27-ம் தேதி ஹைதராபாத்தில், லக்னோ, ஹைதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்தஹைதராபாத் அணி 190/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 193/5, ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷர்துல் தாகூர் (4 WICKET / 18 RUN /4 OVER) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கால்பந்து கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் லீக் (ஐ.டபிள்யு. எல்.,) சேது எப்.சி., அணி 3-1 என, ஒடிசா அணியை வீழ்த்தியது.அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் பெண்கள் லீக் 8வது சீசனில் ,மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று சென்னை யில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சேது எப்.சி., அணிகள் மோதின. சேது எப்.சி., அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. குத்து சண்டை, பெண்களுக்கான தேசிய சீனியர் குத்துச்சண்டை 8வது சீசன் சாம்பியன்ஷிப் உ.பி.,யின் நொய்டாவில். மொத்தம் 188 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 'மினிமம் வெயிட்' (45-48 கிலோ) பிரிவின் நடப்பு சாம்பியன் அகில இந்திய போலீஸ் அணியின் மீனாட்சி தனது மூன்றாவது போட்டியில், டில்லியின் சஞ்சனாவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் சிக்கிமின் யாஷிகாவை சந்திக்க உள்ளார். பிளை வெயிட்' (48-51 கிலோ) பிரிவில் ரயில்வே அணியின் அனாமிகா, தமிழகத்தின் கலைவாணியை சந்தித்தார். கடும் போராட்டத்துக்குப் பின் அனாமிகா 4:3 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் ஹரியானாவின் தமன்னாவை சந்திக்கிறார். மல்யுத்தம் ஜோர்டானில் ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப்,. இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ் டைல்' பிரிவில் 20 (10 ஆண்+10 பெண்) என மொத்தம் 30 பேர் பங் கேற்கின்றனர். பெண் களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. நேற்று76 கிலோ பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் ரீத்திகா, 10-0 என ஜப்பானின் யமா மோட்டோவை வென்று, பைனலுக்கு முன்னேறினார். மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி."கேலோ இந்தியா பாரா' விளையாட்டு டில்லியில், மாற்றுத் திறனாளிகளுக்கான 2வது சீசனில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்,6 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.கடைசி நாளில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் குஜராத் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். நான்கு தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என, 21 பதக்கங்களை கைப்பற்றினர். ஹரியானாவுக்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கம் கிடைத்தது.முடிவில், 34 தங்கம், 39 வெள்ளி, 31 வெண்கலம் உட்பட 104 பதக்கங்களை அள்ளிய ஹரியானா, மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.தமிழகம் 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் உட்பட 74 பதக்கங் களுடன் 2வது இடத்தை தட்டிச் சென்றது. உ.பி., க்கு (23 தங்கம், 21 வெள்ளி, 20 வெண்கலம்) 3வது இடம் கிடைத்தது.
கூடைப்பந்து கூடைப்பந்து(3×3) தொடர்சிங்கப்பூரில், ஆசிய கோப்பை ஆண்களுக்கான 'பி'பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின.இதில் இந்திய அணி 21,11என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா அணிக்கு ஹர்ஷ் தாகர்(12 புள்ளி), குஷால் சிங் (5), அரவிந்த் முத்து (2), பிரனவ் பிரின்ஸ் (2) கை கொடுத்தனர்.இரண்டாவது போட்டியில் இந்தியா, மக்காவ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்தியா 21-6 என வெற்றி பெற்றது. இந்திய அணிக்க ஹர்ஷ் தாகர் (12 புள்ளி), அரவிந்த் முத்து (5), குஷால் சிங் (2), பிரனவ் பிரின்ஸ் (2) கைகொடுத்தனர்.இன்று நடக்கும் 3வது போட்டியில் இந்தியா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன. டேபிள் டென்னிஸ் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில், 'டபிள்யு. டி.டி., கன்டென்டர்' ஸ்டார் ஆண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் அனிர்பன் கோஷ், இத்தாலியின் கார்லோ ரோஸி மோதினர். அனிர்பன் 3-0 (14-12, 11-7, 12-10) கணக்கில் வெற்றி பெற்று, ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷ் ஸ்ரீ வாஸ்தவா 3-1 (11-6, 11-6, 6-11, 11-6) என சகவீரர் முதித் டேனியை வென்றார்.பெண்கள் ஒற்றையர் தகுதிச் சுற்றின் 3வது போட்டியில் இந்தியாவின் காவ்யா பாட் 3-2 (11-5, 11-6, 4-11, 12-14, 11-7) என சகவீராங்கனை மானு ஸ்ரீ பாட்டீலை தோற்கடித்தார் .மற்ற போட்டிகளில் இந்தியாவின் கரிமா கோயல், அவானி திரிபாதி, அஞ்சலி ரோஹில்லா, அனன்யா சாந்தே, திவ்யான்ஷி போவ்மிக் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றனர். மல்யுத்தம் ஜோர்டானில் ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்தியா சார்பில் கிரிகோ ரோமன் (10), 'பிரீஸ் டைல்' பிரிவில் 20 (10 ஆண் +10 பெண்) என மொத்தம் 30 பேர் பங் கேற்கின்றனர்.கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக் கான 87 கிலோ பிரிவு அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் சுனில் குமார், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஜியாசின் ஹுவாங்கை சந்தித்தார். இதில் சுனில் குமார், 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். நேற்று நடந்த 97 கிலோ பிரிவு காலிறு தியில் இந்தியாவின் நிதேஷ் சிவாச்,கஜ கஸ்தானின் இலியாஸ் குச்சிகோவை சந்தித்தார். இதில் நிதேஷ் 9-0 என வெற்றி பெற்று, அரையி றுதிக்கு முன்னேறினார்.இதில் ஈரானின் சராவியிடம் தோல்வியடைந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார்.
26-ம் தேதி கவுகாத்தியில் ராஜஸ்தான், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 151/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 153/2, ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக குயின்டன் டி காக் (91 RUN/61 BALLS) தேர்ந்தெடுக்கப்பட்டார் .
. ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 4வது சுற்று சைப்ரசில் நடந்தது. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.9வது, கடைசி சுற்றில் ஹரிகா, உக்ரைனின் அனா முசிசுக். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, போட்டியின் 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இந்தியாவின் திவ்யா, ஜெர்மனியின் -எலிசபெத் மோதிய மற் றொரு போட்டியும் 'டிரா' ஆனது. ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்தியாவின்ஹரிகா, 5.0 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் கைப்பற்றினார். இவருக்கு ரூ.8 லட்சம் பரிசு கிடைத்தது.
சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின் மும்பையில்.பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் ' நம்பர் -3' வீராங்கனை இந்தியாவின் அனாஹத் சிங், ஸ்பெயினின் கிறிஸ்டினாகோமசை சந்தித்தார். இதில் அனா ஹத் சிங் 3-1(11-5, 9-11, 11-5, 11-2) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஜோஷ்னா 3-0 என (11– 1, 11 7, 11-8) போர்ச்சு கலில் சோபியாவை வீழ்த்தினார். இத்தொட ரின் 'நம்பர்-1' சக வீராங்கனை ஆகான்ஷா, 3-1 என (6-11, 11-8, 11-7, 11-4) தான்வியை சாய்த்து. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அபே சிங், 3-0 என (11-5, 11-8, 11-7) பிரான்சின் மெல்வினை வென்றனர்.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று நேற்றுதுவங்கியது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும்.புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறும்.உலகத் தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று ஷில்லாங்கில் (மேகாலயா) நடந்த முதல் போட்டியில், 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை எதிர்கொண்டது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் முடித்தது. இரண்டாவது பாதி முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
25-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், பஞ்சாப், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 243/5 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 232/5, ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHREYAS IYER தேர்ந்தெடுக்கப்பட்டார்.
IPL கிரிக்கெட்MARCH24ம்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றபோட்டியில் டெல்லி, லக்னோ, அணிமோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி209/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம்இறங்கிய டெல்லி அணி211/9, ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக AUSHUTOSH SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செஸ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 8வது சுற்றில் திவ்யா, ஆஸ்திரியாவின் படெல்கா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 71வது நகர்த்தலில் முதல் வெற்றியை பதிவு செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா (கருப்பு), ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்சினா (வெள்ளை) மோதினர். இப்போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.எட்டு சுற்றுகளின் முடிவில் ஹரிகா (4.5 புள்ளி), திவ்யா (3.5) முறையே 3, 7வது இடத்தில் உள்ளனர். மல்யுத்தம் ஆசிய மல்யுத்த 'சீனியர்' சாம்பியன்ஷிப் இன்று ஜோர்டானில் துவங்குகிறது. கிரிகோ ரோமன் பிரிவில் 10, 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண் +10 பெண்) என இந்தியா சார்பில் மொத்தம் 30 பேர் களமிறங்குகின்றனர்.இதில் 20 வயதுக்குட் பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பில் உலக 2 முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல், சாதிக்க உள்ளார்.23வயது பிரிவின் உலக சாம்பியன் ரீத்திகா ஹூடா (76 கிலோ), 17 வயது பிரிவு உலக சாம்பியன் மான்சி லாதெர் (68 கிலோ), மணிஷா (62 கிலோ) உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.ஆண்கள் பிரிவில் தீபக் புனியா, 'சீனியர்' அரங்கில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். கிரிக்கெட் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. தொடரை வெற்றியுடன் துவக்கிய மகிழ்ச்சியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், பிரிமியர் போட்டியில் மட்டும் பங்கேற்கிறேன். ஒவ் வொருமுறைகளமிறங்கும் போது, நான் சிறப்பாக விளையாட வேண்டுமென ரசிகர்கள் விரும்புவது ஒரு அற்புதமான உணர்வு. இன்னும் சில காலம் விளையாடலாம். கால்பந்து ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது.இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச் சுற்று இன்று துவங்குகிறது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கும்.ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம் .