தியும் தீர்வுகாணப்படவில்லை.மக்காச்சோளத்திற்குஉரியவிலைநிர்ணயம்செய்யஅரசுமுன்வரவேண்டும்என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

Feb 11, 2026

மாம்பூக்கள் மா மரங்களில் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்என விவசாயிகள் எதிர்பார்ப்பு .

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு மாமரங்களில் பரவலாக மாம்பூக்கள் பூக்க துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் பூத்த பூக்கள் பாதிப்பின்றி விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள்  எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, அல்போன்சா, சப்போட்டா போன்ற மா சாகுபடி ஸ்ரீவில்லிபுத்துார்தாலுகாவில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, பந்தபாறை, திருவண்ணாமலை பகுதிகளிலும், வத்திராயிருப்பில் புதுப்பட்டி, கான்சாபுரம், அத்திகோயில், பிளவக்கல் அணை, தாணிப்பாறை பகுதிகளில் மா சாகுபடி ஏராளமான ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் அதிகளவில் நடந்து வருகிறது. அதிக குளிர் மற்றும் மழை, தேன் நோய் பாதிப்பினால்  கடந்த ஆண்டு மா விளைச்சல் சிறப்பாக இல்லாமல் விவசாயிகள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழி கடைசியில் துவங்கி தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளது.இன்னும் இரு வாரங்களில் காய் பிடித்து மே மாதம் முதல் மாம்பழ சீசன் துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Jan 26, 2026

பருத்தி கொள்முதல் காட்டன் கார்ப்பரேஷன் மூலம்  நிலையம் அமைக்க வேண்டும்என விவசாய சங்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்  .

விருதுநகர் மாவட்டத்தில்  ராஜபாளையம் ,அருப்புக்கோட்டை, பாலவநத்தம், திருச்சுழி, உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி நடக்கிறது.விவசாயிகள் தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையிலும், கால தாமதமாக பணம் வருவதாலும்  விளைந்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் திண்டாடி வந்தனர். ஸ்டாக் வைக்கவும், விற்க முடியாமலும் பாதிப்பில் விவசாயிகள் !15 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் பருத்தியை கொடுத்து வந்தனர்.அதுவும் மூடப்பட்ட நிலையில், ஸ்டாக் வைக்கவும், விற்க முடியாமலும் பாதிப்பில் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் பருத்தி வியாபாரிகளுக்கு விற்று வந்தனர்.இந்நிலையில்,  விவசாய சங்கங்கள் விருதுநகர் மாவட்டத்தில் அரசு பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கலெக்டர் இந்த பிரச்னையில் காட்டன் கார்ப்பரேஷன் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவிவசாய சங்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்  .

Jan 17, 2026

யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாளையம் வனச் சரகங்களுக்கு இடையே உள்ள ராக்காச்சி அம்மன், சேத்துார், விரியன்கோயில், அணைத்தலை ஆறு, கல்லாத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இரவு நேரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் ராஜபாளையம் 6வது மைல் நீர்தேக்கம் கல்குவாரி ஒட்டி வானூத்தி பறம்பு அருகே  தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை 40 தென்னங்கன்று குருத்துகள், வளர்ந்த மா மரக்கிளை பாதியாக உடைத்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும், வாழைக் கன்றுகளை தின்றும் சேதப்படுத்தி உள்ளது.  மீண்டும் இவற்றை உருவாக்க லட்சக்கணக்கில் பணமும், காலமும் தேவைப்படும். தகுந்த இழப்பீடு வழங்குவதுடன், யானை புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

Jan 09, 2026

அறுவடைக்கு தயாராகும் மஞ்சள் கிழங்குகள். 

விரலி மஞ்சள் கிழங்குள்விருதுநகர்மாவட்டத்தில்மல்லாங்கிணறுஅருகேஉள்ளசூரம்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது.பொங்கல் பானையில் பொங்கல் பண்டிகை அன்று விரலி மஞ்சள் கிழங்குகளை செடியோடு கொத்தாககட்டி பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம்.மஞ்சள் கிழங்குகள் சில நாட்களாக ,பெய்த மழை காரணமாக நல்ல விளைச்சல் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

Jan 08, 2026

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை. ராஜபாளையம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

 15 ஆயிரம் ஏக்கரில் ராஜபாளையம் ,தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவிவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்த கனமழையால் சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் நன்கு விளைந்தபாதித்த நெற்பயிர்கள் , விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்துள்ளனர். விவசாயிகள்அறுவடைசெய்யப்படும்நெல்மணிகளைஉலரவைக்க, உலர்களம்அமைக்கவும்நெல்மணிகளை பாதுகாக்கவும், கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நெல்கொள்முதல்நிலையம் தொடங்கினால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெறுவதுடன் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க ,தற்போது அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450 வரை நிர்ணயம் செய்துள்ளது. தனியாரிடம் நெல் மூடைகளை விற்பனை செய்தால்குவிண்டாலுக்கு ரூ.1,800 நிர்ணயம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்குஇழப்பீடு  ஏற்படும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் நெல்கொள்முதல் நிலையம் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

Jan 07, 2026

வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

ராஜபாளையம் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகஇருக்கும்.ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், வெளியூர்களிலிருந்து எண்ணற்ற பேரும் தங்களது குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இங்குள்ள தோப்புகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர்.இப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுப் பன்றி. முள்ளம்பன்றி, மான், சாம்பல் நிற அணில் ராஜ நாகங்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் இங்குவசித்து வருகின்றன இங்கு  போலீஸ் பாதுகாப்பு வசதி எதுவும் இல்லை.இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுற்றுலா பயணிகள் பெரிதும்சிரமப்படுகின்றனர். எனவே வனத்துறையினருடன் போலீசாரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேற்கண்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்  என மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

Dec 29, 2025

அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை விதிகளுக்கு அக்கறை கொடுக்கும் போக்கு வரத்து போலீசார், அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளின் படி, நகர பகுதிகளில் எல்லைக்குட்பட்ட வாகனங்களை இயக்கும்போது குறைந்த பட்ச ஒளி விளக்கு ,எனும்   'லோ பீம்' உபயோகிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.வாகன ஒட்டிகள் இரவில் பிரயாணம் செய்யும் பொழுது, எதிரில் வரும் வாகனங்களுக்கு கார் லைட்டை டிம் செய்து, பின் ஒளிர விட வேண்டும் என் பது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது வாகன விதி .இது யாருக்கும் தெரியாதா? அல்லது அலட்சியமா?அதிகபட்ச ஒளி விளக்குகளை எறிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை.திடீரென அதிக ஒளி கண்ணில் படும்போது பார்வை ஸ்தம்பித்து முடிவெடுப்பதற்குள் விபத்து ஏற்படுவது  உடன், தொடர்ந்து எதிர் கொள்ளும் இத்தகைய ஒளியால் விழித்திரை பாதித்து பார்வை திறன் குறைகிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள், மக்கள்எதிர்பார்க்கின்றனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News