தேவையான பொருட்கள் :- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,, சீரம் 2 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன் மல்லி விதை 3 டேபிள் ஸ்பூன், வத்தல் 15 எண்ணம், கருவேப்பிலை சிறிதளவு.செய்முறை :- அனைத்தையும் தனித் தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும், எண்ணெய்விட்டு வறுத்து வைக்கவும், கூட்டு இறக்கும் பொழுது 2 முதல் 3 சிட்டிகைஎடுத்து தூவினால் கூட்டு ருசியாக இருக்கும்,
தேவையான பொருட்கள் :- வறுத்த வேர்க்கடலை 1 கப், வெள்ளை எள் கால் கப், வத்தல் 6 முதல் 7 எண்ணம், பெருங்காயம் 2 இஞ்ச் துண்டு, உப்பு தேவையான அளவுகருவேப்பிலை சிறிதளவு.செய்முறை :- வறுத்த வேர்க்கடலையை சூடு பொறுக்கும் வரை வறுத்து எடுத்து கசக்கி தோலைநீக்கவும், வெள்ளை எள் வெடித்து வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும், பெருங்காயத்தை வறுத்து, பின் வத்தல், கருவேப்பிலை தனியாக வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் கடைசியாக நிலக்கடலை, எள்ளை கொர கொரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும், எல்லாவற்றையும் கலந்து வைக்கவும், உதிரி சாதம் (சூடாக இருக்க வேண்டும்)தேவையான அளவு கடுகு, கருவேப்பிலை, தாளித்து சாதம் சேர்த்து அதன் மேல்வேர்க்கடலை பொடி தேவையான அளவு தூவி கலந்தால் சூப்பர் நிலக்கடலை சாதம் ரெடி, இட்லி தோசைக்கு இப்பொடி நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :- வத்தல் 1 கப், மல்லி விதை 1 கப், துவரம்பருப்பு கால் கப், கடலை பருப்பு கால் கப், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், அரிசி 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 முதல் 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்,செய்முறை :- அனைத்தையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து ஆறியவுடன் நைஸாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். குழம்பு வைக்கும் பொழுது வத்தக் குழம்பு பொடி சேர்த்து சமைத்தால் ரெம்ப ருசியாக இருக்கும். சுண்ட வத்தல், கடுகு, கருவேப்பிலை, தாளித்து வெங்காயம், பூண்டு, பச்ச மிளகாய் சேர்த்து புளி கரைத்து ஊற்றி தேவையான அளவு வத்தக் குழம்பு பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரிந்ததும் எடுத்து வைக்க வேண்டும்.
தேவையான பொருட்கள் :- பூண்டு 15 பல், மல்லிவிதை 1 டீஸ்பூன், வத்தல் 2 எண்ணம், கடலைபருப்பு 1 டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், (பதிலாக) பொரிகடலை அல்லது நிலக்கடலை சேர்க்கவும், எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, காயப்பொடி கால் டீஸ்பூன், தாளிக்க கடுகு, கருவேப்பிலை. செய்முறை:- அனைத்தையும் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு 5 முதல் 6 நிமிடங்கள் நன்றாக வறுக்கவும், பின் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, தாளித்து சிறிதளவு, நெய் சேர்த்து, பூண்டு பொடி சேர்த்து சாதத்தில் விரவி கலந்து சாப்பிட்டால் சுவையான பூண்டு சாதம் ரெடி
தேவையான பொருட்கள் :- கருவேப்பிலை உருவியது 1 கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன, வத்தல் 4 முதல் 5, தனியா 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், பூண்டு 6 பல், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை :- அனைத்தையும் தனி தனியாக வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும், கருவேப்பிலையை தனியாக வறுத்து கடைசியில் சேர்த்து பின் பொடி செய்யவும்உதிறி சாதத்திற்கு கடுகு, உளுந்து, தாளித்து இப்பொடியை சேர்த்தால் சுவையானகருவேப்பிலை சாதம் ரெடி.
தேவையான பொருட்கள் - பிஞ்சு கத்தரிக்காய் 10 முதல் 12 வரை, பெங்களுர் தக்காளி 2 பெரியது, தனியா 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், வத்தல் 4 முதல் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன், பட்டை 2 இஞ்ச், தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு.செய்முறை:- பலசரக்கு அனைத்தையும் வெறும் வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து வதக்கியதும், கத்தரிக்காயை நீளவாக்கில் நைஸாக வெட்டி, உப்பு சேர்த்து வதக்கவும், அரை வேக்காடு வெந்தவுடன் இப் பொடியை சேர்த்து நன்றாக வெந்ததும் சாதத்தில் கலந்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :4 கப் பொட்டுகடலை2கப்சர்க்கரை,6ஏலக்காய்,தேவைக்கு நெய்.செய்முறை :முதலில்ஏலக்காய்,பொட்டுகடலையை மிக்ஸி ஜாரில்போட்டு அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.சர்க்கரையை அரைத்துக்கொள்ளவும்.பின்அரைத்த சர்க்கரை,பொட்டுகடலை மாவு இரண்டையும் கலந்துகொள்ளவும்.பின்வாணலியை அடுப்பில்வைத்து தேவைக்கு நெய்ஊற்றி,முந்திரிபருப்பு வறுத்து,நெய்கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.பொட்டு கடலைநெய்உருண்டைரெடி. சர்க்கரைகொஞ்சம் பிரியபட்டவர்கள்கூட்டிக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:வாழைப்பூ - 1 கப் ஓட்ஸ் - 1கப் தேங்காய் துருவல் - 4 கப் ஏலக்காய் பொடி,தேன்,நெய், முந்திரி - தேவையான அளவு.செய்முறை:வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில், மீண்டும் சிறிது நெய் சேர்த்து, நீர் எதுவும் இல்லாமல் வாழைப்பூ மசியும் வரை வதக்கவும்.அதில் தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். பிறகு, வறுத்த ஓட்ஸை சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு தேன் ஊற்றி நன்கு கலந்து, கையால் உருட்டி லட்டு போல உருண்டை பிடிக்கவும்.பரிமாறும் போது, லட்டு உருண்டை மீது, வறுத்த முந்திரி வைக்கவும்.'வாழைப்பூ ஓட்ஸ் லட்டு!' தயார். சத்துடன், அபார ருசியும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:உடைத்த வேர்க்கடலை - இரண்டு கப்,பாகு வெல்லம் - ஒன்றரை கப், நெய் - இரண்டு தேக்கரண்டி.செய்முறை:வெல்ல பாகை, முற்றிய பதத்தில் எடுத்து, அதில் நெய் ஊற்றி உடைத்த வேர்க்கடலை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவை சிறிது ஆறியவுடன், கைகளில் நெய்யை தொட்டுக் கொண்டு, உருண்டைகளாக பிடிக்கவும்.இளம் பாகாக இருந்தால் உருண்டை பிடிக்க வராது.
தேவையான பொருட்கள்:பொரி -ஒரு கப், வெல்லம் ஒன்றரை கப்,பொட்டுக்கடலை, வேர்க்கடலை -தலா ஒரு தேக்கரண்டி,செய்முறை:வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். பாகு. கம்பி பதம் வந்ததும், அதில் பொரி, பொட்டுக்கடலை மூன்றையும் போட்டு நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.பொட்டுக்கடலை, வேர்க்கடலை இரண்டையும் கொரகொரப்பாக துாள் செய்தும் சேர்க்கலாம்.