பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026-2027) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 466/-, சோளம் பயிருக்கு ரூ. 192/-, பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.370/-, பருத்தி பயிருக்கு ரூ.409/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.431/- மற்றும் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு ரூ.1591/- மற்றும் வாழை பயிருக்கு ரூ.3997/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, 2026-27 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய நிலக்கடலை பயிருக்கு (31.08.2026), உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு (16.09.2026) மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு (30.09.2026) வரையிலும், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு (31.08.2026) மற்றும் வாழை பயிர்களுக்கு (15.09.2026) காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.ஆகையால், விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.இதன் மூலம், விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (16.07.2026) அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கள ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று 15.07.2026 காலை 09.00 மணி முதல் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன் படி இரண்டாம் நாளான (16.07.2026) அதிகாலை காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்தும், மல்லாங்கிணறு பேரூராட்சி திம்மன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், தூய்மை பணியாளர்கள் மூலம் பொது மக்களிடம் இருந்து திடக்கழிவுகள் தரம் பிரித்து பெறப்பட்டு வரும் பணிகளையும், மல்லாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அம்ருத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும், மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள், கோப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில்அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, காரியாபட்டி வட்டாட்சியர் திரு.திருப்பதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடுநாள் விழாவினையொட்டி தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 ஆம் நாளன்று விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றன. அரசு, தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 73 மாணவர்கள் பேச்சுப் போட்டியிலும், 69 மாணவர்கள் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பேச்சுப்போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சவிதா முதல் பரிசாக ரூ 10000/-மும், ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கூ.பிரதீபா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், திருத்தங்கல் எஸ்.என்.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி வ.லோகபிரியா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.அதேபோல், கட்டுரைப்போட்டியில், மம்சாபுரம், பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ.வைதேகிலட்சுமி முதல் பரிசாக ரூ.10000/- மும், தோனூகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி இரா.சங்கீதா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி மா.யோக சந்திரிகா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜீலை -2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.07.2026 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் நீதிக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (15.07.2026) திறந்து வைத்தார். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டமானது சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் சமூகத்தில் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டு மறுவாழ்வு பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் (EDII-TN) சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான முதலீட்டிற்கு வங்கியின் மூலம் ரூ.1,00,654/- கடனுதவியும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம், சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் தங்களது வாழ்க்கையை சீரமைத்து, சுயதொழில் வாயிலாக பொருளாதார ரீதியாக முன்னேறி, சமூகத்தில் மதிப்புமிக்க குடிமக்களாக மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், இதுபோன்ற மறுவாழ்வு நடவடிக்கைகள் மூலம் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகளை சமூகத்துடன் இணைத்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், ஊராட்சிகள் உதவி இயக்குநர்(பயிற்சி) திருமதி கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (15.07.2026) கள ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 15.07.2026 காலை 09.00 மணி முதல் மறுநாள் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது.முதல் நாளான இன்று காரியாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, செழுமை கருவூலம் திட்டத்தின் கீழ் காரியாபட்டி பெரிய கண்மாயில் சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றப்பட்டு வருவதையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, துணை மின் நிலையம், கால்நடை மருத்துவமனை, காரியாபட்டி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில் காரியாபட்டி வட்டாட்சியர் திரு.திருப்பதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர் திட்டத்தின் கீழ் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும்(Mass eradication of Prosopis juliflora) பணிகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் (15.07.2026) தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.சீமைக் கருவேலம் (Prosopis juliflora) என்பது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனமாகும். இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக பூர்வீக தாவர இனங்கள் அழிவடைவதுடன், உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தின் இயற்கை வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவதோடு, மேய்ச்சல் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதுடன், நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos. 16485 & 14699 of 2015 மற்றும் W.P. No. 3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற சிறப்பு முன்முயற்சியின் கீழ், அரசு நிலங்கள் மற்றும் வளாகங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, பூர்வீக மர இனங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணிகளை பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இது அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள், நில உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பணிகள் (15.07.2026) மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.மாவட்ட பெருந்திட்ட வளாகம், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறை அலுவலக வளாகங்கள், மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்வு செய்யப்பட்ட இடங்கள், 5 நகராட்சிகள் மற்றும் 1 மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகள், மாவட்டத்தின் 9 பேரூராட்சிகளிலும் தேர்வு செய்யப்பட்ட இடங்கள், நெடுஞ்சாலைத் துறையின் ஒவ்வொரு கோட்டத்திலும் தலா ஒரு இடம், பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) ஒவ்வொரு கோட்டத்திலும் தலா ஒரு நீர்நிலை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இம்முயற்சியில் பொதுமக்களும் தன்னார்வத்துடன் அனைவரும் பங்கேற்று பெருமளவு சீமைக் கருவேல மரங்களை அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பாக செயல்படுத்தப்படும் தனிநபர்கள், விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டப்பட்டு, மாவட்ட அளவில் முன்மாதிரிகளாக எடுத்துக்காட்டப்படும்."செழுமை கருவூலம் - சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற உயரிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ., அவர்கள் தெரிவித்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வச்சக்காரப்பட்டியில் பெருந்திரள் தூய்மைப் பணிகளை(Mass Cleaning) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளார்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.மேலும், திடக்கழிவு மேலாண்மையில் மக்கும் திடக்கழிவுகளை பச்சை நிறத்தொட்டியிலும், மக்காத திடக்கழிவுகளை நீல நிறத்தொட்டியிலும், சுகாதார திடக்கழிவுகளை சிவப்பு நிறத்தொட்டியிலும், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய திடக்கழிவுகளை கருப்பு நிறத்தொட்டியிலும் என நான்கு வகையாக தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்நிகழ்வில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026-2027) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 466/-, சோளம் பயிருக்கு ரூ. 192/-, பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.370/-, பருத்தி பயிருக்கு ரூ.409/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.431/- மற்றும் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு ரூ.1591/- மற்றும் வாழை பயிருக்கு ரூ.3997/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, 2026-27 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய நிலக்கடலை பயிருக்கு (31.08.2026), உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு (16.09.2026) மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு (30.09.2026) வரையிலும், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு (31.08.2026) மற்றும் வாழை பயிர்களுக்கு (15.09.2026) காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.ஆகையால், விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.இதன் மூலம், விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(14.07.2026) தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 3 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.
வருவாய்த்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நில உடைமை பதிவு ஆவணமான கிராமக்கணக்குகளுக்கும், தமிழ்நிலம் இணையதளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை களைந்து பட்டா வழங்கக் கோரி பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெறுவதால், சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு வருவாய்க் கோட்டாட்சியர்கள் / வட்டாட்சியர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், (13.07.2026) சாத்தூர் வருவாய்க் கோட்ட அளவிலான சிறப்பு முகாம், சாத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில், விருதுநகர் வட்டத்தில் 28 நபர்களுக்கும், சாத்தூர் வட்டத்தில் 11 நபர்களுக்கும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 8 நபர்களுக்கும், மொத்தம் 44 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உத்தரவு ஆணை மாவட்ட ஆட்சியர் அவர்களால், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.மேலும், 22 நபர்களுக்கு பிறப்பு /இறப்பு தாமத பதிவு ஆணைகள் வழங்கப்பட்டது.மேலும், இது போன்று ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள்/விடுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை புதிய வடிவிலான படிவத்தில் தயார் செய்து உத்தரவுகள் பிறப்பிக்குமாறும், முன்பாக உரிய கள விசாரணை செய்து அறிக்கை செய்யப்பட வேண்டுமென சார்நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.தமிழ்நிலம் இணையவழி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் விரைந்து தீர்வு காண முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் தெரிவித்தார்.