முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய மலிவு விலை மொபைல் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது மற்றும்5G சேவைகளுடன் இணக்கமானது.இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் புதிய திட்டங்களை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது. பிரீமியம் திட்டங்களைத் தவிர, முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவு, குறைந்த இணைய தரவு அல்லது மலிவு விலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் வழக்கமான பயன்பாட்டிற்கான மலிவு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.ஜியோ அதன் சமீபத்திய பதிப்பில், ரூ.198 மதிப்புள்ள மலிவு விலை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் அதிக இணையத் தரவு முதல் அழைப்பு அம்சங்கள் வரை பல நன்மைகளுடன் வருகிறது.ஜியோ ரூ.198 திட்டம்2 ஜிபி இணைய டேட்டா உடன் வரம்பற்ற அழைப்பு மற்றும் ரோமிங் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் போன்ற பிற முக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஜியோ திட்டம்100 தினசரி எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.இந்த மலிவு விலை ஜியோ திட்டம்14 நாட்கள் செல்லுபடியாகும். ஜியோ வாடிக்கையாளர்கள் மைஜியோ செயலி மற்றும் அதிகாரப்பூர்வ ஜியோ வலைத்தளம் மூலம் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்துடன் தங்கள் தரவை ரீசார்ஜ் செய்யலாம். ரூ.198 திட்டத்துடன், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சேவைகளைப் பெறலாம். இந்த ரீசார்ஜ் திட்டம் 5ஜி சேவைகளுடன் இணக்கமானது.28 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோ ரீசார்ஜ் திட்டம்2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது, இது ரூ.349 டேட்டா மற்றும் அழைப்புத் திட்டமாகும். வரம்பற்ற அழைப்பு போன்ற பல அம்சங்களும் இந்த திட்டத்தில் உள்ளன.
1.திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் (ஆந்திரா பிரதேசம்)-₹3 லட்சம் கோடி 2.ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவில் (கேரளா) -₹1.2 லட்சம் கோடி 3. குருவாயூர் கோவில் (கேரளா) -₹2,500 கோடி 4. ஷிரடி சாய் பாபா கோவில் (மகாராஷ்டிரா) - ₹1,800 கோடி 5. சபரிமலை கோவில் (கேரளா) - ₹245 கோடி 6.ஜகந் நாதர் கோவில் ( ஒடிசா )- 150 கோடி 7. சித்திவிநாயகர் கோவில் (மகாராஷ்டிரா)-₹125+ கோடி 8. காசி விஸ்வநாதர் கோவில்( உத்தரப்பிரதேசம் ) 6 கோடி
புதிய குயில் இனத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலை ஆய்வாளர்கள் போர்னியோ தீவில் கண்டறிந்துள்ளனர்.அறிவியல் பெயர்” ஹையரோகா கைஸ் திகானடா”.
ஓக்லியின் மெட்டாHSTN ஸ்மார்ட் கண்ணாடிகள்AI அம்சங்களுக்கான நிலையான அணுகலை உங்களுக்கு வழங்குகின்றனகிளாசிக் ரேபான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை விட விளையாட்டுத்தனமான, எதிர்கால தோற்றத்திற்காக ஓக்லியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய ஓக்லி மெட்டா HSTN உடன் மெட்டா தனது ஸ்மார்ட் கண்ணாடிகளை விரிவுபடுத்துகிறது. HSTN ஒருங்கிணைந்த கேமராக்கள், திறந்தகாது ஸ்பீக்கர்கள், மைக்ரோஃபோன்கள் மற்றும் நிகழ்நேர மொழிபெயர்ப்பு, காட்சி அங்கீகாரம் மற்றும் குரல் வினவல்களுக்கான மெட்டா AIக்கான ஹேண்ட்ஸ்ஃப்ரீ அணுகலைக் கொண்டுள்ளது. முக்கிய மேம்படுத்தல்களில் எட்டு மணிநேரம் வரை பேட்டரி ஆயுள் மற்றும் உயர்தெளிவுத்திறன் கொண்ட3K கேமரா ஆகியவை அடங்கும். மருந்து வகைகள் உட்பட ஆறு பிரேம் மற்றும் லென்ஸ் விருப்பங்களுடன்,HSTN ஸ்மார்ட் கண்ணாடிகளை செயல்திறன் கருவியாகவும் அன்றாட தொழில்நுட்பமாகவும் நிலைநிறுத்துகிறது.
ராக் பெல்லர் பல்கலை விஞ்ஞானிகள் எறும்புகளுக்கு எப்படி துல்லிய மான வாசனை உணர்வு வந்தது என்பதை கண்டறிந்துள்ளனர்.ஒவ்வொரு வாசனை நரம்பணுவும், நூற்றுக்கணக்கான வாசனை அறியும் மரபணுக்களில்ஒன்றை மட்டுமே வெளிப்படுத்துமாறு சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்கிறது.அருகிலுள்ள மற்ற மரபணுக்களைச் செயலிழக்கவும் செய்துவிடுகிறது. எனவேதான், எறும்புகளால் குழப்பமடையாமல் பலவித வாசனைகளை பிரித்து உணர முடிகிறது.
சிறுவர் - சிறுமியர் விளையாடவும், முதியோர் இளைப்பாறவும் உகந்தது ஊஞ்சல். மன அழுத்தம் தணிக்க உதவுகிறது. பழங்காலத்திலே ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டதாக தமிழக வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. இதை துாளி, துாரி என்றும் அழைப்பர். தமிழக கோவில்களில் ஊஞ்சல் சேவை என்ற வைபவம், இப்போதும் சிறப்புற நடத்தப்படுகிறது.ஆலமர விழுது ஊஞ்சல், பொன் ஊஞ்சல், கயிறு ஊஞ்சல் என பலவகைகள் உள்ளன.ஆலமர விழுது உறுதி மிக்கது. இதன் விழுதுகள், ஊஞ்சலாக மாற்றி ஆடுவதற்கு உகந்தது . மா, வேம்பு, புளிய மரங்களிலும் ஊஞ்சல் அமைத்து ஆடுவது, கிராமங்களில் வழக்கமாக உள்ளது.பழங்காலத்தில் தங்க முலாம் பூசிய பொன்னுாஞ்சலில் மன்னர் குடும்பத்தினர் ஆடும் வழக்கம் இருந்ததாக செய்திகள் உள்ளன. மரப்பலகையில் இரும்பு சங்கிலி இணைத்து ஊஞ்சலாக்கி ஆடும் வழக்கம், இப்போதும் உள்ளது.ஊஞ்சல் ஆட்டத்தில்...முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் சீராக பாயும்.மூளை புத்துணர்வு அடையும்.கவலை மறந்து, மனம் லேசாகும்.கோபம் தணிந்து, இயல்பு நிலைஏற்படும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.மனச்சோர்வு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.திருமண நிகழ்வில் ஊஞ்சல் ஆடும் சடங்கு முறை, தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ளது. மரங்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி ஆடும் போது, அதிக அளவில் ஆக்சிஜனை சுவாசிக்க முடியும். இதனால், இதய இயக்கம் சீராகும். உணவுக்கு பின் சிறிது நேரம் ஊஞ்சல் ஆடினால், உணவு நன்றாக செரிக்கும். மகிழ்ச்சியை வாரி தரும் ஊஞ்சலில் இளைப்பாறி, இன்னல்களைமறப்போம்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார்.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில் நிலைதடுமாறி அந்தப் பெண்ணும் குழந்தைகளும் சாலையில் விழுந்தனர்.இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த வாகனங்கள் சமயோசிதமாக பிரேக் போட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையில் விழுந்த மூவருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து அவர்களுக்கு உதவி செய்தனர்.இத்தகைய பள்ளி நேரங்களில் ஏற்படும் சம்பவங்கள் நடப்பது குழந்தைகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஆபத்தாக முடியலாம் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Email கண்டுபிடித்த போது அவருக்கு வயது 14 கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு : 1978Email ஐ கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்அதிலும் அவர் தமிழர் சிவா ஐயாதுரை ஆவார்.
அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் ஆடை அணிவதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது.1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சையின் போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை (சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர்.
பல அதிசயங்களை இந்த உலகம் கொண்டுள்ளது. கடல், மலை, பாலைவனம் போன்ற இயற்கைஉருவாக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. வியட்நாமில் உள்ள குவாங் பின் மாகாணத்தில் 'ஹாங் சன் டூங்'குகை அவற்றில் ஒன்று1990-ம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர் விவசாயியால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த குகை 9 கிலோமீட்டர் நீளமும், 200 மீட் டர் உயரமும்,150 மீட்டர் அகலமும் கொண்டது. இதனை அன்டர் ஜங்கிள் என்று அழைக்கிறார்கள் .குகையின் உள்ளே நதிகள், சிறிய காடுகள் மற்றும் பாறை அடுக்குகள் குகையின் அதிசயம் சில இடங்களில் வெளிப்புற ஒளி குகைக்குள் நுழையும். அதனால் உள்ளே தாவரங்கள் வளர் கின்றன