25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மதுவை கட்டுப்படுத்த கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மதுவை கட்டுப்படுத்த கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவு!

நாகப்பட்டினம் விழுந்தமாவடி.

மது மற்றும் போதைப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள விழுந்தமாவடி மீனவக் கிராம மக்கள் ஊர்க் கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர்.

இதன்படி, திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினை ஏற்படுத்தினாலும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது அரசு விதித்த சட்டம் அல்ல. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக நலனைப் பாதுகாக்க மக்கள் தாங்களாக முன்வந்து மேற்கொண்டுள்ள சமூகக் கட்டுப்பாட்டு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலனுக்காக ஒன்றிணைந்த விழுந்தமாவடி கிராம மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News