தேவையான பொருட்கள் -200கிராம் ராகி மாவு,100கிராம் வறுத்த நிலக்கடலை,50கிராம் வெல்லம்/நாட்டு சக்கரை/சக்கரை,உப்பு, நெய் – தேவையான அளவு.செய்முறை -முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்துநன்கு கலந்து ஒரு அடை பக்குவத்தில் நாம் கலந்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் நன்கு சூடான பிறகு நாம் தோசை பதத்தில் அடைபோல்தட்டி வைக்க வேண்டும் பிறகு இதைப் போல் மீதமுள்ள மாவையும் நாம் அடை போல் தட்டி நன்கு ஆறவைக்கவேண்டும் ஆறிய பிறகு அதைச் சின்ன சின்னதாக ஒரு மிக்ஸி ஜாரில் அதை போட்டு கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு நாம் அரைத்து வைத்த ராகி மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நாம் அரைத்து வைத்தநிலக்கடலையும் சேர்த்து தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்கு கையால்பிசைய வேண்டும்.பிறகு தேவையான அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் சுவையானசத்தான ராகி உருண்டை லட்டு ரெடி ஆகிவிட்டது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும்விரும்பி சாப்பிடுவார்கள்.கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் -ஒரு கப் நிலக்கடலைஒரு கப் சர்க்கரைஒரு டேபிள்ஸ்பூன் நெய்ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் செய்முறை-தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு தட்டில் நெய் சேர்த்து தடவிஎடுத்துக் கொள்ளவும்.முதலில் நிலக்கடலையை மிதமான தீயில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின் நிலக்கடலை ஆறிய பிறகுதோலை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.தோல் நீக்கிய பிறகு நிலக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சிறு கம்பி பதம் வரும் வரை மிதமானதீயில் கொதிக்க வைக்கவும்.கம்பி பதம் வந்த பிறகு பவுடர் பண்ணி எடுத்து வைத்த நிலக்கடலையை சேர்த்து பிறகு அதில் நெய்ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.சேர்த்த பிறகு மிதமான தீயில் கட்டிகளில்லாமல் கைவிடாமல் நன்கு கிளறவும் ஐந்து நிமிடங்கள் மிதமானதீயில் கிளறிய பிறகு பேனில் ஒட்டாமல் நன்றாக சுருண்டு வரும் வந்த பிறகு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.பிறகு அதை ஒரே சீராக பரப்பி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் சுவையானநிலக்கடலை கத்லி தயார்.
தேவையான பொருட்கள் -11/2கப்வறுத்த வேர்க்கடலை,1கப் வெல்லம்,தண்ணீர் தேவையான அளவு,செய்முறை -ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அத்துடன் கரைய 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்ததும்,அதனை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். தற்போது அதில் உள்ள தூசு நீங்கிவிடும்.வடிகட்டிய வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்.ஒரு தட்டில் நீரை ஊற்றி வைத்து கொள்ள வேண்டும், நன்கு வெல்லம் கொதித்ததும், அதில் சிறிதளவு எடுத்துநீரில் நீட்டா ஊற்றி அதனை எடுத்து உடைத்தால் உடைய வேண்டும், அந்த பக்குவத்தில் பாகு வரும் வரைகைவிடாமல் கிளறவும்,.அதிரச பதத்திற்கு பிறகு தான் இந்த பதம் வரும், அந்த பதம் வந்ததும் அத்துடன் வேர்க்கடலை கலந்து இறக்கி,அகலமான பாத்திரத்தில் அதனை கொட்டி பரப்பி விட்டு மிதமான சூட்டில் கத்தியால் வெட்டி விடவும்.ஆரோக்கியமான வேர்க்கடலை பர்ஃபி தயார்.நன்கு ஆறியவுடன் எடுத்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள் -1/2 கப் வறுத்த வேர்க்கடலை,3வேக வைத்த உருளைக்கிழங்கு,1பெரிய வெங்காயம்,3 பச்சை மிளகாய்,சிறிதளவு கொத்தமல்லி,1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,சிறிதுகருவேப்பிலை,1/4 கப் பொரி கடலை மாவு,1/4 கப்கடலை மாவு,2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு,1டீஸ்பூன் வெல்லத்தூள்,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு எண்ணை பொரிக்க.செய்முறை -முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடிசெய்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி கருவேப்பிலைசேர்த்து வதக்கவும்.பிறகு வேர்க்கடலை பொடி கரம் மசாலா தூள் உப்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.சற்று ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வேண்டிய வடிவில் செய்து கொள்ளவும்.கடலைமாவு பொரி கடலை மாவு அரிசி மாவு சிறிது வெல்லம் சேர்த்துபஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் கட்லட்டை கடலை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில்சேர்த்துஇருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.சுடச்சுட சாப்பிட சுவையான வேர்க்கடலை கட்லெட் தயார். இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும்அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் -நிலக்கடலை - 1கப்,கோதுமை மாவு -1/2 கப்,அரிசி மாவு - 1/2 கப்,பெரிய வெங்காயம் -2,பச்சை மிளகாய் – 4,இஞ்சி - சிறிய துண்டுஜீரகம் - 1/2 ஸ்பூன்,மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்தேவையான அளவு உப்பு,நல்லெண்ணெய் தேவையான அளவு.செய்முறை - 1 கப் காய்ந்த நிலக்கடலையை 8 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த நிலக்கடலையை குக்கரில் போட்டு3 கப் தண்ணீர் ஊற்றி 6 விசில் விட்டு வேக வைத்து தண்ணீர் வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.வேக வைத்த நிலக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் தெளித்து கொர கொரப்பாக அரைக்கவும்.பிறகு அதில் 1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் பச்சரிசி மாவை அதில் போட்டு ஒரு துண்டு இஞ்சி, 1/2 ஸ்பூன் ஜீரகம்போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவுதண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும்.பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைப் போட்டு கிளறி விடவும்.அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை அதில் அடைதோசையாகஊற்றி சுற்றி 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும்.அடைதோசை ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையானநிலக்கடலை அடைதோசை தயார்..
தேவையான பொருட்கள் -நிலக்கடலை - கால் கிலோ,வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் -10, இஞ்சி-சிறிய துண்டு,கறிவேப்பிலை - 1 இணுக்கு (பொடியாக நறுக்கியது ),பெருங்காயம் – சிறிதளவு, சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்.மிளகு - அரை டேபிள் ஸ்பூன், கடலை எண்ணெய் - கால் லிட்டர்உப்பு - தேவையான அளவுசெய்முறை-நிலக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்.மறுநாள் ஊறிய நிலக்கடலையுடன் உப்பு. 6 பச்சை மிளகாய். இஞ்சி. சீரகம். மிளகு பெருங்காயம் சேர்த்துகரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், மீதமுள்ள 4 பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.இவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, வடை வடிவில் தட்டவும்.வாணலியில் எண்ணெயை நன்றாகக் காயவைத்து, வடைகளை மிதமான தீயில் பொன்னிறமாகவும்மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுக்கவும்.சுவையான, மொறுமொறுப்பான நிலக்கடலை வடை சூடாகப் பரிமாறினால் அனைவரும் விரும்பிச்சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி- 1 கிலோ, இறால் -½கிலோ, வெங்காயம்- ½ கிலோ, தக்காளி-¼ கிலோஇஞ்சி- 100 கிராம், பூண்டு-100 கிராம், பச்சை மிளகாய்-4, மிளகாய்ப் பொடி-50 கிராம், மஞ்சள் பொடி - 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா- 1 டேபிள் ஸ்பூன், கல் உப்பு, புதினா, , தேவையான அளவு, கொத்தமல்லி சிறிதளவு எண்ணெய்- 200 மி.லி.செய்முறை:இறாலைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு இரண்டையும்அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக்கொள்ளவும்.பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவைத்துக் கொள்ளவும். அடுப்பைப் பற்றவைத்து, குக்கரில் எண்ணெய்ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அதன் பிறகு வெங்காயம், தக்காளி போடவும். இவை வதங்கியதும் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி,கரம் மசாலா போட்டு, அதனுடன் இறாலையும் போட்டு வதக்க வேண்டும்.வதக்கியவை 'தொக்கு' பதத்துக்கு வந்ததும் ஒரு கப் பாசுமதி அரிசி, ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரைமூடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவினால், சுவையான இறால் பிரியாணிதயார்.
தேவையான பொருட்கள் –பாசுமதி அரிசி - 2 கப்,வேகவைத்த முட்டை – 4,பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது),தக்காளி - 2(பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்,தயிர் - அரை கப்,பச்சை மிளகாய் – 3,புதினா,கொத்தமல்லித்தழை – சிறிதளவு,மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,மல்லித்தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்,பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு,நெய் மற்றும் எண்ணெய் - தேவையான அளவு,உப்பு -தேவையான அளவு.செய்முறை -அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மசிய வதக்கவும்.தயிர் மற்றும் மசாலா தூள் வகைகளைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்.சாதம் வெந்ததும், லேசாக கீறி வதக்கிய வேகவைத்த முட்டைகளை மேலே வைத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:பாஸ்மதி அரிசி - 1 கப்,நறுக்கிய(அ) துருவிய பீட்ரூட்- ½கப்,தேங்காய்ப் பால் - ½கப்,வெங்காயம் - 1,எண்ணெய், உப்பு-தேவைக்கு.தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - தலா 1, இஞ்சி, பூண்டு விழுது-1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1.செய்முறை:குக்கரில் எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம் வதக்கி, பிறகுபீட்ரூட், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால், 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் 15 நிமிடங்கள்ஊற வைத்த அரிசியைச் சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சுவை யான பீட்ரூட் பிரியாணி தயார்.
தேவையான பொருட்கள் -அரிசி: 1.5 கப் (ஊற வைத்தது)வாழைப்பூ: 1 கப் (நரம்பு நீக்கி நறுக்கியது)வெங்காயம்: 2 (நீளவாக்கில் நறுக்கியது)தக்காளி: 1 (பொடியாக நறுக்கியது)இஞ்சி-பூண்டு விழுது: 1 ஸ்பூன்பச்சை மிளகாய்: 2மசாலா தூள்: மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலாதாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலைமல்லி-புதினா: சிறிதளவுசெய்முறை -சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாழைப்பூவை மோரில் சிறிது நேரம் வைத்து பிறகு எண்ணெயில் லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தாளிப்புப் பொருட்களை சேர்த்து, வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் வதக்கவும்.இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து மசாலாப் பொடிகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.வதக்கிய வாழைப்பூ, புதினா, மல்லி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியைபோடவும்.மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி 1 விசில் விட்டு எடுக்கவும். வாழைப்பூ பிரியாணி தயார்.