25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களின் எதிர்பார்ப்பு

Oct 22, 2024

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணி முடியாமல், மக்கள் அவதி

இராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ்டாண்ட் கட்டடங்கள் இட நெருக்கடி, பழைய கட்டுமானங்களின் விரிசலை அடுத்து ரூ.2.90 கோடியில் 2023 ஜனவரியில் பணிகள் தொடங்கியது. மாற்று ஏற்படாக மகப்பேறு மருத்துவமனை முன்பு தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அறிவிக்கப்பட்டு ,பயணிகள் நின்று செல்ல தகர ஷெட் இருக்கை ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பித்த புதிதில் தொடர் குடிநீர் வசதி அமைத்து பின்னர் அனைவராலும்கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது.நாகராஜன் கமிஷனர் மேலும் ரூ.50 லட்சம் நிதிக்காக எதிர்பார்த்துள்ளோம். இருப்பினும் நிலுவையில் உள்ள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து பேவர்பிளாக்தளம்,சுற்றுச்சுவர்உள்ளிட்டமீதபணிகள்விரைந்துமுடிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் .தினமும் பள்ளி, கல்லூரி, மாணவிகள் முதியோர் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடையாமல் ரோட்டில் நின்று செல்வதும் இயற்கை உபாதைக்கான ஏற்பாடு எதுவும் செய்யாததால், ஒதுக்குப் புறமான இடங்களை தேடி, சங்கடத்திற்கு உள்ளாகி வருவதும் தொடர்கிறது. பணிகள் முடியும் வரை மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Oct 21, 2024

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் டூவீலர்கள் நிறுத்துவதால் பயணிகள் அவதி

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் நடை பாதை வளாகத்திற்குள் டூவீலர்களை கண்டபடி நிறுத்துவதால் பயணிகள்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து 600க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகிறது. உள்ளூர் முதல் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட் வளாக நடை பாதையில் பலரும் டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ்களை பிடிக்க அவசரத்திற்கு செல்லும் பயணிகள் நிலைசிக்கலுக்குஉள்ளாகிறது.மின்வாரியம், போக்குவரத்து, போலீஸ், வழக்கறிஞர் போன்ற ஸ்டிக்கர்கள் கொண்ட நம்பர் பிளேட் வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தி செல்கின்றனர்.'  இவர்களைக் கண்டு பயணிகளும், வாகன நிறுத்தத்தில் டூவீலர்களை நிறுத்துவதை தவிர்த்து வளாக பகுதியிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.இவற்றைக் கண்காணிப்பதுடன் வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Oct 19, 2024

இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பற்றாக்குறை

இராஜபாளையம் அரசு மருத்துவமனை நகர் பகுதியில் மகளிர், குழந்தைகளுக்கு என தனியாகவும், தென்காசி ரோட்டில் பொது மருத்துவமனை எனவும் இரண்டு அரசு மருத்துவமனைகளில் 212 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. தினமும் வெளிநோயாளிகளாக 1000 பேர் வருகின்றனர். உள் நோயாளிகளாக 212 படுக்கைக்கு பதில் 250 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.அதிகமாக கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வருவதால் நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள நேயாளிகளின் உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கேரள மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.புதிய மருத்துவமனை கட்டடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாததால் மீதம் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ரேடியாலஜி நிபுணர் இல்லாததால் சிறப்பு சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பு வேண்டிய உள்ளது.அரச மருத்துவமனை ஒட்டிய கழிவுநீர் வாறுகாலை காலை அகலப்படுத்துவதுடன், எதிரே தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற மாற்றுவழி காண வேண்டும்.  பொது மருத்துவமனையில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவு சிறப்பு சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளன. ஆயில் மசாஜ் உபகரணங்கள், நீராவி சிகிச்சை பொருட்கள், இதற்கான படுக்கை வசதி, நோயாளிகளுக்கான பயிற்சி உபகரணங்கள் காட்சி பொருளாக போடப்பட்டுள்ளது.

Oct 18, 2024

பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கரை பலவீனமான கண்மாய்கள், சேதம் அடைந்த மடைகள் குறித்து ஆய்வு செய்து பருவமழை தீவிரமடைவதற்கு முன் சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்கள் 342, ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் 712 உள்ளன. சில மாதங்களுக்க முன் பெய்த கோடை மழையில் பெரும்பான்மையான கண்மாய்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனெனில் பெரும்பான்மையான கண்மாய்களில் கரைபலவீனமாக உள்ளதாலும், மடைகள் சேதம் அடைந்து இருப்பதாலும் தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறி விடுகின்றது.விருதுநகர்மாவட்டத்தில்சிவகாசி, இராஜபாளையம்,விருதுநகர்  ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சூழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மிளகாய், பாசி, வாழை, கரும்பு, கத்தரி, பருத்தி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர்ஒரு சில கண்மாய்களின் கரைகள் உடைந்து தண்ணீர் விவசாய நிலத்திற்குள் பாய்வதால் பயிர்களும் அழிந்து விடுகின்றது. கண்மாய்களில் கரைகள் உடையும்போதும், மடைகள் சேதம் அடையும் போது அதிகாரிகளால் தற்காலிகமாக சரி செய்யப்படுகிறதே தவிர நிரந்தரமாக சரி செய்யப்படுவதில்லை.கரை பலவீனமான கண்மாய்கள், சேதம் அடைந்த மடைகள் குறித்து ஆய்வு செய்துபருவமழை தீவிரமடைவதற்கு முன், பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் உடனடியாக சரி செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Oct 15, 2024

நீர்வரத்து அதிகரிப்பால் அய்யனார் கோயில் ஆற்றில் குளிக்க வனத்துறை தடை

தொடர் மழை  காரணமாக இராஜபாளையம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறை  சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை எதிர்பார்த்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்த லேசான மழையால் ஈரப்பதம் பெற்றது. நேற்று முன்தினம் இரவு, நேற்று மதியம் முதல் பெய்த கன மழையால் ராஜபாளையம் மாவரிசி அம்மன், முள்ளிக் கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது  இதன் காரணமாக நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு ஆற்று நீர் தடுப்பணை மூலம் நீர் திருப்பி விடப்பட்டு தேக்கப்படுகிறது. தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது. மழை தொடர்ந்தால் புதுக்குளம், பிரண்டைகுளம், புளியங்குளம் போன்ற அடுத்தடுத்து உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு  நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என விவசாயிகள், எதிர்பார்த்துள்ளனர்.

Sep 24, 2024

செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள், வேன்கள், நிறத்துமிடமாக மாறிய இராஜபாளையம் காமராஜ் நகர்

இராஜபாளையத்தில் காமராஜ் நகர், இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. இந்த ஏரியாவில் நிறைய உணவு விடுதிகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், அமைந்துள்ளன. ஹாஸ்பிடல் ரோடு என்ற ஏரியாவில் செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள் வேன்கள், இங்கு வரிசையாக நிறுத்துகின்றனர். வீடுகள் லாட்ஜ்கள், பள்ளிகள், உணவு விடுதிகள் இருக்கும் இடத்தில் “ பார்க் செய்வது தவறு  ”என எடுத்துச்சொல்லியும் கேட்பதாக இல்லை.சுகாதாரம் இங்கு பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. “உங்க ரோடா ” “இது பப்ளிக் ரோடு யாருவேண்டுமானாலும் நிறுத்தலாம். ”என்று தைரியமாகக் கூறுகின்றனர். முனிசிபலில் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை, பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் இதைத் தாண்டி, எதிர் வரும் வண்டியைத் தாண்டிச் செல்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து நிற்கும் இந்த வண்டிகளை, யார் சொன்னால்  வேறு இடத்தில் நிறுத்துவார்கள் என்று தெரியாமல் காமராஜர் நகர் வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sep 23, 2024

இராஜபாளையம் நகரின் நீரின் வேதித்தின்மை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் ஆதார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பு உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வருகின்றன. கிணறு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தென்னை, வாழை காய்கறி பயிர்களும், நீர் குறைந்த பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஆழ்துளை கிணற்று நீர் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.முன்பு கண்மாய் பாசன நீர் மூலம் பெறும் விவசாயம் நல்ல மகசூலை பெற்று வந்த நிலையில் நீரின் தன்மை உவர்ப்பாக மாறியதுடன் ஆழ்துளை கிணற்று நீரின் வேதித்தன்மை, அதிகரித்துள்ளதால் சாகுபடி குறைவும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.இதற்கு காரணம் நகரின் சாக்கடை, கழிவு நீர் தேங்கும் பகுதியாக கண்மாயை மாற்றியதே ஆகும். பல்வேறு பகுதிகளும் இதே நிலை காணப்படுவதால் நீர் நிலைகளை ஒட்டிய விவசாயமும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்ணின் தன்மையை ஆய்வு செய்து பிரச்சனைகளை போக்க அரசு துறைகள் முன் வரவேண்டும் என்ற விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

Sep 23, 2024

சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு வரை  தடுப்பு சுவர் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

இராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு உள்ளது. இதனை ஒட்டி 20 அடி அகலம் 10 அடி ஆழம் கொண்ட மழை நீர் கால்வாய் புது பஸ்டாண்ட் எதிரே உள்ள புதியாதிகுளம் கண்மாயில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. Iசங்கரன்கோவில் முக்கில் தொடங்கி சிங்கத்திருளப்ப சுவாமி கோவில் வரை, பெரும் பகுதி இடங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் ரோட்டில் இருந்து ஒதுங்கும்போது, கால்வாயில் விழுந்து காயம் அடைவது தொடர்கதை ஆகிறது. இரவு நேரங்களில் சாலையை ஒட்டி உள்ள கால்வாய் இருப்பதை வாகன ஒட்டிகள் அருகில் வந்தால் மட்டுமே காண முடியும். இதுவரை  பல உயிர் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பு கம்பி அல்லது தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sep 10, 2024

ஆதார் சேவைக்கு அலையும் இராஜபாளயம் நகர மக்கள்.

ஆதார் சேவைக்காக நிரந்தர சேர்க்கை, மையங்கள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, அலுவலகங்களில் எல்காட் மூலம் சேவை வழங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் ஆதார் உடன் பான்கார்டு இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் பான்கார்டு பெயர் ஒற்றுமைக்காக ,ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் அவசியமாகிறது. இது தவிர பள்ளி மாணவர்கள், மத்திய மாநில அரசுகளின் சலுகை திட்டங்களை பெறுவோர், அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ,இராஜபாளையத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களில் தினமும் கூட்டம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கிராமப்பகுதியில் இருந்து திருத்தத்திற்காக வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வருவோருக்கு முறையாக டோக்கன் வழங்கி சேவைகள் வழங்குவது இல்லை. இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறது. சேவை மையம் திறப்பு அடைக்கப்படும் நேரம் குறித்த குறிப்பு ,பொதுமக்களின் பார்வையில் படும்படியும். விடுமுறை காலங்களை முறையாக அறிவிப்பு எழுதி வைக்க வேண்டும். மாணவர்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அந்தந்த பகுதியில் சிறப்பு ஆதார் முகாம்கள் ஏற்படுத்தி கூட்டத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்--விவசாயிகள்,மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக என்ற பெயரில், மாவட்ட நிர்வாகம் கண்மாய் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்ததை, ரியல் எஸ்டேட் துறையினரும், செங்கல் சூளை அதிபர்கள் மும்முரமாக பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார கண்மாய்களில் மண் அள்ளுவதற்கான விதிமுறைகளை மீறி கண்மாய் கரைகளை உடைத்து பாதை ஏற்படுத்தி கரைகளை ஒட்டியும், மடைகளில் தண்ணீர் வெளியேற வழி இன்றியும் அதிக ஆழத்திற்கு மண் அள்ளுகின்றனர். இயந்திரம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது.விவசாயத்திற்கு ஆதாரமான கண்மாயின் உள்பகுதியில் சிறு சிறு தெப்பங்களாக மாற்றும், இவர்களின் செயல் எல்லை மீறி போவது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? என்ற விரக்தியில் விவசாய சங்கங்களும் தவித்து வருகின்றனர்.

Aug 28, 2024

இராஜபாளையத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வைக்கும் பிளக்ஸ் போர்டுகள்.

இராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை செயல்படுகிறது. நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள மருத்துவ மனையை மறைத்து அரசியல் கட்சியினர் பிளக்ஸ் விளம்பர போர்டு வைக்க தொடங்கினர். தனியார் அமைப்பு மூலம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடை உத்தரவு பெற்ற இது குறித்து எச்சரிக்கை போடு நுழைவாயில் அருகே வைக்கப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளினால் விபத்துக்கள் ஏற்படவாய்ப்புள்ளது. போலீஸ் நகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தவை மதித்து மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 2 3 4 5 6

AD's



More News