25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 28, 2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் பெண்கள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  (27.03.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.மேலும், மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். ஆனால் அந்த மதிப்பெண்களோடு விழிப்புணர்வு பெறுவது தான் மிகவும் முக்கியம். எனவே, வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மனிதனை மாற்றுகிறது. அந்த விழிப்புணர்வு மிக மிக முக்கியம். அதற்கு பிறகு தான் உங்களுடைய கற்றல் அறிவு, உங்களுடைய உழைப்பு, திறமையை வளர்த்து கொள்ளுதல் போன்றவையாகும்.நிறைய வாய்ப்புகள்  இருக்கிறது. வாய்ப்புகள் என்பது உலோகங்களை போன்றது. அதாவது எவ்வளவு ஆழமாகவும், அகலமாகவும் தங்களுடைய தேடல்கள் இருக்கிறது என்பதை பொறுத்து அந்த பொக்கிஷம் நமக்கு கிடைக்கிறது.எனவே, வாய்ப்புகள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்த காலகட்டத்தில் தான் உங்களுக்கு போதுமான அளவு நேரம் இருக்கிறது.மிக புகழ்பெற்ற தத்துவஞானி வால்டேயர் என்பவர் மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு  குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது என்று கூறுகிறார்.தோற்றம், நடத்தை, தொழில் இந்த மூன்றும் தான் உங்களினுடைய மனதை, எதிர்காலத்தை, உணர்வுகளை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள். எனவே, இந்த மூன்று குறித்தும் சரியான வகையில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 28, 2025

மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (27.03.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தாய் சேய் நலம் காப்போம் - 2025 திட்டத்தின் கீழ், மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், IAS அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

Mar 28, 2025

சித்திரை திருநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர்களுக்கான மாபெரும் கபடி மற்றும் கையுந்து போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  29.03.2025 முதல் 04.04.2025 வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஆண்களுக்கு வட்டார அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.அதன்படி, ஆண்களுக்கான வட்டார அளவிலான போட்டிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி, ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9345036559, 94435-44350 என்ற எண்ணிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9842909574, 9442418663 என்ற எண்ணிலும்,விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்;ட விளையாட்டு அரங்கத்தில் 29.03.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791634373, 7639525633 என்ற எண்ணிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தூர் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும்  04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9486497010, 8695966669 என்ற எண்ணிலும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கையுந்து  மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791229305, 7010156632 என்ற எண்ணிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கல்லூரணி எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9445383316, 9080092027 என்ற எண்ணிலும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில்  03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9994846801, 9865071770 என்ற எண்ணிலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 6369804545, 8667403340 என்ற எண்ணிலும்,திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மங்காபுரம் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 7305574443, 8428272694 என்ற எண்ணிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செவல்பட்டி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் 03.04.2025 அன்று கையுந்து மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9629648653, 9486427621 என்ற எண்ணிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கையுந்து மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலரை 8925491170 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.பெண்களுக்காக 09.04.2025 மற்றும் 10.04.2025 ஆகிய தினங்கள் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9488151214, 9994511966 மற்றும் 9865071770 ஆகிய  எண்ணிலும், கையுந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9994160149 மற்றும் 9894693210 ஆகிய  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.வட்டார அளவில் நடத்தப்படும் ஆண்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000ஃ- மும், இரண்டாம் பரிசு ரூ.5,000ஃ-மும் வழங்கப்படும். வட்டார அளவில் வெற்றி பெறும் தலா ஒரு அணிகள் 12.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.மேலும், மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1.20 இலட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகலுடன் படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 28, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தாட்கோ மூலம் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான (JEE Mains) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)  மற்றும்  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  (CPCL)  நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains)  தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதம் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது  மாணவர்களுக்கு  மட்டும் வழங்கப்படவுள்ளது.  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்க சென்னை மாவட்டத்தில் உள்ள  மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11  மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.இந்த பயிற்சியின் மூலம்  கடந்த  ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று  அதில்  26  மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தகுதி பெற்று உள்ளார்கள்.எனவே, இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  என்ற முகவரியில் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 27, 2025

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் கிராம ஊராட்சியில் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நாலூர் ஊராட்சியில் (26.03.2025) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், நாலூர் ஊராட்சியில், இயங்காமல் இருந்த சந்தை மற்றும் கடைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இந்த பகுதியினுடைய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கள் மூலம் பல்வேறு கடைகளாக தொழிலை செய்யக்கூடிய இடங்களாகவும், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை விற்கக்கூடிய இடங்களாக மாற்றி இந்த சந்தை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் திறந்த வெளியில் சந்தை என்பது இல்லை. இந்த சந்தையினை பொருட்களை வாங்கக்கூடிய, பல்வேறு பொருட்கள் கிடைக்கக்கூடிய ஒரு இடமாக மாற்றினால் நிச்சயமாக லாபம் தரக்கூடிய இடமாக மாறும். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள்; குழுவாக சேர்ந்து, செயல்படுவதன் முக்கியத்துவம் என்னவென்றால் ஒரு செயலை தனியாக செயல்படுத்துவது கடினம். அதுவே ஒரு குழுவாக சேர்ந்த செயல்படும் பொழுதுதான் வலிமை பெறுகிறது.குறிப்பாக குழுவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெண்களுக்கான முழுமையான விடுதலை, சுதந்திரம், வலிமை என்பது அவர்களுக்கான பொருளாதாரம் தான்.பெண்களுக்கான பொருளாதாரா வலிமை எப்போது நிறைவடைகிறது என்றால் கையில் பணம் இருக்கும் பொழுது, நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்கும் போது, நல்ல தொழிலை செய்து வியாபாரத்தில்  இலாபம் சம்பாதிக்கும் பொழுது, அவர்கள் சுய தொழில் மூலம் வருமானம் பெறும் பொழுதுதான் பொருளாதாரம் வலிமையாகும்.அந்த வகையில் பெண்களுக்கான பொருளாதார வலிமையை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பெற்று, பொறுமையுடனும் தொடர்ச்சியான செயல்பாடுகளுடனும் இருந்தால் நிச்சயமாக கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பெண்கள்  மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் எல்லாம் மிகப்பெரிய பொருளாதார வலிமையை அடைய முடியும்.பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களுக்கு அரசால் மானியம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பெண்கள் 10 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை சுய உதவி குழுக்கள் கடன்களை பெற்று சரியான முறையில் சுய தொழில்களை செய்து வருமானம் ஈட்டக்கூடிய தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமுதாயத்தில் உருவாகி வருகின்றனர்.எனவே இது போன்ற அரசினுடைய திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் கடனுதவிகளை பெற்று முறையாக செயல்படுத்தி பெண்கள் தங்களுக்கான பொருளாதார வலிமையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இந்த பகுதியில் சந்தையை பயன்படுத்தி இன்னும் ஒரு ஆண்டுகாலத்திற்குள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக ஆக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவித் திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 27, 2025

மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக பயிற்சி வகுப்புகள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் (இருபாலருக்கும்) நடத்தப்பட உள்ளது.நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆகையால் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொண்டு அடிப்படை நீச்சல் பழகி கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிஃகல்லூரி, மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.மேலும், பயிற்சி வகுப்பு நடைபெறும் நாட்கள் முதல் தொகுப்பு - 01.04.2025 முதல் 13.04.2025, இரண்டாம் தொகுப்பு- 15.04.2025 முதல் 27.04.2025, முன்றாம் தொகுப்பு- 29.04.2025 முதல் 11.05.2025, நான்காம் தொகுப்பு- 13.05.2025 முதல் 25.05.2025 மற்றும் ஐந்தாம் தொகுப்பு- 27.05.2025 முதல் 08.06.2025 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இது தொடர்பான விவரங்களை பெற -97513-93412 என்ற நீச்சல் பயிற்றுநர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 27, 2025

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.03.2025) அன்று வேளாண்மைத்துறை சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கேற்புடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.      திருச்சி மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 14 இடங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு கிராமம், ஒரு பண்ணையம், ஒரு இலட்சம், ஒரு மாதம் என திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தியது போல் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தினை விருதுநகர் மாவட்டத்திலும் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ), விருதுநகர் அவர்களால் 22.03.2025  அன்று திருச்சியில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்  குறித்து அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  இரண்டு வட்டாரங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திற்கான புறம்போக்கு நிலத்தினை தேர்வு செய்திடவும், சாலை வசதி மற்றும் நீர்பாசன வசதி உள்ள இடங்களாக தேர்வு செய்திடவும் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு எண்ணம் ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளின் பங்குத் தொகையுடன் அமைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்களால்  தெரிவிக்கப்பட்டது.  மேலும், 2.5 ஏக்கர் பரப்பளவு பட்டா நிலம் மற்றும் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து விவசாயிகளின் பங்குத் தொகையுடன் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்   திருமதி நாச்சியார் அம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அரவிந்த், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 27, 2025

மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 20 பெண்களுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், நல்லுக்குறிச்சி கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், ஆடு வளர்ப்பு தொகுப்பு 2024-2025 கீழ், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த தீவனம் உற்பத்தி செய்வதற்கான நிலமுள்ள 20 பெண்களுக்கு தலா 10 ஆடுகள் வீதம் என மொத்தம் ரூ.14 இலட்சம் மதிப்பில் 200 ஆடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அமுத சுரபி நிதியின் கீழ், ரூ.36.40 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசினுடைய மகளிர் மேம்பாட்டு திட்;டத்தில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய பெண்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒரு தன்னார்வலர்களாக, ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும். அதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதுவும் குறிப்பாக நமது மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் மகளிர்; சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களும் பல்வேறு தொழில்களை செய்வதற்கு, தங்களுடைய தேவைகளுக்கென்று சுயதொழில், கூட்டமைப்புகள், வங்கிகள் மூலமாக நமது மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாயினை வங்கிக் கடன்களாக பெறுகிறார்கள்.ஆனால், அவர்கள் வாங்கிய கடனை சரியாக முதலீடு செய்து கொண்டிருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்கள் பணத்தை  அடிப்படைத் தேவைகளுக்கு அதாவது சமுதாயத்தில், பொருளாதாரத்தில், எதிர்பாராத குடும்ப செலவுகளுக்கென்று தான் செலவிடுகிறார்கள். ஆனால், இதனுடைய முக்கியமான நோக்கம் என்னவென்றால், பெண்களுக்கான உண்மையான வலிமை என்ன, பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்ன, பெண்களுக்கான உண்மையான விடுதலை என்ன என்று பார்த்தால், பெண்களுக்கான உண்மையான வலிமையும், விடுதலையும் அவர்களுடைய  பொருளாதார வலிமை தான். அதாவது பெண்களின்  கையில் பணம் இருக்க வேண்டும். அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தான்.பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றார்கள் என்றால், குடும்பத்தில், சமுதாயத்தில் அவர்களினுடைய பங்கு என்பது முழுமையாக அங்கீகரிக்கப்படுகிறது. அதனால் தான் பெண்கள்  தொழில் தொடங்குபவர்களாக, தொழில் முனைவோர்களாக வர வேண்டும்.மேலும், இன்றைக்கு சந்தையில் ஆடுகளுக்கான தேவை மிகப்பெரிய அளவில்  இருக்கிறது. நீங்கள் அனைவரும் இன்றைக்கு ஒரு 10 ஆடுகள் வாங்கி, அதில் நீங்கள் ஒரு வருடம் உங்களினுடைய முழுமையான உழைப்பினை செலுத்துகிறீர்கள் என்றால் நிச்சயாக ஒரு ஆண்டில் 10 ஆடுகள் 30 ஆடுகளாக பெருகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், ஒரு ஆண்டுகள் பராமரித்தால் நீங்கள் அனைவரும் ஒரு ஆட்டுப்பண்ணையின் உடைய முதலாளியாக மாறக்கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள் ஒரு இரண்டு ஆண்டுக்காலம் ஆடுகளை சரியாக பராமரித்து உங்களினுடைய உழைப்பை செலுத்தினீர்கள் என்றால் இரண்டு ஆண்டு காலத்தில் உங்களின் உடைய குடும்பம் பொருளாதாரம் முன்னேறக்கூடிய அளவிற்கு வருமானத்தை தொடர்ச்சியாக பெற முடியும்.எனவே, எந்த ஒரு வெள்ளமும் சிறிய துளியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது, எந்த ஒரு பெரிய கடலும் மழையில் இருந்து விழக்கூடிய ஒரு துளியில் இருந்து தான் வருகிறது என்பது போல, இவற்றையெல்லாம் தொடர்ச்சியாக முழுமையாக முயற்சி செய்தால் நிச்சயமாக மிக பெரிய வாய்ப்பை பெற முடியும்.நமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள், உரிமைகள், நமக்காக அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்  இவற்றையெல்லாம்  தெரிந்துக்கொண்டு, அவற்றின் உடைய பயன்களை பெறக்கூடியவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.எனவே, இது போன்ற விழிப்புணர்வுகளை பெற்று, கல்வி வாய்ப்புகளை பெற்று, பொருளாதார வாய்ப்புகளை பெற்று, வாழ்க்கையில் எவ்வளவு உரிமைகள் இருந்தாலும் பொருளாதார வலிமை தான் மிகவும் முக்கியம் எனவும், பெண்கள் அனைவரும் தொழில்களில் வெற்றி பெற்று பெரிய தொழில் முனைவோர்களாக முன்னேற வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)திரு.ஜே.ஜார்ஜ் மைக்கேல், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 27, 2025

மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள விருமதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  (26.03.2025) திறந்து வைத்தார்.பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், 12 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13 இலட்சம் சமூக முதலீட்டு நிதிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 27, 2025

குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  (26.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடி, மாணவர்களின் கல்வித்தரம், வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், பள்ளிகளுக்கு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 28 29

AD's



More News