25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


வேளாண்மை

Feb 17, 2026

முல்லைக் கொடி (Jasminum auriculatum)

ஜூன் முதல் டிசம்பர் வரை, செம்மண் அல்லது வடிகால் வசதியுள்ள நிலங்களில் நன்கு வளரும். 30 செ.மீ குழிகளில் தொழுஉரம் இட்டு, பதியன் குச்சிகளை 1.5 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். ஜனவரி மாதத்தில் கவாத்து (Pruning) செய்து, கடலைப்புண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களை இடுவதன் மூலம் ஏப்ரல் முதல் நவம்பர் வரை அதிக பூக்களைப் பெறலாம். முல்லைக் கொடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்:மண் மற்றும் தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது மணல் கலந்த வண்டல் மண் சிறந்தது. இதற்கு நல்ல சூரிய ஒளி தேவைப்படுகிறது.பருவம் மற்றும் நடுதல்: ஜூன் - டிசம்பர் மாதம் நடுவதற்கு ஏற்றது. 30 செ.மீ x 30 செ.மீ x 30 செ.மீ அளவுள்ள குழிகளை தோண்டி, 10 கிலோ தொழு உரம் இட்டு, வேர் பிடித்த குச்சிகளை (Layers or rooted cuttings)  நட வேண்டும்.இடைவெளி: செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் (ஒரு ஹெக்டேருக்கு 4400 செடிகள்).நீர்ப்பாசனம்: மண் ஈரப்பதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அதே சமயம் அதிக நீர் தேங்கக்கூடாது.கவாத்து (Pruning): ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில், செடிகளைத் தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இது அதிக கிளைகள் மற்றும் பூக்கள் பூக்க உதவும்.உர மேலாண்மை:குழிக்கு 10 கிலோ தொழு உரம் நடவு செய்வதற்கு முன் இட வேண்டும்.100 கிராம் கடலைப்புண்ணாக்கு மற்றும் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 3 நாட்களுக்குத் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்கவிட்டு, செடிக்கு ஊற்றினால் அதிக பூக்கள் கிடைக்கும்.அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா தலா 2 கிலோ/ஹெக்டேர் அளவில் இடலாம்.பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு:இலை உண்ணும் புழுக்களைக் கட்டுப்படுத்த குயினால்பாஸ் (Quinalphos) 25 EC 2 மி.லி/லிட்டர் தெளிக்கலாம்.அசுவினி பூச்சிகளைக் கட்டுப்படுத்த தியாக்ளோப்ரிட் (Thiacloprid) 240 SC 2 மி.லி/லிட்டர் தெளிக்க வேண்டும்.அறுவடை: ஏப்ரல் முதல் நவம்பர் வரை பூக்கள் பூக்கும். நன்கு வளர்ந்த, மலராத மொட்டுகளை அதிகாலையில் பறிக்க வேண்டும். கூடுதல் டிப்ஸ்:மீன் அமினோ அமிலம், பஞ்சகாவ்யா, அமிழ்த கரைசல் போன்ற இயற்கை உரங்களை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை கொடுப்பதன் மூலம் அதிக பூக்கள் கிடைக்கும்.செடிகள் நன்கு படர்வதற்கு பந்தல் அல்லது கொடி தாங்கி அமைப்பது அவசியம்.

Feb 10, 2026

மாடித் தோட்டத்தில் சுரைக்காய் பயிரிட,....

நல்ல சூரிய ஒளி, காற்றோட்டமான இடம் தேவை; செம்மண் கலந்த தொட்டி அல்லது பாலித்தீன் பைகள், இயற்கை உரம் சேர்த்து சுரைக்காய் விதைகளை விதைத்து, கொடி படர பந்தல் அல்லது கம்பி வலை அமைத்து, சரியான நீர்ப்பாசனம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு செய்தால் சுரைக்காய் வளர்க்கலாம். 1. தொட்டி மற்றும் மண் தயாரிப்பு:பெரிய தொட்டிகள் அல்லது பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தவும்.மண் கலவை: செம்மண், மண்புழு உரம் (Vermicompost), தென்னை நார்க்கழிவு (Coco peat) ஆகியவற்றை 1:1:1 விகிதத்தில் கலந்து நிரப்பவும்.2. விதைத்தல்:நல்ல தரமான சுரைக்காய் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.விதைகளை 1 அங்குல ஆழத்தில் நடவும், நீர் தெளிக்கவும்.3. கொடி படர:சுரைக்காய் ஒரு கொடி வகை என்பதால், அது படர்வதற்கு பந்தல் அல்லது கம்பி வலை அமைப்பது அவசியம்.4. நீர்ப்பாசனம்:மண் காய்ந்த பிறகு நீர் தெளிக்கவும். அதிகப்படியான நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.5. உரம்:வளர்ச்சி பருவத்தில் மண்புழு உரம் அல்லது பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களை இடலாம்.6. பூச்சி கட்டுப்பாடு:இலைப்பேன், அசுவினி போன்ற பூச்சிகள் வந்தால், வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கவும்.7. பராமரிப்பு:சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.கொடி வளர்ந்ததும், பூக்கள் பூத்து, பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். சரியான பராமரிப்பில் சுரைக்காய் எளிதாகப் பறிக்கலாம்.

Feb 03, 2026

மாடித் தோட்டத்தில் செவ்வந்திப் பூ (Chrysanthemum) வளர்க்க....

நல்ல சூரிய ஒளி, வடிகால் வசதியுள்ள மண், சரியான நீர்ப்பாசனம், மற்றும் அவ்வப்போது உரமிடுதல் அவசியம்.நாற்றுக்கள் அல்லது விதைகள் மூலம் நடவு செய்து, பூச்சிகள் வராமல் கவனித்து, வருடம் முழுவதும் பூக்கும் நாட்டு வகைகளையும் (நாட்டு சாமந்தி) தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கும் வகை: நாட்டு சாமந்தி அல்லது விதைகள் மூலம் வளர்க்கப்படும் செவ்வந்தி வகைகள் மாடித் தோட்டத்திற்கு ஏற்றவை. இவை ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டவை.நடும் முறை :(nursery) கடைகளில் நாற்றுகள் கிடைக்கும். அவற்றை வாங்கி நடவு செய்யலாம்.விதைகளை நேரடியாக நடலாம் அல்லது சிறிய தொட்டிகளில் முளைக்க வைத்து, பின் மாற்றி நடலாம்.தொட்டி மற்றும் மண்:நல்ல வடிகால் வசதியுள்ள தொட்டிகளைப் பயன்படுத்தவும்.மண், மக்கிய உரம் (compost), தேங்காய் நார் (cocopeat) கலந்து தயாரித்த கலவை சிறந்தது.மண் காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றவும். அதிக தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் இயற்கை உரங்கள் (மண்புழு உரம், பஞ்சகவ்யா, சாணம்) இடலாம். வேப்பெண்ணெய் கரைசல் போன்ற இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். கூடுதல் குறிப்புகள்: செடியின் உயரத்தைக் கட்டுப்படுத்தவும், அதிக பூக்களைப் பெறவும் கத்தரிப்பது அவசியம்.தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளுடன் செவ்வந்தியையும் சேர்த்து வளர்க்கலாம், ஆனால் அதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். செவ்வந்திப் பூக்கள் உங்கள் மாடித் தோட்டத்திற்கு அழகையும், மன அமைதியையும் தரும்.

Jan 28, 2026

மாடித் தோட்டத்தில் புடலை பயிரிட......

 நல்ல தொட்டிகள், மண் கலவை, கொடிக்கு பந்தல் அமைப்பு, சரியான விதைகள், தண்ணீர், உரம் அவசியம்; விதைத்தலில் இருந்து பராமரிப்பு வரை சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால், வீட்டில் புடலங்காய் விளைவிக்கலாம்தேவையான பொருட்கள்: தரமான புடலை விதைகள் (நல்ல இரகங்களைத் தேர்ந்தெடுக்கவும்).ஆழமான மற்றும் பெரிய தொட்டிகள் அல்லது பை (பால் பாக்கெட்டுகள் பயன்படுத்தலாம்).செம்மண், மண்புழு உரம், தேங்காய் நார் கழிவு கலந்த கலவை.கொடி படர கயிறுகள் அல்லது பந்தல் அமைப்பு. பயிர் செய்யும் முறை: விதைகளை வெயிலில் உலர்த்தி, முதல் நாள் இரவில் ஊறவைத்து, பின் ஈரப்பதமான மண்ணில் 1-2 அங்குல ஆழத்தில் நடவும்.தொட்டியின் அடியில் நீர் வெளியேற துளைகள் போட்டு, மண் கலவையை நிரப்பவும்.விதைத்தவுடன் சிறிது நீர் தெளித்து, மண் காயாமல் பார்த்துக்கொள்ளவும்.தினமும் 5-6 மணி நேரம் வெயில் படும் இடத்தில் வைக்கவும்.மண் காய்ந்ததும் நீர் ஊற்றவும். அதிக நீர் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.செடி வளர்ந்ததும் மண்புழு உரம், சாம்பார் தூள், அல்லது பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களை இடலாம்.செடி வளர ஆரம்பித்ததும், கொடிகளைப் பந்தல் அமைப்பில் ஏற்றி விடவும்.சில மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும்.இளசாகவும், நீளமாகவும் இருக்கும்போதே பறித்து பயன்படுத்தலாம். பூச்சிகள் தாக்குதல் இருந்தால், இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.சரியான பராமரிப்பு, நல்ல விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

Jan 20, 2026

மாடித் தோட்டத்தில் பிரம்மகமலம்பூ செடி வளர்ப்பது எப்படி?

பிரம்ம கமலம் செடி சுமார்5 முதல்10 செ.மீ உயரம் வரை வளரக்கூடிய செடியாகும். இது ஒருவகையான ஹெர்மாஃப்ரோடைட் மூலிகை செடி ஆகும். இது அதிக விலை உயர்ந்த செடியாகும். பிரம்ம கமலம் செடி விஷ்ணு மற்றும் சிவனுக்கு சாற்றப்படும் ஆன்மிக மலராகும். இந்த செடி இரவில் பூத்து  காலையில் உதிரும் தன்மையை உடையது. இந்த வகை செடிக்கு அறிவியலில் சௌசுரிய ஒப்வல்லட்டா என்ற மற்றோரு பெயரும் உண்டு. இது அதிகமாக இந்திய, பூட்டான்,நேபாளம், பாகிஸ்தான்,சீனா மற்றும் இமயமலை பகுதிகளில் காணப்படும். இந்த பூவில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. பிரம்ம கமலம் ஒரு புனித மலராக கருதப்படுகிறது. மாடித்தோட்டம் பிரம்ம கமலம் சாகுபடி செய்ய செம்மண் ஒரு பங்கு தேவை. நீங்கள் அதை ஒரு பக்கெட்டில் வைத்தால் அதில் வடிகால் வசதிக்கு துளைகள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.இதில் செம்மண் உடன் தென்னை நார்க்கழிவு மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை சமமாக கலந்து வைக்க வேண்டும்.பிரம்ம கமலம் செடி கிடைக்கும் இடம்:பிரம்மகமலம்செடிநர்சரிகார்டன்மற்றும்ஆன்லைன்விற்பனையாளர்கள்மற்றும்சமூகஊடகங்களிலும்விற்பனைசெய்யபடுகின்றன. மேலும், இந்தவகைசெடிகளைஉள்ளூர்மக்கள்விற்பனைசெய்வதையும்பார்க்கலாம்.விதைத்தல்:மாடித்தோட்டம் பிரம்ம கமலம் சாகுபடி பொறுத்தவரை செடியை மையத்தில் நடவு செய்ய வேண்டும். அகலமானதாக இருந்தால் இரண்டு செடிகள் வரை நடவு செய்யலாம்.நீர் பாசனம்:பிரம்ம கமலம் ஒரு சதைப்பற்றுள்ள தாவர செடியாகும். இந்த வகை செடிக்கு அதிகம் தண்ணீர் தேவைபடாது. வாரம் 3 முறை மட்டும் மண்ணின் தன்மையை பொறுத்து தாவரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடியில் தண்ணீர் தேங்க விடாமல் வடிகால் வசதி செய்யுமாறு வைத்துக்கொள்ள வேண்டும். பிரம்ம கமலம் செடியை சூரிய ஒளி படாமல் மறைமுகமாக வளர்க்க வேண்டும். உரங்கள்:பிரம்ம கமலம் செடிக்கு மண்புழு உரம், மாட்டு சாணம் மற்றும்DAP, சமையலுக்கு பயன்படுத்தும் கழிவுகள் போன்ற உரங்களை மாதம் ஒரு முறை அளிப்பதன் மூலம் செடியின் ஆரோக்கியதிற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.நோய் தாக்குதல் :பிரம்ம கமலம் செடியில் மாவு பூச்சி,அஃபிட்ஸ் போன்றவற்றில் இருந்து செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக்கொல்லியான வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சித்தாக்குதல் ஏற்படாமல் செடியை பாதுகாக்க முடியும்.பூக்கும் காலம்:பிரம்ம கமலம் செடி மழைக்காலத்தில் பூக்ககூடிய தாவரமாகும். இது ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த வகை பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கும் செடி இரவில் பூத்து காலையில் உதிரும் தன்மையை கொண்டுள்ளது. இந்த பூ பூக்கும்போது அதிக நறுமணத்தை கொண்டிருக்கும். பிரம்ம கமலம் மொட்டுக்கள் விரிய சுமார்  2 மற்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது.

Jan 13, 2026

மாடி தோட்டத்தில் பிரண்டை வளர்க்க.....

பிரண்டை என்பது மூலிகை தாவரமாகும். இது எல்லா சீசனிலும் தழைத்து வளர கூடிய ஒரு வகை புதர் செடியாகும். எனவே நீங்கள் எந்த சீசனியிலும் பிரண்டையை பயிரிடலாம். இது கிராம புறங்களில் அதிகமாக பரந்து வளரக்கூடியது. இது நம் உடலில் ஏற்பட கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.பிரண்டைவளர்க்க தேவைப்படும்GrowBags அல்லது மண் தொட்டி,மண்,மண்புழு உரம் அல்லது மாட்டு சானம்.முதலில் பிரண்டைசெடிநடுவதற்குஉங்கள்வீட்டுபகுதிகளில்உள்ளகாய்கறிகடையில் முற்றிய பிரண்டையை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.பிறகு உங்கள் வீட்டு பகுதியில் கிடைக்கக்கூடிய மண்ணை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மண்புழு உரம் அல்லது மாட்டு சாணம் சேர்த்துகலந்துகொள்ளுங்கள்.இப்போது 5கணுக்கள் அளவிற்கு உள்ள முற்றிய பிரண்டையை எடுத்து கொள்ளுங்கள். பிரண்டையின்அடிப்பகுதியில்உள்ள கணுவின் கீழ் பகுதியை சிறிதளவு வெட்டி விடுங்கள்.பிறகு ஒரு மண் தொட்டி அல்லது Grow Bags எடுத்து, அதில்கலந்துவைத்துள்ளமண்உரத்தைநிரப்பிகொள்ளுங்கள். சமமானஅளவிற்குநிரப்பியதும்முற்றிய பிரண்டையை2கணுக்கள் மண்ணிற்குள் புதையும் படி குழிபறித்து பதித்து கொள்ளுங்கள்.இப்போது அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாடியின் சிறிது நிழலான பகுதியில் வைத்து கொள்ளுங்கள். பிரண்டைசெடி துளிர் விடும் வரை தண்ணீர் விட வேண்டும்.பிரண்டையை பதித்த 20 அல்லது25 நாட்களிலே நன்றாகதுளிர்விட்டுவளரஆரம்பித்துவிடும்.பிரண்டை செடிக்கு மாதம் ஒரு முறை நன்கு மக்கிய சாணம் உரம் மற்றும் மண்புழு உரம் போட வேண்டும். நம் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய மூலிகை செடியான பிரண்டை செடி.

Jan 06, 2026

முல்லைப்பூ செடியை வளர்க்க....

முல்லைப்பூ செடியை வளர்க்க, சரியான மண்ணைத் தேர்வுசெய்து, செடிக்குத் தேவையான நீர் மற்றும் உரங்களை அளித்து, பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டும். மேலும், செடியின் வளர்ச்சிக்கு ஏற்ப அதனை வெட்டி விடுவதும் (trimming), சரியான வெளிச்சம் கிடைப்பதும் அவசியம். வளமான மண் மற்றும் மணல் கலந்த மண்ணைப் பயன்படுத்துவது நல்லது.முதலில் செம்மண் அல்லது உங்கள் வீட்டு பகுதிகளில் கிடைக்க கூடிய மண் வகைகளில்  எதாவதுஒன்றைஎடுத்துகொள்ளுங்கள். அதனுடன் மாட்டு எருது அல்லது ஆட்டு எருது, மக்கிய தேங்காய் நார், இலை தழைகள் போன்றவற்றைகலந்துகொள்ளுங்கள்.இதனை உங்கள் செடிக்கு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கொடுங்கள்.செடி நடும் போது, சரியான இடைவெளியுடன் நடுவது முக்கியம். செடிகளுக்கு இடையே சுமார் 8 அடி இடைவெளி விட வேண்டும். முல்லை செடிக்கு தினமும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இது சூரிய ஒளியில் தான் நன்றாக வளரும் எனவே அதற்கேற்ப தண்ணீரும் முல்லை செடிக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து சீரான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.. முல்லை செடியில்உள்ள கிளையை வளர வளர வெட்டி விட வேண்டும். கிளைகளைவெட்டாமல்அப்படியேவிட்டுவிட்டால்செடிமட்டும்தான்காடுபோல்வளரும். அதில்செடிகள்பூக்கும்தன்மைகுறைந்துவிடும்.நீங்கள்செடியின்கிளைகளைவெட்டிவிட்டால்தான்கிளைகள்இரண்டாகபிரிந்துஅதிகமொட்டுகள்வைக்கதொடங்கும்.செடிகளை குறிப்பிட்ட அளவு உயரத்தில் வெட்டிவிட வேண்டும்.வீட்டில் இருக்கும் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கழிவுகளை முல்லை செடிக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் உங்கள் முல்லை செடி வேகமாக மொட்டுகள் வைக்க தொடங்கும்.அதுமட்டுமில்லாமல் வாழைப்பழ தோலில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே வாழைப்பழ தோலை அரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முல்லை செடிக்கு கொடுக்கலாம். இதனை நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.சாம்பலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாதத்திற்கு ஒருமுறை சாம்பல் கரைசலை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.மேலே குறிப்பிட்டுள்ள இந்த முறைகளை எல்லாம் முல்லை செடிக்கு கொடுத்து வந்தீர்கள் என்றால் நீங்கள் எதிர் பார்க்காத அளவிற்கு முல்லை செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்.காட்டுமல்லி, வனமல்லி, ஊசிமல்லி, பிடவம், மஞ்சள் முல்லை, வெள்ளை முல்லை, ஜாதி முல்லை, சந்தன முல்லை என்ற வகைகள் இருக்கிறது.மாலை 6 மணி முதல் முதல் மெதுவாக மொட்டு விரிவடைந்து பூ மலரும்.இரவு 8 மணி முதல் 12 மணி வரை பூ முழுவதுமாக மலரும்.காலை 4 மணி முதல் 6 மணி வரை மலர்ந்த பூக்கள் அதிகளவில் மணம் வீசும்.  .  காலை 7 மணிக்கு பிறகு பூக்கள் மெதுவாக வாடத் தொடங்கும்.

Dec 30, 2025

சிறுகுறிஞ்சான் செடி (சர்க்கரைகொல்லிசெடி)

சிறுகுறிஞ்சான்செடிகள்தமிழ்நாட்டின்பலபகுதிகளில்காணப்படுகின்றன.இவைபொதுவாககாடுகள்,சமவெளிகள்,மற்றும்சமவெளிகாடுகள்போன்றஇடங்களில்வளருகின்றன.சர்க்கரைகொல்லிசெடி(sirukurinjan) வளர்வதற்குதொட்டிசற்றுஅகலமானதாகஇருந்தால்நல்லது.சர்க்கரைகொல்லிசெடி (sirukurinjan)வளர்ப்பதற்காகபைகளில்மண்நிரப்பும்போது,பையின்நீளத்தில்ஒருஅங்குலத்துக்குக்கீழ்இருக்குமாறுநிரப்பவேண்டும், முழுமையாகநிரப்பக்கூடாது.இதில்அடியுரமாகஒருபங்குமண்,ஒருபங்குதென்னைநார்க்கழிவு,ஒருபங்குஇயற்கை  உரம் எனஇந்தமூன்றையும்கலந்துவைக்கவேண்டும்.இந்தகலவைதயாரானதும் 10 நாட்கள்கழித்து, கலவைநன்குமக்கியதும்விதைப்பைமேற்கொள்ளவேண்டும்.விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும்.அதேபோல் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும்.விதைகள் முளைத்த பின் நீக்கி விடலாம். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.பைகளில் நேரடையாகவே துண்டுச் செடிகளை நடவு செய்யலாம். தொட்டியின் அளவைப் பொறுத்து நடவு செய்ய வேண்டும்.நாற்றுகள்நட்டவுடன்பூவாளிகொண்டுதண்ணீர்தெளிக்கவேண்டும்.பின்தினமும்காலைஅல்லதுமாலைவேளைகளில்தண்ணீர்தெளிக்கலாம்.சிறுகுறிஞ்சான்செடிகளைக்காக்கும்இயற்கைபூச்சிக்கொல்லியானவேப்பஎண்ணையைமாதம்ஒருமுறைதெளிக்கவேண்டும்.சமையலறைகழிவுகளைமட்கச்செய்துஉரமாகபோடலாம்.மாதம்ஒருமுறைமண்புழுஉரம்இடவேண்டும். இயற்கைஉரங்களைஇடுவதால்செடிகளின்வளர்ச்சிசீராகஇருக்கும்.சிறுகுறிஞ்சான்செடி(sirukurinjan) பாதுகாப்பு முறைபொறுத்தவரைவாரம்ஒருமுறையாவதுசெடியைச்சுற்றிஅடிமண்ணைக்கொத்திவிடவேண்டும்.வேப்ப இலைகளை நன்குகாயவைத்துத்தூள்செய்துகொள்ளவேண்டும். இந்தத்தூளைச்சிறுகுறிஞ்சான்செடிஒன்றுக்குஒருபிடிவீதம், சிறுகுறிஞ்சான்செடியின்வேர்பகுதியில்போட்டுநன்குகொத்திவிடவேண்டும். இதுவேஅடிஉரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும்:சிறுகுறிஞ்சான்செடிநீண்டநாள்தாவரம்என்பதால்,தங்களுக்குதேவைப்படும்போதுசெடியில்இருந்துபறித்துபயன்படுத்திகொள்ளலாம்.

Dec 23, 2025

பூச்செடிகளை வளர்க்கும் வழிமுறைகள்.

பூச்செடிகளை வளர்க்க, நல்ல தரமான, நிறைய மொட்டுகளுடன் கூடிய செடிகளை நர்சரியில் இருந்து வாங்க வேண்டும். செடிகளை கவாத்து செய்வது, பக்கக்கிளைகள் வர உதவுகிறது. உரங்கள் மற்றும் இயற்கை கரைசல், அதாவது பிண்ணாக்கு கரைசல், பஞ்சகாவ்ய, அமிர்த கரைசல் மற்றும் புளித்த தயிர் மற்றும் தேங்காய் கலவை போன்றவற்றை வாரந்தோறும் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். செடியை தேர்வுசெய்தல்:நிறைய மொட்டுகள்மற்றும்ஆரோக்கியமானஇலைகளுடன்இருக்கும்நல்லசெடியைநர்சரியில்இருந்துதேர்வுசெய்யவும். மண் கலவை:செடியை நடுவதற்கானமண் 15x15 அளவில்இருக்கவேண்டும். கவாத்து செய்தல்:செடிகளை கவாத்துசெய்வதன்மூலமாகஅதிகமானபக்கக்கிளைகள்உருவாகி, அதிகபூக்கள்பூக்கஉதவும். உரமிடுதல்:பிண்ணாக்கு கரைசல், மீன்அமினோஅமிலம், பஞ்சகாவ்ய, அமிர்தகரைசல்போன்றஇயற்கைகரைசல்களைபயன்படுத்தலாம்.புளித்த தயிர் மற்றும்தேங்காயைஅரைத்துசெடிகள்மீதுதெளித்துவந்தால், ஒரேமாதத்தில்பூக்கள்பூக்கும். தொடர்ச்சியான பராமரிப்பு:வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்குஒருமுறைஇந்தஇயற்கைகரைசல்களைசெடிகளுக்குகொடுக்கவேண்டும்.தொடர்ந்து சரியான பராமரிப்புசெய்வதன்மூலம், செடிகள்பூத்துகுலுங்கும். 

Dec 23, 2025

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கான சில டிப்ஸ்!!!

 வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணிரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம் .செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம் சல்பேட் இரண்டையும் இந்த உப்பு கொடுக்கும்.முட்டை ஓடுகளை காய வைத்து நன்கு தூளாக்கி போட வேண்டும் இதில் இருக்கும். கால்சியம் செடிகளுக்கு நல்ல உரமாகும்.4 ஸ்பூன் வினிகர் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊற்றவேண்டும்.அலங்கார மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரை செடிகளுக்கு ஊற்றலாம் செடிகள் செழிப்பாக வளரும்.சாம்பல் சிறந்த உரம் கிடைத்தால் போடலாம்.ஓக் மர இலைகள் அல்லது வேப்பமர இலைகளை வாளியில் உள்ள போட்டு வெயிலில் வைக்கவேண்டும். நீரின் நிறம் நன்றாக மாறியதும் குளிர வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.காய்கறி கழிவுகளை செடியின் அடியில் போட்டு வரலாம் .

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's