25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 17, 2024

வெம்பக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு செய்தார். ---

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 16.10.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 17.10.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், வெம்பக்கோட்டை அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்து, அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.மேலும், வெம்பக்கோட்டை புள்ளியல் துறை அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், வெம்பக்கோட்டை அணையின் கரைப்பகுதியில் பனை விதைகள் நடும்  பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு ஊராட்சியில் 21 வீடுகள் ரூ.1.28 கோடி மதிப்பில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு வருவதையும், ஆலங்குளம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், ஆலங்குளம் ஏ.ரெ.இரா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி தரம், கற்பிக்கும் முறைகள், வருகைப்பதிவேடு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைக் குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, ஆலங்குளத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பயன்பெறும் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 17, 2024

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் 2025-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை பதிவுபெற்ற தொழிற்சாலைகள் இணையதளம் வாயிலாக புதுப்பிக்கலாம்

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் உரிமம் புதுப்பித்தல் மற்றும் இதர நடைமுறைகள் ONLINE மயமாக்கப்பட்டு உள்ளதால் விருதுநகர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆட்சி எல்கைக்குட்பட்ட பதிவுபெற்ற தொழிற்சாலைகள்  2025-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை ONLINE   மூலம் www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக உரிமம் புதுப்பிக்க 31.10.2024 அன்று கடைசி நாள் ஆகும். உரிமக் கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தவேண்டும். 01.11.2024-க்கு பின் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் தொழிற்சாலைகள் தாமதக் கட்டணம் செலுத்தவேண்டும்.பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்களது தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு இணையவழி முறையிலேயே வழங்கப்படும். உரிமம் புதுப்பிக்கப்பட்டவுடன் படிவம் -2 (3 நகல்கள் அதில் 1-ல் ரூ.5-க்கான நீதிமன்ற கட்டணவில்லை), உரிம நகல் (படிவம்-4) மற்றும் இதர ஆவணங்களை கையொப்பமிட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.எனவே உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி தொழிற்சாலை உரிமத்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் விருதுநகர் அலுவலக தொலைபேசி எண். 04562 269115-ல் தொடர்பு கொள்ளலாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Oct 16, 2024

‘Coffee With Collector” என்ற 108-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (14.10.2024) இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 35 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 108-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 108-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Oct 16, 2024

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு ஒரு நாள் கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (15.10.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியம் சார்பில், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான சுயதொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பணத்தை பாதுகாப்பதற்கும் , சேமிப்புக்கும் வேறுபாடு உள்ளது. பணத்தை நாம் வீட்டில் வைப்பது என்பது பணத்தை பாதுகாப்பதாகும். இதைத் தாண்டி, அதை எப்போது சேமிப்பாக மாறுகிறது என்றால், ஏதாவது ஒன்றில் சேமித்து, அது பணவீக்கத்தை விட அதிகமான பலனை கொடுக்கிறது என்றால், அப்போதுதான் அது  சரியான சேமிப்பு. அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தபால் நிலையம், வங்கி உள்ளிட்டவைகளில் சேமிப்பது என்பது ஒரு பாதுகாப்பான ஒன்று. அரசினுடைய பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் நிறைய  இருக்கின்றன.இந்திய அளவில் முதலீட்டில் நல்ல வருமானம்; தரக்கூடிய வட்டி என்பது 12 முதல் 15 சதவீதம் கிடைத்தாலே மிகச் சிறப்பானது என கருதலாம். நடுத்தர வயதில் உள்ள்வர்கள் நீண்ட கால திட்டங்களில்; முதலீடு செய்யும் போது மிகப்பெரிய அளவிலான கூட்டு வட்டி முறையில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், அதற்கு நம்மிடம் பொறுமை என்ற பண்பு இருக்க வேண்டும்.பெண்களுக்கு நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கின்றது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக கடனுதவிகள் தரப்படுகின்றன. அதன் மூலம் சிறு தொழில் செய்ய முடியும். அதற்கு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.  உணவுப்பொருட்கள் சார்ந்த தொழில்களுக்கு நிறைய சந்தை வாய்ப்புகள் உள்ளன. பெண்களின் உண்மையான விடுதலை என்பது அவர்களுக்கான பொருளாதார சுதந்திரம் தான்.எனவே, பெண்கள் இந்த கருத்தரங்கினை நல்லமுறையில் பயன்படுத்தி, அரசின் திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, தங்களை பொருளாதார ரீதியில் உயர்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 16, 2024

அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கல்வி பயன்பட்டிற்காக ஒலிப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (15,10,2024) சமூக பொறுப்பு நிதியின் கீழ் அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கல்வி பயன்பட்டிற்காக தலா ரூ.82,500/- வீதம் மொத்தம் ரூ. 1.65 இலட்சம் மதிப்பிலான 2 ஒலிப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,, அவர்கள் வழங்கினார்.

Oct 16, 2024

‘Coffee With Collector” என்ற 109-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (15.10.2024) சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவிகளுடனான "Coffee With Collector” என்ற 109-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 109-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Oct 16, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பவர்கள் சட்டத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு தரமான உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

 விருதுநகர் மாவட்டத்தில், மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்     மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றது. தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக  விளங்கும், இனிப்பு மற்றும் காரவகை உணவுப் பொருட்களின் தரம் மற்றும்  பாதுகாப்பினை உணவு தயாரிப்பாளர்கள் உறுதி செய்திட வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள்  எடுக்கப்படும்  என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில்  இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள்  பலகார சீட்டு நடத்துபவர்கள்  உள்ளிட்ட அனைத்து  உணவு தயாரிப்பாளர்கள் மற்றும்  விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில்  பதிவு  செய்து பதிவுச்  சான்றிதழ் மற்றும் உரிமம் பெற்ற பின்னரே  உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.இனிப்பு, காரவகை மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத  மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான  முறையில்  தயாரித்து, பாதுகாப்பான உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை சேர்க்கக் கூடாது. தரமான  நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே  பயன்படுத்த வேண்டும்.  ஒருமுறை பயன்படுத்திய  எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச் சீட்டிடும்போது அதில் உணவுப்பொருட்களின்  பெயர்,  எடை, தயாரிப்பு  அல்லது பொட்டலமிடப்பட்ட தேதி, பயன்படுத்துவதற்கு உகந்த காலம் ( காலாவதி தேதி), சைவம் அல்லது அசைவம் பற்றிய குறியீடு, தயாரிப்பாளரின் முழு முகவரி, தொடர்பு எண்,  உள்ளிட்ட தகவல்கள் அவசியம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்த தேதி மற்றும்  உபயோகிக்கும்  காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்தப்பட வேண்டும்.தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித்தொற்று ஏற்படாத வகையில்  சுத்தமான  சுகாதாரமான சூழலில்  வைத்து பொதுமக்களுக்கு  விற்பனை  செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் பலகாரங்களை வாங்கும்போது, தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்   உணவு பாதுகாப்புத் துறையில்  உரிமம் அல்லது பதிவு பெற்று, அந்த எண்கள் பொட்டலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக  http://foscos.fssai.gov.in  என்ற  இணையதளத்தில் இந்திய  உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது  வணிகத்தினை உரிமம் அல்லது பதிவு செய்து கொள்ள வேண்டும்.திருமண மண்டபம் மற்றும் தனியார் கட்டிட உரிமையாளர்கள் பண்டிகை கால பலகார தயாரிப்பிற்கு கட்டிடத்தை வாடகைக்கு விடும்போது தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை பெற்றிருப்பதை உறுதி செய்த பின்னரே வாடகைக்கு இடத்தை வழங்க வேண்டும். பண்டிகை கால இனிப்பு  மற்றும் கார தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறித்தோ அல்லது  உணவுப் பொருள் கலப்படம் குறித்தோ புகார்கள் ஏதேனும்  இருப்பின் 94440-42322 என்ற மாநில  உணவு பாதுகாப்பு  துறையின்  வாட்ஸ் அப் எண்ணிற்கோ  அல்லது 04562-252255 என்ற  மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின்  அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

Oct 16, 2024

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக  18.10.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் MRF LIMITED, ADYAR ANANDHA BHAVAN,  DEVENDRAN PLASTICS, MAFOI, TTK HEALTH CARE, EC TECH    போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு  I.T.I.  டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 18.10.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது  என   மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 15, 2024

கோல்வார்ப்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் கோல்வார்ப்பட்டி அணைக்கட்டு பகுதிகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (13.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து,  மதகுகளில்  மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான நீர்ப்பிடிப்புகளில் நீர்வரத்து உள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீரை வெளியேற்றி, மீதமுள்ள தன்ணீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட  அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், விருதுநகர் வட்டம் குப்பம்பட்டி கிராமத்தில் கௌசிகா ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி மதிப்பில் நிலத்தடி நீர் செரிவூட்டலுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, மேற்கொள்ளப்படும் பணியின் முன்னேற்றம், தரம் குறித்து ஆய்வு செய்து, தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை வைப்பார் கோட்ட செயற்பொறியாளர் திருமதி மலர்விழி, உதவி செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், நீர்வளத்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 15, 2024

புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறைக்கு, பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அர்ப்பணிப்பைக் கொண்ட புதிய துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா, I A S, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு 21.10.2021 அன்று புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறைக்கு, பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அர்ப்பணிப்பைக் கொண்ட புதிய துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா,I A S, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன், ஜவுளித் துறை மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஜவுளித் துறையின் நலனை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.தற்போதுள்ள நலத்திட்டங்களை வலுப்படுத்துவதும், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருதரப்பினரும் பயன் பெறும் வகையில் புத்தாக்க  முயற்சிகளுக்கு வித்திடுவதும் துணிநூல் துறையின் நோக்கமாகும்.புதிய ஜவுளித்துறை இயக்குநரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், ஜவுளித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்குமிடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகிய முன்னெடுப்புகளின் மூலம் ஜவுளித் துறையில் புதுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள துணிநூல் துறை ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு தொடரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிது.வேகமாக வளர்ந்து வரும் ஜவுளித் தொழிலின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக திறன் மிக்க பணியாளர்களை உருவாக்கவும், தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்சங்கங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கவும், ஜவுளி துறையினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களிடையே தொழில்நுட்ப ஜவுளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.ஜவுளிப் பொருட்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்தும் பொருட்டு பன்னாட்டு வணிக கூட்டாண்மைகளை ஆராய்தல், வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல் மற்றும் மண்டல வாரியாக ஜவுளி நுட்பங்களை வெளிப்படுத்த டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு  நடவடிக்கைகளை துணிநூல் துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.துணிநூல் துறை மாநிலத்தில் முக்கிய ஜவுளி குழுமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு மண்டல  அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.ஜவுளித் துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, மண்டல துணிநூல் துணை இயக்குநர், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை 625 014, தொலைபேசி எண்: 0452- 2530020, மின்னஞ்சல்:- ddtextilesmdu@gmail.com   தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மதுரை மண்டல துணிநூல் துணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 68 69

AD's



More News