25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Sep 02, 2026

யூத் தடகளத்தில் தேசிய சாதனை – தமிழக வீரர் நீல் சாம்ராஜ் அசத்தல்!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கின. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த மூன்று நாள் தொடரில், தமிழகம் சார்பில் 21 வீரர்கள் மற்றும் 16 வீராங்கனைகள் என மொத்தம் 37 பேர் பங்கேற்கின்றனர்.நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் நீல் சாம்ராஜ், 10.46 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் யூத் தடகளப் பிரிவில் புதிய தேசிய சாதனையையும் படைத்தார்.இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு அன்ஷு ராஜ் 10.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது.பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் மிர்த்திகா, 11.78 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றார். இது இந்தத் தொடரின் புதிய சாதனையாக அமைந்தது.பெண்களுக்கான 400 மீட்டர் அரையிறுதி முதல் பிரிவில் தமிழக வீராங்கனை சகாய ஜெமிமா, 55.94 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து மூன்றாவது இடம் பிடித்தார்.

Sep 02, 2026

யு.எஸ். ஓபன்: அல்காரஸ், லிண்டா உள்ளிட்டோர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 3ஆம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ரோமன் ஷபியுலினை எதிர்கொண்டார்.முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய அல்காரஸ், அடுத்த இரு செட்களையும் தலா 6-4 என வென்றார். 2 மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில், அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 6ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் கேட்டீயை எதிர்கொண்டார்.முதல் செட்டை 7-5 என கைப்பற்றிய லிண்டா, இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக வென்றார். 1 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில், 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Sep 02, 2026

விளையாட்டு போட்டிகள் – முக்கிய அப்டேட்கள்

 இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.முதல் டெஸ்ட் வெலிங்டனில் நவம்பர் 19 முதல் 23ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய ‘ஏ’ அணி, அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா நான்கு நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்குகிறது. மாஸ்டர்ஸ் பாட்மின்டன்இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தருண், தனது சக வீரர் மஞ்சுநாத்தை 21-15, 21-14 என்ற நேர் கேம் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன் தொடர் நேற்று தொடங்கியது.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 25வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா, தென் கொரியாவின் கிம் கா யுனிடம் 10-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Sep 01, 2026

சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.2005-ல் அர்ஜென்டினா அணியில் அறிமுகமான மெஸ்ஸி, 2006 உலகக் கோப்பை தொடரில் செர்பியா மற்றும் மான்டேநெக்ரோ அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். இதையடுத்து 2010, 2014, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் பங்கேற்றார்.2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 1978, 1986-க்கு பிறகு அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியில் மெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.தனது ஓய்வு குறித்து மெஸ்ஸி கூறுகையில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து தீவிரமாக யோசித்தேன். தற்போது அர்ஜென்டினா அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இது மிகவும் வேதனையான முடிவு. ஆனால் ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டதை புரிந்து கொண்டேன்” என்றார்.மேலும், “கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் வழங்கிய அன்பிற்கு நன்றி. மைதானத்தில் இருந்தபோது உங்கள் குரலைக் கேட்கும் வாய்ப்பு இனி கிடைக்காது. இனிமேல், உங்களில் ஒருவராக இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளிப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Sep 01, 2026

ஆசிய விளையாட்டு: இந்திய வாள் சண்டை அணியில் பவானி தேவி.

ஜப்பானின் அச்சி-நகோயா நகரில் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வாள் சண்டை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி இடம் பெற்றுள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன. இதில் 43 விளையாட்டுகளில் 71 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தியா சார்பில் 35 விளையாட்டுகளில் 265 வீரர்கள் மற்றும் 227 வீராங்கனைகள் என மொத்தம் 492 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களில், 20 பேர் கொண்ட இந்திய வாள் சண்டை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள் சண்டை வீராங்கனையான பவானி தேவி இடம் பெற்றிருப்பது தமிழக விளையாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

Sep 01, 2026

கால்பந்து: சிரியாவை வீழ்த்தியது இந்தியா.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 2027-ம் ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.‘பி’ பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிரியா அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி, செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Sep 01, 2026

பாரா டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 16 பதக்கங்கள்.

பின்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக ‘பாரா பியூச்சர்’ டேபிள் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்தத் தொடரில் இந்தியா 6 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றது.இந்திய வீரர்களின் சிறப்பான செயல்பாடு, சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.

Sep 01, 2026

சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடக்கம்.

சண்டிகரில் இந்திய விமானப்படை சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன.இந்தப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.சர்வதேச வீரர்களின் பங்கேற்பால் இந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Aug 31, 2026

ஆசிய கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!

துபாயில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.நேற்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஐசிசி தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 12-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்தை எதிர்கொண்டது.‘டாஸ்’ வென்ற தாய்லாந்து அணியின் கேப்டன் திப்பச்சா புத்தவாங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய தாய்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.1 ஓவர்களில் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் இந்திய மகளிர் அணி அபார வெற்றியுடன் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.

Aug 31, 2026

உலகக் கோப்பை ஹாக்கி: மீண்டும் சாம்பியனான ஜெர்மனி!

ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்ற 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் நடைபெற்றது.இதில் ஸ்பெயின் அணியும், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியும் மோதின.முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் மிச்செல் ஸ்ட்ரூதோப் ஒரு பீல்டு கோல் அடித்து ஜெர்மனிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.எஞ்சிய நேரத்தில் ஸ்பெயின் அணி கோல் அடிக்க கடுமையாக போராடியபோதும், ஜெர்மனியின் தடுப்பாட்டத்தைத் தாண்ட முடியவில்லை.ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, நடப்பு உலக சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது.இதன் மூலம் ஜெர்மனி அணி உலகக் கோப்பை ஹாக்கி வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 172 173

AD's



More News