கரிச்சட்டி வயிற்றிலே, வெள்ளை முத்துக்கள். அது என்ன? சாதம் வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே.அது என்ன? -அல்லிப்பூ .
ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப் போகிறாள். --பாதகுறடு, சந்தனம், விசிறி . கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.-உமி, நெல் .
குடிக்கலாம், அடிக்கலாம். அது என்ன? - காப்பிஏனக் கோணல் மூன்று, கண் ஆறு, கால் பத்து. அது என்ன? - கலப்பை
.தேடாமல் கிடைக்கும் பல், தேடும் செல்வத்தை குறைக்கும் பல். அது என்ன?சோம்பல் .ஆணை போகிறது, ஆனால், தலை தெரியவில்லை. அது என்ன? பரிசல்
எளிதில் உடையும் புட்டியில், இரண்டு வலுவான தைலம். அது என்ன? முட்டை சுற்றி சுழல்வான், வீர விளையாட்டாக இருப்பான்.அவன் யார்? - சிலம்பாட்டம் .
பல் துலக்காதவனுக்கு, உடம்பெல்லாம் பற்கள். அவன் யார்? - சீப்பு காதை திருகினால், கதையெல்லாம் சொல்லுவான். அவன் யார்? - வானொலி
கால் கருப்பு, முக்கால் சிகப்பு, உடைத்தால் பருப்பு, தின்றால் துவர்ப்பு. அது என்ன? குன்றிமணி கல் படாத இடத்தில், கரு இல்லாத முட்டை. அது என்ன? காளான்
.கால் இல்லாதவன், சற்று நேரத்தில் மறைகிறான்.அவன் யார்? - பாம்பு கால் இல்லாத மான், வேரில்லாத புல்லை தின்னும். அது என்ன? மீன், பாசி
.காய்க்கும், பூக்கும், கலகலக்கும், காகம் உட்கார இடமில்லை. அது என்ன?--நெற்கதிர் காரி காலை பிடிக்கப் போனால், கொக்கரக்கொம்பன் இடிக்க வருகிறான்.அவன் யார்? -சுரைக்காய் -
.தட்டு போல் இருக்கும், அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது. அது என்ன? தாமரை இலை .காய் காய்க்காத மரம், பூ பூக்காத மரம். அது என்ன மரம்? கிளுவை மரம்