விவாகரத்தான ஒரு பெண் மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். வாரிசு உரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.
சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக இந்தியாவில் தெளிவான சட்டங்கள் இருக்கின்றன ஆனாலும் மக்களுக்கு இதைப் பற்றி தெளிவாக தெரியவில்லை இதனால் தான் நம் நாட்டில் பல சொத்து பிரச்சனைகள் நீதிமன்றங்களில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன எனவே ஒவ்வொருத்தரும் இது குறித்த சட்டங்கள் தெளிவாக தெரிந்துவைத்திருந்தால் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியதில்லை.தாத்தாவின் சொத்து யாருக்கு சொந்தம்.சொத்தை பிரிக்காமல் ஒருவரின் தாத்தா இறந்து விட்டால் அந்த தாத்தாவின் சொத்து முதலில் பேரனுக்கு கிடைக்காது .பேரனின் தகப்பனாருக்கு சேரும் அதன் பிறகு தான் தகப்பனாரிடம் இருந்து மகனுக்கு கிடைக்கும் சில சமயம் தாத்தா இறப்பதற்கு முன்பு பேரனின் தந்தை இறந்து விட்டால், அப்போது தாத்தாவின் சொத்துநேரடியாக பேரனுக்கு கிடைக்கும் இதுதான் சட்டம்.