அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) சாம்பியன் பட்டம் வென்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பெங்களூரு அணி, குஜராத்தை 20 ஓவர்களில் 155/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு, 18 ஓவர்களில் 161/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ₹20 கோடியும், இரண்டாமிடம் பிடித்த குஜராத் அணிக்கு ₹12.5 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றியை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இந்தோனேசியாவின் ஃபஜர் அல்பியான் - முகமது ஷோஹிபுல் ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினர். 1 மணி 13 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் மூலம், சிங்கப்பூர் ஓபனில் இரட்டையர் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றை அவர்கள் படைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ₹70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பஞ்சாப்பின் நியூ சண்டிகாரில் நேற்றிரவு நடந்த விறுவிறுப்பான 2-வது தகுதிச் சுற்று (Qualifier 2) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.டாஸ்: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.ராஜஸ்தான் ஸ்கோர்: அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.குஜராத் பதிலடி: கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.நாளை இறுதிப்போட்டி!இந்த மாஸ் வெற்றியின் மூலம் குஜராத் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.மெகா பைனல்: நாளை (31.05.2026) அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்குஜராத் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியை எதிர்கொள்கிறது.2026 IPL கோப்பையைக் கைப்பற்றப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்?
சென்னை: இலங்கையில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் தமிழ்அமுதன் மற்றும் இந்திய செஸ் மாஸ்டர்களுக்கு தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.🥇 8 வயதில் உலக சாதனை:இலங்கையில் நடந்த இப்போட்டியில், 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற தமிழகத்தின் 8 வயது இளம் வீரர் தமிழ்அமுதன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி ஆளுநர் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.🌟 சாம்பியன் இனியனுக்கு பாராட்டு:அதேபோல், இத்தொடரின் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வத்திற்கும் ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.🎖️ பதக்கங்களை அள்ளிய தமிழக மாஸ்டர்கள்:பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மாஸ்டர்களான:ஸ்ரீஹரிமித்ரபாரோஹித் கிருஷ்ணாமேஹா ஆரின்நந்திஷ்மரியம் பாத்திமாகிரித்தன் பொக்கரப்புஆகியோருக்கும் ஆளுநர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் பகிர்ந்து கொண்டார்."வெற்றி பெற்ற அனைவரும் எதிர்காலத்தில் இன்னும் பல சர்வதேசப் போட்டிகளில் முத்திரை பதித்து, உலக சாதனையாளர்களாக உருவெடுக்க வேண்டும்!" என ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற கால்இறுதிச் சுற்று முடிவுகள்.🏆 சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி:ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி, 19-21, 21-17, 21-13 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக இவர்கள் தென்கொரிய ஜோடியுடன் மோதவுள்ளனர்.❌ பி.வி.சிந்து ஏமாற்றம்:பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலகின் 'நம்பர் ஒன்' வீராங்கனையான தென்கொரியாவின் அன்சே யங்கிடம் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். (அன்சே யங்கிற்கு எதிராக சிந்து சந்திக்கும் 9-வது தோல்வி இதுவாகும்).❌ லக்ஷயா சென் வீழ்ச்சி:ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் கடுமையான போராட்டத்திற்குப் பின், 19-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோகி வதனாபேயிடம் தோல்வி கண்டு தொடரிலிருந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.🌟 3-வது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான 3-வது போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மாஸ் காட்டியது.கோல் அடித்த வீராங்கனைகள்: இந்திய அணி தரப்பில் ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் சோனம் ஒரு கோலும், 49-வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.📊 தொடரின் தற்போதைய நிலை (2-1):இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.1-வது ஆட்டம்: ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி.2-வது ஆட்டம்: இந்தியா பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வெற்றி.3-வது ஆட்டம்: இந்தியா 2-0 என்ற கணக்கில் அதிரடி வெற்றி.தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கோப்பையை இந்தியப் பெண்கள் தட்டிச் செல்வார்களா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்!
நடப்பு நிலை: இங்கிலாந்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஸ்கோர் விபரம்: முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 188/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியால் 150/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.அடுத்த போட்டி: தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரிஸ்டலில் நடக்கிறது.
புதிய சாதனை: ஹாங்காங்கில் நடக்கும் ஆசிய ஜூனியர் தடகள போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.93 மீட்டர் உயரம் தாண்டி, சீனியர் அளவில் புதிய தேசிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.முறியடிப்பு: இதன் மூலம் 2012-ல் சஹானா குமாரி (1.92 மீட்டர்) படைத்த 14 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார். அத்துடன் இந்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.கூடுதல் தங்கம்: இத்தொடரின் ஆடவர் 5,000 மீட்டர் நடைப்பந்தயத்தில் நிதின் குப்தாவும், மகளிர் வட்டு எறிதலில் அமனாத் கம்போஜும் இந்தியாவிற்குத் தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர்.
நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்ல்செனை 46-வது நகர்த்தலில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். (கார்ல்செனை இவர் வீழ்த்துவது இது 2-வது முறை). இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா, மொத்தமாக 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். தோற்ற கார்ல்சென் கடைசி இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான குகேஷ், பிரான்சின் அலிரெஜாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பின் வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஆர்மகேட்டன்' சுற்றில் குகேஷ் தோல்வியடைந்து 1 புள்ளியைப் பெற்றார். 3-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
.ராஜஸ்தான், ஹைதெராபாத் அணிகள் நேற்றிரவு நியூ சண்டிகாரில் நடந்த போட்டியில் மோதின. டாஸ் வென்ற ஹைதெராபாத் அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 243/8 ரன்கள் எடுத்தது. ஹைதெராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி வெளியேறியது. ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் இதே மைதானத்தில் ராஜஸ்தான்- குஜராத் டைட் டன்ஸ் அணிகள் மோத உள்ளன.இறுதிப்போட்டியில் இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்தும்.