தேவையான பொருட்கள்:மணத்தக்காளிகீரை- அரை கட்டுதேங்காய் பால்- 1 கப்சின்ன வெங்காயம் - 5பூண்டு - 3 பல்எண்ணெய்,மிளகுத்தூள் - சிறிதளவு உப்பு- தேவையான அளவு செய்முறை:சுத்தம் செய்த கீரை, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு,கீரையை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர், உப்புசேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.பின், இந்த சாறில், மிளகுத்துாள், தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.மணத்தக்காளி சூப், வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,அனைவரின் உடல் நலத்துக்கும் உகந்தது.
தேவையான பொருட்கள்:1 கப் வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது,1டேபிள்ஸ்பூன் வெங்காயம் பொடியாக நறுக்கியது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன்மிளகு தூள்,சிட்டிகை மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் வெண்ணெய்,1டீஸ்பூன் சீரகம், 2 டேபிள்ஸ்பூன்சோள மாவு.உப்பு,தண்ணீர் - தேவையானஅளவுசெய்முறை: வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலைசேர்த்து வதக்கவும்.பிறகு வாழைத்தண்டு பொட்டு வதக்கவும். இதில் சிறிது மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்துவதக்கவும். பின் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி வாழைத்தண்டு வேகும் வரை கொதிக்க விடவும்.வாழைத்தண்டு வெந்து வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து சோள மாவை 1/4 கப்தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறி விடவும்.5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவிஇறக்கவும். கார்ன் ஃபிளேக்ஸ் உடன் வாழைத்தண்டு சூப் சூடாக பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:1கேரட் ,5 பீன்ஸ்,2 தட்டை மக்காசோளம்,2இலை முட்டைக்கோஸ்,100 கிராம் காலிஃப்ளவர்,20 பச்சை பட்டாணி,2டீஸ்பூன் மிளகுத்தூள்,4பல் பூண்டு,தேவையான அளவு உப்பு,செய்முறை :கேரட் ,பீன்ஸ், முட்டைக்கோஸ் ,காலிஃப்ளவர் இவற்றை நீளவாக்கில் அல்லது பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதனுடன் பச்சை பட்டாணி ஒரு தட்டைமக்காச்சோளத்தையும்சேர்த்துக்கொள்ளவும்.ஒரு தட்டை மக்காச்சோளத்தை பொடியாகஉதிர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாகநறுக்கிய நான்கு பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.பூண்டின் பச்சை வாசனைபோனபின் வெஜிடபிள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்.நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்ஊற்றி மிதமான தீயில் 10நிமிடங்கள் வேக விடவும். வெஜிடபிள் வெந்தவுடன் மேலும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிஅதனுடன் அரைத்து வைத்த மக்காச் சோளத்தையும் ஊற்றி உப்பு சரிபார்த்து கொதிக்கவிடவும்..சூப் நன்றாக கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடவும். சூப் தயார்..
தேவையான பொருட்கள்:3 ஆப்பிள் தக்காளி,5பல் பூண்டு,1டீஸ்பூன் மிளகு பொடி1டேபிள்ஸ்பூன் சோள மாவு,1/2 டீஸ்பூன் உப்பு,1டேபிள்ஸ்பூன்(வெண்ணெய்,1/2 கப் பிரட் துண்டுகள்,1டேபிள்ஸ்பூன் பார்ஸ்லி,வெங்காயத்தாள்.செய்முறை :ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் தக்காளியை சேர்த்து வேக வைக்கவும்.மிக்ஸ்சி ஜாரில் வெந்த தக்காளியை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டுசேர்த்து நன்கு வதக்கவும். அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.ஒரு தவாவை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து,ரொட்டி துண்டுகளை சேர்த்து வறுத்துவைத்துக்கொள்ளவும்.பின்னர் மைதா மாவில் தண்ணீர் கலந்து, தக்காளி கலவையில் சேர்த்து கொதித்ததும்,நறுக்கிய பார்சலி இலைகள்,மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும், கொஞ்சம் கெட்டியாகி விடும். அப்போது இறக்கினால்தக்காளி சூப் தயார்.தயாரான சூப்பை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து மேலே நறுக்கிய வெங்காயத்தாள்,பார்சலி,வறுத்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகள் சேர்த்து சுவைக்கவும்.இப்போது மிளகு காரத்துடன் மிகவும் சுவையான தக்காளி சூப்.
தேவையான பொருட்கள்:ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரை,10 சின்ன வெங்காயம்,3டீஸ்பூன் சீரகம்,2டீஸ்பூன் மிளகு, 3பல் பூண்டு,10 கறிவேப்பிலை,மல்லிதழை கொஞ்சம்,8 டம்ளர் தண்ணீர்,தேவையான அளவு அளவு உப்பு.செய்முறை: முடக்கத்தான் கீரையையும் ,கொடியையும்,சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அலசி வைத்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கியும், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வைத்துக்கொள்ளவும்.மிளகு, சீரகத்தை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.8 டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைக்கவும். முடக்கத்தான் கீரையையும் வெங்காயம்பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்புஅனைத்தையும் ஒன்றாக போட்டு அடுப்பில் கொதிக்க வைக்கவும்.கலவை பாதியளவு ஆகும்வரை கொதிக்க வைக்கவும்.கொதித்த கலவையை வடிகட்டி ஆறவிடவும். அதனுடன் சீரகம் மிளகு பொடி சேர்த்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி.
தேவையான பொருட்கள்:1 கப் வல்லாரை கீரை,1/2 லிட்டர் பருப்பு வேகவைத்த தண்ணீர்,1குழிகரண்டி மசித்த துவரம்பருப்பு,1ஸ்பூன் சீரகத்தூள்,1/2 ஸ்பூன் மிளகுத் தூள்,தேவையான அளவுஉப்பு,2 ஸ்பூன் நெய்,1 வரமிளகாய்,1 வெங்காயம்,2 தக்காளி.செய்முறை: வல்லாரை கீரையை அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும் .பின் ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு சூடானதும் ,வரமிளகாய் முழுதாக அப்படியே போட்டு வதக்கவும். மிளகாயின்ப்ளேவர் மட்டும் எண்ணெயில் இறங்கும்.பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.பின்கீரையை சேர்த்து நன்கு வதக்கவும் .பின் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும், சீரகத்தூள் ,உப்பு, மிளகுத்தூள் ,சேர்த்து மசித்த பருப்புசேர்த்து நன்கு கொதிக்க விடவும்.எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் இறக்கவும் .சுவையான ஆரோக்கியமான வல்லாரை கீரை சூப் ரெடி.
தேவையான பொருட்கள்:பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)பச்சை பட்டாணி - 1/2 கப்வெங்காயம் - 2 (நறுக்கியது)தக்காளி - 3 (நறுக்கியது)முந்திரி - 8-10 (ஊறவைத்தது)இஞ்சி - 1 அங்குலம்பூண்டு - 5-6 பற்கள்பச்சை மிளகாய் - 2சீரகம் - 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் - தேவைக்கேற்பஎண்ணெய்/வெண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை:மிக்சியில் தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து நைசாகஅரைத்துக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய்,வெண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைபொன்னிறமாக வதக்கவும்.அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்துஎண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பட்டாணி வேகும் வரைமூடி சமைக்கவும்.இறுதியாக பன்னீர் துண்டுகளைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைத்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.பன்னீரை கடைசியாக சேர்த்தால் மென்மையாக இருக்கும். விருப்பப்பட்டால் சிறிது பிரஷ்கிரீம் சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:3டேபிள்ஸ்பூன்எண்ணெய் ,1ஸ்பூன் சோம்பு,2பிரிஞ்சி இலை,1 பெரிய வெங்காயம்,1கொத்து கறிவேப்பிலை,2தக்காளி, 1-1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2டேபிள்ஸ்பூன் தயிர்,1-1/2ஸ்பூன் மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள்,1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்,1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,1/4கப் உருளைக்கிழங்கு நறுக்கியது,3/4கப் நறுக்கிய கேரட், பீன்ஸ்,காலிபிளவர்,1/4கப்பட்டாணி,1/2கப்தேங்காய்,2துண்டுபட்டை,5கிராம்பு,3ஏலக்காய்,சிறிதளவுகடல்பாசி,10முந்திரி,தேவையான அளவு உப்பு, சிறிதளவுபுதினா.செய்முறை :ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ,அதில் சோம்பு ,பிரிஞ்சி இலை ,கருவேப்பிலைதாளிக்கவும்.. அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..வெங்காயம் வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.இஞ்சி பூண்டுவதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாகவதக்கவும்.பொடிகள் எல்லாம் நன்றாக வதங்கியதும் ,அதனுடன் தயிரையும் சேர்த்து வதக்கிஅதனுடன் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்..மிக்ஸி ஜாரில் தேங்காய் பட்டை, கிராம்பு, ஏலக்காய் கடல்பாசி, முந்திரி சேர்த்து சிறிதுதண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை நாம் வதக்கிவைத்திருக்கும் காய்கறி உடன் சேர்க்கவும்..அதனுடன் உப்பையும் சேர்த்து ,சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி இரண்டு விசில்வைக்கவும்..இறுதியாக குக்கரை திறந்த பிறகு அதில் சிறிது புதினா இலைகளை தூவி விடவும்..இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார். இது சப்பாத்திபரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.குறிப்பு : இந்த குருமா ஹோட்டல் சுவையில் இருக்கும் மிகவும் அருமையாக இருக்கும்.இதில் கடல்பாசி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் ஓட்டல் சுவையில்இருக்கும்.இதில் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சிறிது அளவு கசகசாவும் சேர்த்தும்அரைக்கலாம்.
தேவையான பொருட்கள்:2 கப்வெண் புழுங்கலரிசி,11/2 கப்பபட்டாணி,2பெரியசைரஸ் வெங்காயம், சிறு துண்டுபட்டை,4கிராம்பு,1ஏலக்காய்,1/2 அன்னாசி பூ,2 பிரிஞ்சி இலை,1டீ ஸ்பூன்சோம்பு,அரைக்க:- 2பமிளகாய்,சிறிய துண்டுஇஞ்சி,6 பல்பூண்டு,2 ஸ்பூன்நெய்,3 ஸ்பூன்எண்ணெய்,ருசிக்குஉப்பு,3 1/2 கப் தண்ணீர்,அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின வெங்காய துண்டுகள், பட்டாணிசெய்முறை :தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில்மெல்லியதாக நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில்,ப.மிளகாய்,இஞ்சி,பூண்டை, அரைத்துக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும், பட்டை,சோம்பு, அன்னாசி பூ, கிராம்பு, பிரிஞ்சி இலை, அரைத்த விழுது, சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கியதும், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும்,ப.பட்டாணியை சேர்த்துக் கொள்ளவும்.சாதத்தை, உதிரியாக வடித்ததும், பட்டாணியுடன் சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கிளறிஇறக்கவும். பிறகு, மேலே 1ஸ்பூன் நெய் விடவும்.இப்போது, சுவையான, க்ரீன் பீஸ் புலாவ்* தயார். வட்டமாக நறுக்கின வெங்காயம்,பட்டாணியை அலங்கரிக்கவும்.
தேவையான பொருட்கள்:1cupஃப்ரெஷ் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1தக்காளி,1/2kg காலிஃப்ளவர்,தலா 1ஸ்பூன் கடுகு, உளுந்து,தலா 1ஸ்பூன் சீரகம், சோம்பு1/4spn மஞ்சள் தூள்,2spnமிளகாய்த்தூள்,1spnமல்லித்தூள்,10 பூண்டுபல்,சிறிதளவுபெருங்காயத்தூள்,தேவையான அளவு- எண்ணெய், உப்பு ,தண்ணீர்.செய்முறை :அடி கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுந்து,சீரகம் சோம்பு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.நன்கு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தைசேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கி விடவும்.பிறகு தக்காளி சேர்த்து, நன்கு மசிய வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.பிறகுமல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை நன்கு பச்சை வாடை போகவதக்கவும். பிறகு நறுக்கிய காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி ,சிறிது தண்ணீர்ஊற்றி, தட்டு கொண்டு மூடி மிதமான தீயில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வேகவிடவும்.சுவையான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் தயார்.